30 November 2013

பொறியியலில் எந்த பாடத்தை தேர்வு செய்யப்போகிறீர்கள்?

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

    பொறியியல் படிக்க விரும்புவோர் பாடப் பிரிவைத் தேர்வு செய்வது சவாலான விஷயம். பொறியி யலில் மட்டும் 40 பாடப் பிரிவுகள் உள்ளன. அவை அனைத்துமே சிறப்பானவைதான். ஆனாலும், நாட்டின் வளர்ச்சியை தொலைநோக்கில் கணிக்கும்போது இ.இ.இ., சிவில், கம்ப்யூட்டர் சார்ந்த பாடப் பிரிவுகள் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் பிரகாசிக்கச் செய்யும் என்றே தெரிகிறது.
     இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் எரிசக்தி வளர்ச்சி அபரிதமாக உள்ளது. எரிசக்தி மூலமே தொழில் வளம் பெருகும் என்பதால் காற்றாலை, சூரிய எரிசக்தி, அணுசக்தி என 500-க்கும் மேற்பட்ட திட்டங்களை அரசு வைத்துள்ளது. எனவே, இ.இ.இ. தேர்வு செய்யும் மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.
     சிவில் தேர்வு செய்வோர் நான்கு ஆண்டு பட்டப்படிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் பட்ட மேற்படிப்பும் படிக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டுமானத் தொழில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. சீனாவில் 15 மாடிக் கட்டிடத்தை மூன்றே நாட்களில் கட்டி முடிக்கிறார்கள். இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை கற்றுத்தேர சிவில் பட்ட மேற்படிப்பு முக்கியம்.
பிரமாண்டமான அடுக்குமாடிகள், பாலங்களுக்கான அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பம் தொடர்பான ஜியோ டெக்னாலஜி, கடலுக்குள் கட்டுமானம் அமைப்பது தொடர்பான ஓசோன் இன்ஜினியரிங், பூகம்பத்தை தாக்குப்பிடிக்கும் கட்டுமானம் தொடர்பான வைப்ரேஷன் அனாலிசிஸ் அண்டு எர்த்குவேக் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, நவீன கட்டுமான வடிவமைப்புகளை கற்றுத்தரும் அட்வான்ஸ் ஸ்டக்சரல் இன்ஜினியரிங், பழைய அடுக்குமாடிக் கட்டிடங்கள், பாலங்களின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் இடம் பெயர்ப்பது தொடர்பான சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் அண்டு கன்ஸ்டிரக்டிங் இன்ஜினியரிங் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது.
     தகவல் தொழில்நுட்பத் துறை தொய்வில் இருப்பதாக கூறப்படுவது தவறு. டி.எல்.எஸ்., சி.டி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்கள் 80% வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. வரும் பத்து ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை கட்டாயம் இன்னும் அதிக வளர்ச்சி காணும். கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பட்டப் படிப்புகளில் புதிய தொழிற்கல்வியை தெரிந்து வைத்துகொள்வதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதிக்கலாம்.
     பொதுவாகவே பொறியியல் பாடப் பிரிவை தேர்வு செய்வோர் அன்றைய நிலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அடுத்த பத்தாண்டுகளை சீர்நோக்க வேண்டும். குறிப்பிட்ட பாடப் பிரிவைத் தேர்வு செய்யும்போது, அத்துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்களிடம் ஆலோசிக்க வேண்டும். சிறப்பாக படிப்பது எந்த அளவு முக்கியமோ, அதேபோல உங்களது பாடப் பிரிவை தேர்வு செய்வதும் முக்கியம்.

29 November 2013

பிஎஸ்சி, பிஇ மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கோடைகாலப் பயிற்சி!

என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டப் படிப்பு மாணவர்கள் கோடை காலத்தில் ஆராய்ச்சிப் பயிற்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது கர்நாடகத்தில் ஜக்கூரில் உள்ள ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச். இந்த இரண்டு மாத பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

இன்றைய சூழ்நிலையில் வேலைவாய்ப்புக்கு கல்லூரியில் படிக்கும் பட்டப் படிப்புகளில் பெறும் மதிப்பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும்கூட, மாணவர்களின் திறமை, ஆய்வு, கருத்தரங்குகளில் கட்டுரைகள் சமர்ப்பித்தல், புராஜக்ட், சாஃப்ட் ஸ்கில்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்யும் நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன. கல்லூரிப் படிப்பைத் தாண்டி மாணவர்கள் எந்தவிதமான பயிற்சி பெற்றிருக்கிறார்கள் அல்லது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியம். அதனால் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கோடை கால விடுமுறையில் தொழில் நிறுவனங்களிலோ அல்லது ஆய்வு நிறுவனங்களிலோ இன்டர்ன்ஷிப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டப் படிப்பு மாணவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்தால், கோடை காலத்தில் உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளலாம். கர்நாடகத்தில் பெங்களூரை அடுத்த ஜக்கூரில் உள்ள ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இது.

பொறியியல் கல்லூரிகளிலும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் படிக்கும் திறமையான, ஆராய்ச்சியில் ஆர்வமிக்க மாணவர்கள் இந்த கோடை காலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, ராஜீவ்காந்தி ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பயிற்சிக்கான ஃபெல்லோஷிப்களை ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச் வழங்குகிறது. கோடை காலத்தில் இரண்டு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சியில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், இந்தியாவில் பல்வேறு அறிவியல் மையங்களில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து லைஃப் சயின்சஸ், மெட்டீரியல் சயன்சஸ், கெமிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், என்ஜினீயரிங் சயின்சஸ், கணிதம், அட்மாஸ்பெரிக் சயின்சஸ் ஆகிய துறைகளில் தங்களுக்கு விருப்பான துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும். அத்துடன் போக்குவரத்து செலவுத் தொகையும் வழங்கப்படும். இந்தக் கோடை காலப் பயிற்சிக்கு 80 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்களின் திட்ட அறிக்கையின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு ராஜீவ்காந்தி சயின்ஸ் டேலண்ட் ரிசர்ச் ஃபெல்லோஷிப் வழங்கப்படும்.


இந்த ஃபெல்லோஷிப் கோரி யார் விண்ணப்பிக்கலாம்?

பத்தாம் வகுப்பிலும் பிளஸ் டூ வகுப்பிலும் கணிதத்திலும் அறிவியலிலும் 80 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இளநிலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிஎஸ்சி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் தற்போது படித்து வருபவர்களும் பிஎஸ் படிப்பில் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் படித்து வருபவர்களும் பிஇ, பிடெக் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு பிஇ, பிடெக் படித்து வருபவர்களும் முதல் ஆண்டு எம்எஸ்சி படித்து வருபவர்களும் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை படித்து வருபவர்களும் லைஃப் சயின்சஸ் மற்றும் கணிதப் பிரிவுகளின் கீழ் ஆய்வுப் பயிற்சியில் ஈடுபட விண்ணப்பிக்கலாம்.

பிசிக்கல் சயின்சஸ், என்ஜினீயரிங் சயின்சஸ், அட்மாஸ்பெரிக் சயின்சஸ் ஆகிய துறையில் ஆய்வுப் பயிற்சியில் ஈடுபட விரும்பும் மாணவர்கள், பிஎஸ்சி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படித்து வர வேண்டும். பிஎஸ் படிப்பில் இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களும் பிஇ, பிடெக் படிப்புகளில் முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களும் எம்எஸ்சி படிப்பில் முதலாண்டில் படித்து வரும் மாணவர்களும் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் முதலாண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை படித்து வரும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மெட்டீரியல் சயின்சஸ், கெமிக்கல் சயின்சஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் முதல் ஆண்டு எம்எஸ்சி படிப்பில் படித்து வர வேண்டும். ஏற்கெனவே, இந்தப் பயிற்சித் திட்டத்தின்கீழ் கோடை காலப் பயிற்சி பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

எந்தத் துறையில் ஆராய்ச்சி செய்ய விருப்பம் என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிடுவதுடன் கடிதத்தின் உறையின் மேற்புறத்திலும் குறிப்பிட வேண்டியது அவசியம். இந்த விண்ணப்பத்துடன் உங்களைப் பரிந்துரைக்கும் இரண்டு பேராசிரியர்களின் சீலிட்ட அறிக்கைகளை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதிகளையும் இணைத்து அனுப்ப வேண்டும். ஏற்கெனவே, இந்தப் பயிற்சித் திட்டத்தின் கீழ் சேர்ந்து பயிற்சியை முடித்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கோடை காலப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், இதற்கான விண்ணப்பங்களைக் கேட்டு டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.அதாவது, 10 ரூபாய் தபால் தலையுடன் சுயவிலாசம் எழுதிய 16து25 நீளமுள்ள உறையுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்:

The Coordinator
Summer Research Fellowships Programme
Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research
Jakkur P.O. Bangalore 560 064


இணையதளத்திலிருந்து  டிசம்பர் 12-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். இந்தக் கோடைகால ஆராய்ச்சிப் பயிற்சியில் சேருவதற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் வெளியிடப்படும். இந்தக் கோடை கால ஆய்வுப் பயிற்சிக்கு 80 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எதிர்காலத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய இந்தக் கோடை கால ஆராய்ச்சிப் பயிற்சி ஓர் அரிய வாய்ப்பு. நழுவவிடாதீர்கள்!

விவரங்களுக்கு: 
http://www.jncasr.ac.in/fe/srfp.php
































BHEL Bangalore Recruitment 2013 for 38 Project Engineers, Supervisor Posts

BHEL Bangalore Recruitment 2013 – Apply Online for 38 Project Engineers, Supervisor Posts: Bharat Heavy Electronics Limited (BHEL), Electronics Division, Bangalore has issued notification for recruitment of the Project Engineers/ Supervisors (Diploma Holders in Engineering) to be engaged on fixed tenure basis for a maximum period of two years for Electronics Division at Bangalore or any where in India at their project sites. Eligible candidates can apply online from 30-11-2013 to 21-12-2013. Other details like age limit, educational qualification, selection process and how to apply are given below….

BHEL Bangalore Vacancy Details:

Total No. of Posts: 38

Name of the Posts:
I. Project Engineers:
1. Civil: 09 Posts
2. Electrical/ Electronics: 03 Posts
3. Mechanical: 03 Posts
II. Project Supervisors:
1. Civil: 07 Posts
2. Electrical/ Electronics: 12 Posts
3. Mechanical: 04 Posts

Age Limit: Candidates upper age limit should not exceed 33 years as on 01-11-2013. Age relaxation will be applicable as per the rules.

Educational Qualification: Candidates should possess BE/BTech in the field of Electrical/ Electronics/ Communication/ Instrumentation/ Mechanical/ Civil with at least 60% in aggregate of all the years/ semesters from recognized university/ institution for Post No.I and Diploma in the field of Electrical/ Electronics/ Communication/ Instrumentation/ Mechanical/ Civil with at least 60% in aggregate of all the years/ semesters from recognized university/ institution for Post No.II.

Selection Process: Candidates would be selected based on their performance written test and / or in interview.

Processing Fee: Candidates belongs to General and OBC category have to pay the non refundable processing fee of Rs.200/- at any of the branches of State Bank of India, in to Power Jyothi A/c No.31467498356 @ Chandra Layout, Bangalore-40 in favour of Bharat Heavy Electricals Limited, Electronics Division, Bangalore.

How to Apply: Eligible candidates can apply online through the website www.bheledn.com from 30-11-2013 to 21-12-2013. After submission of online application, take the print of application form with the acknowledgement No. and send it along with challan copy (BHEL Copy) and self attested copies of the relevant certificates, enclosed in an envelope super scribed as “Application for Appointment as Project Engineer on Fixed Tenure Basis” or “Application for Appointment as Project Supervisor on Fixed Tenure Basis”, should reach to Deputy General Manager (HR), Bharat Heavy Electricals Limited, Electronics Division, P.B No. 2606, Mysore Road, Bangalore-560026 on or before 28-12-2013.

Important Dates:
Starting Date of Online Submission: 30-11-2013.
Close Date of Online Submission: 21-12-2013.
Last Date of Receipt of Applications: 28-12-2013.
Last Date of Receipt of Hard Copies from far Flung Areas: 04-01-2014.
For more details regarding age limit, educational qualification, selection process and how to apply and other, click on the following link….

Click here for more details

Guru Ghasidas Vishwavidyalaya Recruitment 2013 – SRF & JRF Posts

Guru Ghasidas Vishwavidyalaya Recruitment 2013 – SRF & JRF Posts: Department of Civil Engineering, Institute of Technology, Guru Ghasidas Vishwavidyalaya, Bilaspur has advertised notification for recruitment of SRF & JRF posts on temporary basis. Eligible candidates can send their applications on or before 23-12-2103. Other details like age limit, qualification, selection process, how to apply are given below…

Guru Ghasidas Vishwavidyalaya Vacancy Details:

Name of the Posts:
1. Senior Research Fellow
2. Junior Research Fellow

Educational Qualification: Candidates should possess M.E/ M.Tech or equivalent degree in structural Engineering/ related field for S.No.1 Post, B.E/ B.Tech or equivalent degree in Civil Engineering, Gate Score and research experience for S.No.2 Post.

Selection Process: Candidates will be selected based on their performance in interview.

How to Apply: Eligible candidates can send their applications with detailed CV, passport size photographs, attested copies of certificates to Office of Head (Attn: Dr.M.Chakradhara Rao, PI & Associate Professor), Civil Engineering Department, Guru Ghasidas Vishwavidyala, Koni, Bilaspur-495009 on or before 23-12-2013. The Soft copy of application may also send to rao.chakradhar@gmail.com.

Last Date for Submission of Application: 23-12-2013
For more details regarding age limit, qualification, selection, how to apply, pay scale and other information are available in the following link…

Click here for more details



NINL Recruitment 2013 – Walk in for Mould Operator Post

Neelachal Ispat Nigam Limited (NINL) has advertised notification for the recruitment of Mould Operator Posts. Eligible candidates can attend for interview on 09-12-2013. Information regarding age limit, education qualification, selection process and  how to apply are given below….

NINL Vacancy Details:

Total No. of Posts: 15

Name of the Post: Mould Operator

Age Limit: Candidates maximum age should be 38 years as on 01-12-2013. Age upto 5 years will be relaxed for highly experience Candidates.

Educational Qualification: Candidates should possess Engineer Diploma in Mechanical/ Mettalurgy with minimum 6 years of work experience in Mould Operation.

Selection Process: Candidates will be selected based on their performance in the interview.

Application Fee: Candidates have to pay the application fee of Rs. 100/- in the form of bank draft in favour of Neelachal Ispat Nigam Ltd Payable at Bhubaneswar. No Fee for SC/ ST Category.

How to Apply: Eligible and interested candidates can attend interview with applications in the prescribed format, original & Attested copies of certificates in support of age, qualification & experience at Neelachal Ispat Nigam Ltd, IPICOL Annexe Building, Janpath, Bhubaneswar-751022 on 09-12-2013.

Date of Interview: 09-12-2013

Registration Time: 09.30 AM to 11.30 AM
More details about age limit, educational qualification, selection process and how to apply and other, click on the following link…

Click here for more details

Vacancies for Diploma Holders for One Year Apprenticeship Training

Post
Technician Apprentices
Qualification
Pass in Diploma in Engineering.
Recruitment Board
Bharat Electronics Limited, Bangalore – 560 013

27 November 2013

English at Your Fingertips

British Council India has launched two programmes aimed at making English language easily accessible to rural and semi-urban folks. “English on Mobile” and “EnglishStrokes” were launched by Applied Mobile Labs Private Limited (AMLPL) and AA Edutech, respectively. British Council has partnered with the two organisations to bring to fruition the ambition to take English learning to the Indian people. While English on Mobile is a mobile phone-based product, EnglishStrokes is a web-based programme. Both courses are certified by the British Council.
“English is important,” says Rob Lynes, director of British Council India. “More than 55 per cent of websites and two-thirds of the scientific journals published in the world are in English. The purpose of this project is to make use of digital platforms to make English available to all.” Banking on an estimated 150 million Internet users and 900 million cell phone users, the programme aims at providing new and increased opportunities to young people in India, international dimensions to education and better employability through English.

English on Mobile
Branded a first-of-its-kind product, English on Mobile helps one learn spoken English over just voice and SMS. It is available in beginner, intermediate and advanced levels. “It is an interactive product with trained English teachers, and close to 3,000 people are already using it,” says Mrigank Tripathi, CEO and founder of AMLPL. “A person anywhere in India will be able to learn British Council certified content, anytime, anywhere, through a cell phone.”
You don’t need a smartphone or the Internet to make use of this course. Mr. Mrigank says that anyone can access the product and an app is not necessary as limiting the product’s availability among smartphone and Internet users would not benefit the non-users. There are retail outlets that would sell the product and people can just walk in and buy it.
The learner only needs to engage in the course content for five minutes, after which the schedule is flexible.
Currently, English on Mobile is available in Hindi-English, but will soon be available in five other languages.

EnglishStrokes
How can someone learn English through cricket, one wonders. AA Edutech had earlier launched Edustrokes, a digital learning space that incorporates learning of Math and Science with sports. Subsequently, Career Strokes was launched with the purpose of providing learning initiatives for employability and soft skills. Cricket Strokes is another arrow in the quiver of the digital education provider that offers online cricket coaching.
EnglishStrokes has the quintessential aspect of learning through fun. And to help you learn, it engages in dialogue among six virtual characters — Indie, Sohail, Sam, Matt, Maya and VJ — united by their love for cricket.
The objective of the programme is to improve one’s grasp on English, be it vocabulary, grammar, pronunciation or communication. It is an activity-based programme and uses videos, games and animation to help one learn.
Former Indian cricketer Kris Srikkanth, who is the founder-director of AA Edutech, credits his son Adithyaa Srikkanth for being the brain behind the initiative. “The ideology when we started this project was to change the way people were learning and I think we’re getting there,” says Adithyaa.
“We are content providers. We design it in an innovative manner and that’s what sets us apart. There is a need to raise the standards of education and we have managed to combine the two components — education and sports — and incorporate it into the content.”
“One of the most powerful languages is sports. And here in India, the most powerful among different sports is cricket,” says Martin Davidson, CEO, British Council. “Cricket is a language that the nation ‘speaks’ and what better way to learn English than through cricket.” Mr. Davidson went on to say that quality education and learning English is necessary as the chances of getting a good job and future prospects are better. The idea is to breach the barriers that keep people in remote areas in India from learning English. “There is a huge demand for learning English and we are simply responding to this demand.”

Englishstrokes is available at www.englishstrokes.com and www.t20learning.com
On English on Mobile at www.englishonmobile.in

26 November 2013

வெளிநாடுகளில் படிக்க கல்வி உதவித்தொகை

ஜப்பானில் பயிற்சி பெற உதவித்தொகை
ஜப்பானில் உள்ள மிகப்பெரிய மின்னணுத் தொழில் நிறுவனமான ஹிட்டாச்சியில், இந்திய மாணவர்கள் உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி பெறலாம். இந்த வாய்ப்பை, ‘இந்து’ நாளிதழுடன் இணைந்து ஹிட்டாச்சி நிறுவனம் வழங்குகிறது.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் பி.இ. அல்லது பி.எஸ்சி. (என்ஜினீயரிங்) பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓர் ஆண்டு முன் அனுபவம் இருந்தால், கூடுதல் தகுதியாகக் கருதப்படும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி முப்பது வயதிற்குள் இருக்க வேண்டும்.  கடந்த ஆண்டுகளில் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

ஹிட்டாச்சி நிறுவனத்தில் ‘இன்பர்மேஷன் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் சிஸ்டம்ஸ்’, ‘பவர் சிஸ்டம்ஸ்’, ‘சோஷியல் இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சிஸ்டம்ஸ்’, ‘டிரான்ஸ்போர்ட்டேஷன் கண்ட்ரோல் சிஸ்டம் என்ஜினீயரிங் (ட்ரென் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்)’ போன்ற ஏதேனும் ஒரு பிரிவில், அடுத்த ஆண்டு ஜூலையிலிருந்து ஆறு மாதங்கள் பயிற்சி மேற்கொள்ள முடியும்.

இந்த உதவித் தொகை பெற தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு விமான டிக்கெட், தங்குவதற்கான இடம், உணவு வசதிகள் போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுதவிர ஜப்பான் நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் பயணச் செலவு மற்றும் சோந்தச் செலவுகளுக்கும் உதவித்தொகை அளிக்கப்படும்.

இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இந்தியாவில் உள்ள, ‘இந்து’ பத்திரிகையின் அனைத்து அலுவலகங்களிலும் கிடைக்கும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31, 2013.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: THE HINDU - HITACHI TRAINING SCHEME, THE HINDU, 859 & 860, Anna salai, Chennai - 600 002.


டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப்
பிரதமர் மன்மோகன் சிங் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜான் கல்லூரியில் டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்கீழ் அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளலாம். இந்த உதவித் தொகை பெறத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, படிப்புக் கட்டணம், போக்குவரத்து கட்டணம், மாதந்திர செலவுத் தொகை, பிரிட்டன்  செல்வதற்கு விசா கட்டணம் வழங்கப்படும்.

இந்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே கருத்தரங்குகள், ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டிருப்பது விரும்பத்தக்கது. விமான பொறியியல் மற்றும் எரிசக்தித் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு முன்பு பிரிட்டனில் படிக்காதவராகவும், பிரிட்டிஷ் அரசின் கல்வி உதவித்தொகை பெறாதவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். நன்கு ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆராய்ச்சி வழிகாட்டுதலுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரின் ஒப்புதல் பெற்றிருக்கும் பட்சத்தில் எளிதில் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இத்திட்டத்தின்கீழ் தேந்தெடுக்கப்படுகிறவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தனது ஆய்வுப் பணியைத் தொடங்கலாம். இந்தக் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் வருகிற ஜனவரி 15-ஆம் தேதிக்குள் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.admin.cam.ac.uk/students/gradadmissions/prospec/


ஆக்ஸ்போர்டு இந்திரா காந்தி பட்டப்படிப்பு உதவித்தொகை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள சோமெர்வெல்லி கல்லூரியில் மருத்துவ அறிவியல், தத்துவம், சர்வதேச நாடுகளுக்கான உறவு மற்றும் அரசியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்பு படிக்க ஆக்ஸ்போர்டு இந்திரா காந்தி பட்டப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவி பெற விரும்பும் மாணவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். இந்த உதவித் தொகை பெறும் மாணவர்களின் கல்லூரிக் கட்டணம், மாதாந்திரச் செலவுக்கான தொகை என மொத்தம் 13,726 யூரோக்கள் வழங்கப்படும். மாணவர்களின் படிப்புத் திறமையைப் பொருத்து உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். பிரிட்டனில் படிப்பை முடித்தவுடன் இந்தியாவிற்கு வந்துவிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.1.2014. ஜனவரியில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் மார்ச் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: https://uni-of-oxford.custhelp.com/app/ask

கணித மாணவர்களுக்கு மாதம் ரூ. 16 ஆயிரம் ஸ்காலர்ஷிப்!

கணிதத்தில் பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்குகிறது மத்திய அரசு கல்வி நிறுவனம். இந்த உதவித்தொகை பெற விரும்பும்  பிஏ, பிஎஸ்சி, பிடெக், பிஇ, எம்ஏ, எம்எஸ்சி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது

த்திய அரசின் அணுசக்தித் துறையினால் தொடங்கப்பட்டதுதான் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்மேட்டிக்ஸ். மும்பையில் 1983-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம், கணிதம் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. 2014-15 கல்வி ஆண்டில், கணிதப் பாடத்தில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் சேருவதில் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது இந்த அமைப்பு.

இந்த உதவித் தொகையைப் பெற என்ன தகுதி இருக்க வேண்டும்?

பிஏ, பிஎஸ்சி, பிடெக், பிஇ, எம்ஏ, எம்எஸ்சி பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பிலிருந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிஎஸ்சி ஆனர்ஸ் படிப்பு மாணவர்களும் இந்தக் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் அமைப்பு நடத்தும் எழுத்துத் தேர்வை (ஸ்கிரீனிங் டெஸ்ட்) எழுத வேண்டும். வருகிற ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எழுதலாம். கணிதத்தில் முதுநிலைப் படிப்பு நிலையில் உள்ள பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டரை மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் குறுகிய விடைகளை அளிப்பதற்கான கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் தகுதி பெறும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு வினாத்தாள்கள் நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனைப் பார்த்து, இத்தேர்வு வினாக்கள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில் உள்ள மேட் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட், அலகாபாத்தில் உள்ள ஹரீஷ் சந்திரா ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், புனேயில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் ஆகிய கல்வி நிறுவனங்களில் பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும்.

மாணவர்களுக்கு எவ்வளவு உதவித் தொகை வழங்கப்படும்?

இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளில் மாதம் ரூ.16 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் இதர படிப்புச் செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். தகுதியுடையவர்களுக்கு மத்திய அரசின் விதிமுறைப்படி, வீட்டு வாடகை அலவன்ஸ் வழங்கப்படும். மொத்தம் நான்கு ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் படிப்புத் திறனைப் பொருத்து, இந்த உதவித் தொகை அடுத்த ஆண்டுக்கு நீட்டிக்கப்படும். தகுதியுடையவராக இருந்தால் இந்த உதவித் தொகை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணிதத்தில் பிஎச்டி படிக்க பதிவு செய்ய வேண்டும். எந்தக் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேருகிறாரோ, அந்தக் கல்வி நிறுவனம் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேஷனல் போர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸ் கல்வி நிலையத்துக்கு அனுப்பக் கூடாது. ஐந்து மண்டலங்களில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மாணவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி, படிப்பு விவரங்கள், தேர்வு எழுத விரும்பும் இரு மையங்கள் போன்று விளம்பர அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படி உரிய விவரங்களுடன் தனித்தாளில் பூர்த்தி செய்து புகைப்படத்தையும் ஒட்டி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்ப உறையில் ‘NBHM Ph.D Scholarship  என்று குறிப்பிட வேண்டும். அத்துடன் ரூ.5 மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையையும் இணைத்து அனுப்ப வேண்டும். பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த (மண்டலம்-5) மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்:

Prof. S. Kesavan
Institute of Mathematical Sciences,
CIT Campus
Taramani, Chennai - 600 113.
Email: kesh@imsc.res.in

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வு எழுத, தகுதி படைத்த மாணவர்களுக்கு ஜனவரி 6-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு, ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவர்கள் சம்பந்தப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும். கணக்கில் ஆர்வமிக்க மாணவர்களுக்கு அதே துறையில்  உதவித் தொகையுடன் பிஎச்டி படிக்க நல்ல வாய்ப்பு இது.

விவரங்களுக்கு:  www.nbhm.dae.gov.in

National Seminar on ModernTrends in Chemistry (MTC-2013) at Dept .of Chemistry, BIT, Trichy

Date of the Seminar: 17.12.2013 & 18.12.2013 

About the Seminar
The seminar aims at exploring the potential research areas and modern trends in Chemistry. The theme of the seminar is accomplished by focusing the challenges and issues in view to create a research ambience among the students, research scholars and faculty members. Research in the field of synthetic organic, inorganic, electrochemistry, polymers, nanoscience, sensors, catalysis, and chemical kinetics will be discussed.

24 November 2013

கல்வி உதவித் தொகையுடன் வெளிநாடுகளில் படிப்பது எப்படி?

பொன்.தனசேகரன்

ஐரோப்பாவில் செக் குடியரசில் ஜப்லோட்ரான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் விஜய ராகவன், தமிழ்நாட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை பட்டதாரி. ஐரோப்பாவில் முதுநிலைப் படிப்பையும் பிஎச்டி படிப்பையும் முழுக் கல்வி உதவித் தொகை பெற்றுப் படித்தவர். வெளிநாடுகளில் கல்வி உதவித் தொகையுடன் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு  அவரது அனுபவ ஆலோசனைகள்...

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். பிளஸ் டூ தேர்வில் 87 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதும், அமிர்தா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து படித்தேன். நான் பட்டப் படிப்பில் ரேங்க் ஹோல்டர் இல்லை. ஆனால், கல்லூரியில் படிக்கும்போது, ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது கிடையாது. ஜெர்மனியில் உயர்கல்வி படிக்கும் மாணவர் ஒருவர், எங்கள் கல்லூரியில் உரை நிகழ்த்தினார். அவரது உரையைக் கேட்டதிலிருந்து வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். இறுதியாண்டில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் எல் அண்ட் டி நிறுவனத்தில் ரூ.2.75 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை கிடைத்தது. ஆனாலும்கூட, அந்த வேலையில் சேர வில்லை. அந்த வேலையில் சேராமல், வெளிநாட்டில் மேற்படிப்புப் படிக்கச் செல்கிறேன் என்றதும், அப்போது எனது குடும்பத்தில் சிரமமான சூழ்நிலை இருந்தபோதும் அதற்கு தனது முழு சம்மத்தையும் தெரிவித்து எனது முயற்சிக்கு ஆதரவாக இருந்தவர் எனது அப்பா விஸ்வநாதன். எனது மாமா உள்பட குடும்பத்தினர் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர்.

பிரிட்டனில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் முதலில் அட்மிஷன் கிடைத்தது. ஆனால் படிப்புச் செலவுக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரை தேவைப்பட்டது. அந்த அளவுக்கு பணம் திரட்டவோ, வங்கிக் கடன் பெறவோ இயலவில்லை. டீச்சிங் அசிஸ்டெண்ட்ஷிப், கல்வி உதவித் தொகை போன்றவற்றுக்கு அங்கு சென்ற பிறகுதான் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்கள். அப்புறம் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு விண்ணப்பித்தேன். இந்தியாவிலிருந்து 3 பேருக்கு அந்த ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதில் நானும் ஒருவன். எனது மாமா, விமான டிக்கெட் வாங்கவும் கம்ப்யூட்டர் வாங்கவும் பணம் கொடுத்தார். ஒரு வழியாக, இத்தாலியில் உள்ள பாலிடெக்னிக்கோ டொரினோ கல்வி நிலையத்தில் மைக்ரோ அண்ட்நேனோ எலெக்ட்ரானிக்ஸ் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தேன். இந்த முதுநிலைப் படிப்புக்காக ஸ்விட்சர்லாந்து இபிஎஃப்எல், பிரான்சில் உள்ள ஐஎன்பிஜி ஆகிய கல்வி நிலையங்களிலும் படித்து முதுநிலப் பட்டப் படிப்பை முடித்தேன். முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் போதே, எனது புராஜக்ட் பிரசன்டேஷனை பார்த்த பேராசிரியர் ஒருவர் பிரான்சில் லியோன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேனோ டெக்னாலஜி கல்வி நிலையத்தில் கல்வி உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். அங்கு பிஎச்டி முடித்துவிட்டு தற்போது செக் குடியரசில் ஜப்லோட்ரான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பைப் படிக்க கல்வி உதவித் தொகை கிடைத்ததற்கு முக்கியக் காரணம், படிப்பைத் தவிர கூடுதலான திறமைகளை வளர்த்துக் கொண்டதுதான். அதனால்தான் பல்கலைக்கழக ரேங்க் ஹோல்டர் இல்லை என்றாலும்கூட எனக்கு உயர்கல்வி படிக்க உதவித் தொகை கிடைத்தது. நான் தனியே C,C++ போன்றவற்றையும் படித்திருந்தேன். எனது புராஜக்டையும் கவனத்துடன் செய்தேன். எனது CV, ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்ப்பஸ் ஆகியவற்றையும் கவனத்துடன் தயாரித்தேன். பணம் இல்லாததால் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் சேர முடியாவிட்டாலும்கூட, எனது தொடர் முயற்சியால் இத்தாலியில் கல்வி உதவித் தொகையுடன் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், படித்து முடித்ததும் அங்கேயே வேலை கிடைக்குமா என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியதில்லை. திறமை இருந்தால், எங்கு வேண்டுமானாலும் நல்ல வேலை கிடைக்கும். படிப்பில் சேரும்போது, படிப்பிலேயே முழு கவனத்தைச் செலுத்திப் படிக்க வேண்டும் என்பதிலேயே ஆர்வமாக இருங்கள். அதுதான் முக்கியம்.

பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்பில் மூன்றாம் ஆண்டிலேயே எந்த நாட்டில் படிப்பது என்பதைத் தீர்மானித்து விட வேண்டும். எந்த நாட்டில் படிப்பது என்பதைத் தீர்மானித்து விட்டால், அந்த நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை அறிந்துகொண்டு பத்துக்கும் குறையாத கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து  விண்ணப்பிக்க வேண்டும். அந்தக் கல்வி நிறுவனங்களில் நாம் சேரும் துறையில் நடத்தப்படும் ஆராய்ச்சி குறித்து கவனத்தில் கொண்டு அந்தக் கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தக் கல்வி நிறுவனத்தின் தர அடிப்படையிலான ரேங்க்கை மட்டும் வைத்து விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அந்தக் கல்வி நிறுவனத்தில் நாம் சேர இருக்கும் படிப்பில், உதவித் தொகை கிடைப்பதற்கு சாத்தியம் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். நாம் விண்ணப்பிக்கும் துறையில் உள்ள பேராசிரியர்கள் எந்தத் துறைகளில் ஆய்வு செய்கிறார்கள், என்பதை அறிந்துகொண்டு அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையும் புரிந்து கொண்டால், அவர்கள் அட்மிஷன் பெறவும் கல்வி உதவித் தொகை பெறவும் உதவியாக இருப்பார்கள்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான டோபல், ஐஇஎல்டிஎஸ் போன்ற மொழித் தேர்வுகளையும் ஜிஆர்இ போன்ற தேர்வுகளையும் முன்னதாக எழுதி, அதற்கான சான்றிதழ்களை கையில் வைத்திருப்பது நல்லது. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பாடம் கற்றுத் தருவது ஆங்கிலத்தில் இருந்தாலும்கூட, அங்கு பேசப்படும் மொழியில் அடிப்படை அறிவு பெற்றிருப்பது நமக்கு உபயோகமாக இருக்கும்.

மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் பெறும் மதிப்பெண்கள் முக்கியம்தான் என்றாலும்கூட, பாடத்தைத் தாண்டி மாணவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார்களா என்பதையெல்லாம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்  பார்ப்பார்கள். அத்துடன், நாம் செய்யும் புராஜக்ட் முக்கியமானது. உங்களது சுயவிவரக் குறிப்பை தெளிவாகவும் சுருக்கமாகவும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன், விண்ணப்பிக்கும்போது நாம் அனுப்ப வேண்டிய முக்கியமான ஆவணம் ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்ப்பஸ். இதில் நமது திறமைகள், நமது ஆர்வம், நமது நோக்கம், இந்தக் கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான காரணம், உயர்கல்வி படிப்பதன் மூலம் சாதிக்க விரும்புவது என்ன என்பது போன்ற விவரங்களை நமது சொந்த மொழியில் இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் எழுத வேண்டும். இதனை ஒரே நாளில் எழுதி விட முடியாது. இதற்கு ஒரு மாதத்திற்கு மேல் கூட ஆகலாம். வேறு ஒருவர் எழுதியதைக் காப்பி அடித்து எழுத முயற்சிக்கக் கூடாது. அதனை பேராசிரியர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். நாமே நமது வார்த்தைகளில் எழுத வேண்டியது அவசியம்.

கல்வி நிலையங்களில் அட்மிஷன் பெறுவதற்கும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். எந்த ஒரு கல்வி நிறுவனம் குறித்தும் அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இ-மெயில் மூலம் தேவையான சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம். அந்தந்தப் பல்கலைக்கழக இணைய தளங்கள் மூலம் கல்வி உதவித் தொகை விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கல்வி உதவித் தொகை விவரங்களை அளித்து வழிகாட்ட அரசு அமைப்புகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக, ஜெர்மனியில் உள்ள படிப்புகளைப் படிக்க, DAAD அமைப்பும், பிரிட்டனில் படிக்க பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பும் மாணவர்களுக்கு உதவுகின்றன. இதேபோல மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கல்வி உதவித் தொகை வழங்குகின்றன. இந்திய அரசு மூலம் வெளிநாடுகளில் படிக்கவும் கல்வி உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளன.

முதுநிலைப் படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளுக்கு மாற்றாக, பணி அனுபவத்தையோ, குறுகிய காலப் பயிற்சியையோ கருத முடியாது. வெளிநாடுகளில் இளநிலை, முதுநிலை, ஆய்வுப் படிப்புகளைப் படித்தவர்களுக்கிடையே ஊதிய வித்தியாசம் குறைவுதான். முதுநிலைப் படிப்பையும் ஆய்வுப் படிப்பையும் படித்து தங்களது தகுதியை உயர்த்திக் கொள்வது எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதவும்.

கல்வித் திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமிக்கவர்கள் தொடர்ந்து படியுங்கள். படித்து முடித்த பிறகு, சொந்த நாட்டில் படித்த கல்வி நிறுவனத்தை மறக்காதீர்கள். உங்கள் அனுபவத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்வதன் மூலம், உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்ய முடியும். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நானே எனது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாகி, வெளிநாட்டில் படித்து வேலை பார்க்க முடியும் என்றால் உங்களால் முடியாதா என்ன? முயற்சி திருவினையாக்கும்.”

Junior Research Fellow vacancy at MNNIT, Allahabad

Post
Junior Research Fellow – 01 Post
Qualification
M.E./ M.Tech. in Mechanical/ Chemical/ Aeronautical/ Aerospace/ Civil/ Power Engineering /Energy/ Applied Mechanics/ Fluids or Thermal Engineering/ Electronics Engineering with minimum of 60% aggregate marks or CPI 6.5 at qualifying examination and GATE qualified..
Last Date
24-12-2013.
Recruitment Board
MNNIT, Allahabad
Consolidated Fellowship
16,000/- per month



CMAT பொது நுழைவுத் தேர்வு

கில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து எம்.பி.ஏ. அல்லது மேலாண்மைப் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ படிக்க விரும்புபவர்கள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) நடத்தும் பொது நுழைவுத் தேர்வை (CMAT)  எழுத வேண்டும். ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வை எழுத ஆன்லைன் மூலம் வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வு எப்படி இருக்கும்?: மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வில் குவாண்டிடேட்டிவ் டெக்னிக்ஸ் அண்ட் டேட்டா இன்டர்பிரட்டேஷன் பிரிவில் 25 கேள்விகளும், லாஜிக்கல் ரீசனிங் பிரிவில் 25 கேள்விகளும், லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன் பிரிவில் 25 கேள்விகளும், பொது அறிவில் 25 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 400 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஓசூர் உள்பட நாடு முழுவதிலும் உள்ள 23 முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறும்.

யார் விண்ணப்பிக்கலாம்?: பட்டப் படிப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பட்டப் படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர், விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 (வங்கிக் கட்டணம் தனி) செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 (வங்கிக் கட்டணம் தனி) செலுத்தவேண்டும். நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2014
தேர்வு நடைபெறும் தேதி20.02.2014 முதல் 24.02.2014 வரை
விவரங்களுக்குwww.aicte-cmat.in

Junior Research Fellow vacancy at IIT Gandhinagar

Post
Junior Research Fellow
Qualification
Candidates should possess B.Tech. in Electrical/ Electronics/ Biomedical Engineering with valid GATE score and knowledge in Signal Processing and Embedded Systems.
Last Date
09/12/2013
Last Date for Submission of Online Application
09-12-2013
Recruitment Board
IIT, Gandhinagar



IIT-NIT பொது நுழைவுத் தேர்வு



ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச்  சேர்ப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பை இத்தேர்வை நடத்தும் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் பிளஸ் டூ  தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பிளஸ் டூ படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

ஐடிக்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த ஐஐடி நுழைவுத் தேர்வுக்கும் என்ஐடி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் (AIEEE)பதிலாக பொது நுழைவுத் தேர்வு இந்தக் கல்வியாண்டில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பொது நுழைவுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே எழுத முடியும். என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மெயின் தேர்வின் முதல் தாளை (ஏஐஇஇஇ தேர்வில் முதல் தாளாக முன்பு இருந்தது) எழுத்துத் தேர்வாக எழுதலாம். கம்ப்யூட்டர் மூலமும் எழுதலாம். ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளில் சேருவதற்கான மெயின் தேர்வு இரண்டாம் தாளை (ஏஐஇஇஇ தேர்வில் இரண்டாம் தாளாக இருந்தது) காகிதத்தில் விடை எழுதும் எழுத்துத் தேர்வாக (Offline Mode)  மட்டும் எழுதலாம்.  இந்தத் தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறுகிறது.

மெயின் தேர்வின் முதல் தாளில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு விடையளிக்க மூன்று மணி நேரம் அளிக்கப்படும். வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். இரண்டாம் தாளில் ஏற்கெனவே ஏஐஇஇஇ தேர்வில் இருந்தது போலவே கணிதம், ஆப்டிட்யூட் டெஸ்ட், டிராயிங் டெஸ்ட் ஆகியவற்றில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கும் விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டமும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், கணிதம்  ஆகிய பாடங்களுடன் வேதியியல், பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்தப் பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிஆர்க் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுடன் பிளஸ் டூ மதிப்பெண்களும் என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் தயாரிப்பதில் கணக்கில் கொள்ளப்படும். அதாவது, மெயின் நுழைவுத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள், பிளஸ் டூ தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். இதன் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டு என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் வழங்கப்படும். இந்தத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தும் கல்வி நிறுவனங்களும் பல உள்ளன.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 1989-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 1984-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். செகண்டரி பள்ளிச் சான்றிதழில் உள்ளபடி பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும்.

2012-ஆம் ஆண்டிலோ அல்லது 2013-ஆம் ஆண்டிலோ பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 2014-இல் பிளஸ் டூ தேர்வை எழுத இருக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 2011-ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களும் 2015-ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். 2011-ஆம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல், 2012-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாது.

ஜேஇஇ மெயின் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 15-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

மெயின் தேர்வில் முதல் தேர்வை மட்டும் எழுதுகிறோமா அல்லது இரண்டாவது தேர்வை எழுதுகிறோமா அல்லது இரண்டு தேர்வுகளையும் எழுதுகிறோமா என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அத்துடன், காகிதத்தில் எழுத்துத் தேர்வு எழுதுகிறோமா அல்லது கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதுகிறோமா என்பதையும் குறிப்பிட வேண்டும். அதைப் பொருத்து கட்டணம் வேறுபடும்.

முதல் தாள் அல்லது இரண்டாம் தாளை மட்டும் எழுத்துத் தேர்வாக எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர் களுக்குக் கட்டணம் ரூ.1,000. மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.500. முதல் தாளை கம்ப்யூட்டர் மூலம் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.600. மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.300. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.300.

முதல் தாளையும் இரண்டாவது தாளையும் சேர்த்து எழுத்துத் தேர்வாக எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,800. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.900. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.900. அதேபோல முதல் தாளை கம்ப்யூட்டர் தேர்வாகவும் இரண்டாவது தாளை எழுத்துத் தேர்வாகவும் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,400. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.700. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.700.

 இந்தக் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கிகளில் இ- செலான் மூலமும் கட்டணம் செலுத்தலாம்.

இந்த ஆண்டில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனால், தபால் மூலம் எதையும் அனுப்ப வேண்டியிருக்காது. எனவே, இந்தத் தேர்வுக்கான தகவல் விவரக் குறிப்புகளை கவனமாகப் படித்து, தகுதி குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். புகைப்படம், கையெழுத்து, இடதுகை கட்டை விரல் ரேகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து (JPG)பார்மெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன், ஸ்கேன் செயப்பட்டவற்றையும் அப்லோட் செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் (அல்லது இ-செலான் மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்). விண்ணப்பத்தை அனுப்பியதற்கான ரசீதை
டவுன்லோடு செய்து பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் தனது அல்லது பெற்றோரின் இ-மெயில் முகவரியையும் மொபைல் எண்ணையும் கொடுக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம்தான் தகவல்கள் அனுப்பப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 26-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வு குறித்தும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும் இணையதளத்தில் உள்ள விளக்கக் குறிப்பேட்டில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

விவரங்களுக்கு:  www.jeemain.nic.in