8 April 2014

டிப்ளமோ படித்தவர்களுக்கு அணுசக்தி துறை வேலை!

ஹைதராபாத் மற்றும் தூத்துக்குடியில் இயங்கி வரும் அணுசக்தி துறையில் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிரெய்னி (category 1) பணிக்கு மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ  பெற்றிருக்க வேண்டும். இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 13 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 4 காலியிடங்களும், பொதுப் பிரிவினருக்கு 77 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 6 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள்  18 வயதுக்குக் குறையாமலும் 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும்,  தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

டிரெய்னி (category 2) பணிக்கு ஃபிட்டர், டர்னர், வெல்டர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கார்பெண்டர், பிளம்பர், ரிக்கர், லேப் டெக்னீஷியன், கெமிக்கல் பிளாண்ட் ஆபரேட்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 152 காலியிடங்களும், பொதுப் பிரிவினருக்கு 208 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 183 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு  ஏப்ரல் 14-ஆம்  தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 22 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.  ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும்,  தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/- (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது).

விண்ணப்பிப்பது எப்படி?:
1. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் தற்போதைய புகைப்படம், கையெழுத்து, வயதுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழையும் ஸ்கேன் செய்து கொள்ளவும்.
2. இணையதளத்திற்குச் சென்று செலானை பிரிண்ட் அவுட் எடுத்து வங்கியில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
3. பின்னர், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.04.2014
விவரங்களுக்கு: www.nfcrecruitment.in