16 December 2013

CSIR - JRF தேர்வை எதிர்கொள்வது எப்படி?

ஞா.சக்திவேல்

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பும் பெற்று ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் சிஎஸ்ஐஆர்-யுஜிசி விரிவுரையாளர் தகுதித் தேர்வை (நெட்) எழுத வேண்டும். வருகிற 22-ஆம் தேதி இத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் சில யோசனைகள்...
சென்னைப் பல்கலைக் கழகத்தின் கிண்டி வளாகத்தில் சிஎஸ்ஐஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை தோறும் இயற்பியல் பாடத்தில் இலவசப் பயிற்சி வகுப்பை நடத்தி வரும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.வி.எம். சத்திய நாராயணா கூறும் யோசனைகள்:

அறிவியல் பாடத்தைப் படித்து தேர்ச்சி பெறுகிறார்களே தவிர, ஆழ்ந்தும், புரிந்தும் படிப்பதில்லை. பாடத்திட்டங்கள் சிறப்பாக இருந்தும் பயிற்சி முறையில் பிரச்சினை இருப்பதால் சிஎஸ்ஐஆர் தேர்வுகளில் பல மாணவர்களால் பெரிய அளவில் வெற்றி பெற முடிவதில்லை. இயற்பியல் போன்ற அறிவியல் பாடங்களைப் படிக்கும்போது கோட்பாடு குறித்தும் அதையொட்டிய பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் புரிந்து படிக்க வேண்டியது அவசியம். அத்துடன், மாற்றுத் தீர்வு குறித்தும் யோசிக்க வேண்டும். ஒரு பகுதியைப் படித்தோம், அதில் என்ன தீர்வு முறை இருக்கிறதோ அதையும் பார்த்துவிட்டோம் என்று இருந்தால் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.

சிஎஸ்ஐஆர் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் என்னென்ன பாடப் பிரிவுகள் இருக்கின்றன என்பதை அறிந்து ஒவ்வொரு பாடமாகப் படிக்க வேண்டும். ஒரு பாடப்பிரிவு குறித்துப் படிக்கும்போது நூலகத்தில் அந்தப் பாடப்பிரிவுக்கு உரிய நான்கு ஐந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு மாணவர்களே தனியாக குறிப்பெடுத்துப் படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும் போது ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் பிராப்ளம் சால்விங் முறைகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். ஒரு கணக்கிற்குத் தீர்வு காணும் போது வேறு நிலைப்பாட்டில் என்ன மாதிரியான முடிவுகள் வரும் என்பதை மாற்றி மாற்றி தீர்வு கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பிரச்சினைக்களுக்கான தீர்வைக் காணும்போது என்னென்ன தவறுகள் நிகழ்கின்றன என்பதையும், அந்தத் தவறால் என்னென்ன முடிவுகள் வருகின்றன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் பயிற்சி செய்வது தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கணக்கை மாற்றிக் கொடுத்தாலும் உங்களுக்கு எப்படித் தீர்வு கண்டுபிடிப்பது என்பதும் எளிதாகத் தெரிந்து விடும்.

தேர்வில் கேள்விக்கு சரியான பதில் எது என்பதை அறிந்து அதை மீண்டும் பரிசோதித்துப் பார்த்து சரியான விடைதானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

பழைய கேள்வித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்க வேண்டும். மூன்று மணி நேரத்தில் எவ்வளவு கேள்விகளுக்கு விடையளிக்க முடிகிறது என்பதை நாமே மதிப்பீடு செய்துகொண்டு நம்மை முன்னேற்றிக்கொள்ள முடியும். ஒரு கணக்கிற்கு விடை தேடும்போது அரைப்பக்கத்திற்கு மேல் போட்டுப் பார்த்தும் விடை கிடைக்காமல் போனால் அந்தக் கணக்கை அப்படியே விட்டு விட்டு அடுத்த கேள்விக்கு போய் விட வேண்டும். ஒரே கணக்கிற்கு அதிகமான நேரம் ஒதுக்கி விடை தேடிக்கொண்டிருந்தால், தெரிந்த கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க நேரமில்லாமல் போகலாம்.

ஒவ்வொரு கணக்கைத் தீர்க்கவும் எளிய உத்தி முறைகள் இருக்கும். அதனை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த உத்தியினை தேர்விலும் கடைப்பிடித்து விரைவில் விடையளிக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு வாரம் படித்த பாடங்களை அடுத்த வாரமும் திருப்பிப் படிக்க வேண்டும். அப்போதுதான் மறந்து போகாது. குழுவாக சேர்ந்து படிப்பதும் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உதவும். குழுவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறைக்கும் தீர்வு கண்டுபிடித்திருப்பார்கள் அல்லது தீர்வை சிந்தித்து இருப்பார்கள் அல்லது அதே கணக்கிற்கு வேறு வழியில் விடையளிக்க முயற்சி செய்திருப்பார்கள். இதனால் எந்த முறை எளியது என்பது குழுவாக அமர்ந்து விவாதிக்கும் போது அறிந்துகொள்ள முடியும். தேர்வுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் படிக்க முடியாமல் போய்விட்டாலும்கூட, குறிப்பிட்ட சில முக்கியப் பாடங்களிலாவது நல்ல தெளிவு வேண்டும். அப்போதுதான் நாம் நன்கு படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் வரும்போது அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். தேர்வு எழுதும் பலரும், ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்து விட்டோம் என்ற பதற்றத்தில் வேறு சில கேள்விகளுக்கும் சரியாக பதில் எழுதத் தவறவிட்டு விடுவார்கள் எனவே பதற்றம் தேவையில்லை. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளவும்.

தேசிய தகுதித் தேர்வு மற்றும் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கூட்டமைப்பின் செயலாளரும், மதுரை பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் இயற்பியல் துறையின் கௌரவ பேராசிரியருமான நாகராஜன் வழங்கும் டிப்ஸ்:

கடந்த பத்தாண்டுகளில் கேட்கப்பட்ட பழைய கேள்வித் தாள்கள் இணையத்தில் இருக்கின்றன. பெரும்பாலும், பழைய கேள்விகளை மீண்டும் கேட்பதில்லை. இருந்தபோதிலும் அதற்கு இணையான கேள்விகள் கேட்கப்படுவதால் பழைய வினாத்தாள்களுக்கு விடையளித்து பயிற்சி செய்ய வேண்டும். கடந்த ஆண்டுகளில் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்துப் பார்க்கும்போதுதான் எப்படியெல்லாமல் கேள்விகள் கேட்கக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு தயாராக முடியும். தேர்வின் முதல் பகுதியில் தேர்ச்சி பெற பல்வேறு போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை வாங்கிப் படிப்பது அவசியம். நிறைய பயிற்சி மையங்கள் இதற்கென்று தனியே பயிற்சியினை வழங்குகின்றன. அங்கு வழங்கப்படும் பயிற்சிக் கையேடுகளையும் பிற மாணவர்களிடமிருந்தும், இதற்கு முன்பு படித்தவர்களிடமிருந்தும் வாங்கிப் படிக்க வேண்டும்.

தேர்வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிக்கு சிஎஸ்ஆர் தனியே பாடத்திட்டங்களை வழங்குகிறது. அதில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் பிரித்து நீங்களே தனித்தனியாக குறிப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே கணக்குகளுக்கு விடையளிக்கும் வகையில் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் தனி வினா வங்கியைத் தயார் செய்து வைத்துகொள்ள வேண்டும். நீங்களே அதற்காக சொந்தமாக கேள்விகளை தயார் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் பாடப்புத்தகம் என்று தனியே இருக்கிறது. அதில் உள்ள அப்ஜெக்ட்டிவ் டைப் வினாக்களை மாதிரியாக எடுத்துக்கொண்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கைடு புத்தகங்கள், பயிற்சி மையங்கள் வழங்கும் புத்தகங்கள் என ஏராளமானவை புழக்கத்தில் இருக்கின்றன.

பகுப்பாய்வு முறையில் கேள்விகளைக் கேட்பதால் பாடப் புத்தகங்களை ஆழ்ந்து படித்தால் மட்டுமே விடையளிக்க முடியும். நீங்கள் படிக்கும் போது வினாக்களை எழுப்பி அதற்குத் தகுந்தாற்போல் விடையளிக்க முயற்சி செய்ய வேண்டும். Result and case studies என்ற பகுதியில் ஒரு வினாவை எழுப்பி இப்படி இருந்தால் என்ன விடை கிடைக்கும் என்று கேட்பார்கள். Derivation பகுதியில் இடையில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால் ஒவ்வொரு டெரிவேஷனையும் ஆழ்ந்து படித்து அறிந்துகொள்வது அவசியம்.

கேள்விக்கு தவறாக விடையளிக்கும்போது மதிப்பெண் குறையும் என்பதால் சரியாக விடை தெரிந்த வினாக்களுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். நேர மேலாண்மையும் மிக முக்கியமானது. நன்கு அறிந்த கேள்விகளுக்கு விடையளித்த பின்னரே, கணித முறையில் விடை தேடவேண்டிய கேள்விகளுக்கு வர வேண்டும். முதலில் கணிதம் சார்ந்த கேள்விகளுக்கு விடையளிக்க ஆரம்பித்தால், மற்ற கேள்விகளுக்கு விடையளிக்கப் போதுமான நேரமில்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. கணித முறையில் விடையளிக்க உதவியாக லாக் மற்றும் ஆண்டி லாக் அட்டவணை கொடுத்திருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் கால்குலேட்டரை பயன்படுத்திதான் விடையளித்திருப்போம். ஆனால் தேர்வில் கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். ஆகையால், ஆரம்பத்தில் இருந்தே லாக் மற்றும் ஆண்டி லாக் அட்டவணையைப் பயன்படுத்தி விடையளிக்க பயிற்சி பெற்றிருப்பது அவசியம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கணிதத் திறனும், பிரச்சினைக்குத் தீர்வுகாணும் திறனும் குறைவாக இருக்கின்றன. இத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ள ஒவ்வொரு கான்செப்டையும் நன்கு ஆழ்ந்து படிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் ஒதுக்கிப் படிக்கும் போது ஓராண்டிற்குள் நல்ல திறமையை வளர்த்துக்கொண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்" என்கிறார், லயோலா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஜோசப்.

தேர்வில் 200 மதிப்பெண்களுக்கும் விடையளிக்க வேண்டிய அவசியமில்லை. ரொம்ப வேகமாக முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் அவசர அவசரமாக விடையளிக்கும்போது பல விடைகள் தவறுதலாகி உங்களுக்கு மிகக்குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே படித்துப் பார்த்ததைத் திருப்பிப் பார்க்க வேண்டும். கடைசி நாளில் கண் விழித்துப் படித்தால் அடுத்த நாள் தேர்வில் சரியாக எழுத முடிவதில்லை" என்கிறார், சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஐயப்பன். படித்துப் பார்த்ததை மீண்டும் மீண்டும் திருப்பிப் படித்துப் பார்க்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்யும்போது மட்டுமே தேர்வில் எளிதாக, விடையளிக்க முடியும்" என்கிறார் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மாணவராக இருக்கும் அபுதாகீர்.

தேர்வுக்கு நன்கு தயாராக நல்ல உழைப்பைச் செலுத்துங்கள். நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள்! வெற்றி நிச்சயம்!

இலவசப் பயிற்சி

சிஎஸ்ஐஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 1996-ஆம் ஆண்டில் இருந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் இலவச வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதில் எம்எஸ்சி இயற்பியல் மாணவர்களும் முதுநிலை பட்டப் படிப்பைப் படித்து முடித்தவர்களும் கலந்துகொள்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களுக்கு உதவியாக இந்திய கணித அறிவியல் மையத்தில் இருந்து பேராசிரியர் ராஜசேகரனும், மணியும் கலந்துகொண்டு வகுப்பு எடுக்கிறார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அணு இயற்பியல் துறையில் காலை 10 மணியில் ஆரம்பித்து மாலை 5 மணி வரை வகுப்பு எடுக்கிறோம். கட்டணம் எதுவும் கிடையாது. ஜூலை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் இந்தப் பயிற்சி, ஜூன் மாதம் சிஎஸ்ஐஆர் எக்ஸாம் தேர்வு நடக்கும்வரை தொடந்து நடைபெறும். இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்ற நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிஎச்டி முடித்து நல்ல பணிகளில் இருக்கிறார்கள்" என்கிறார், உதவிப் பேராசிரியர் எஸ்.வி.எம். சத்தியநாராயணா.

மத்திய அரசு நிறுவனத்தில் 115 என்ஜினீயர்களுக்கு வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் தரநிர்ணய சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை  அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தர நிர்ணய நிறுவனம் (Bureau of Indian Standards) உணவு தயாரிக்கப் பயன்படும் பொருள்கள், மின் சாதனப் பொருள்கள், குடிநீர் போன்றவற்றிற்கான தர நிர்ணயம், தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான ஹால்மார்க் தர நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு தர நிர்ணயப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பி கிரேடு சயின்டிஸ்ட் பணிகளில் 115 காலியிடங்கள் உள்ளன. இப்பணிகளில் சேர என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 31 காலி இடங்களும், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 31 காலி இடங்களும், சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 24 காலி இடங்களும், மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 9 காலி இடங்களும், கெமிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 8 காலி இடங்களும், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பிரிவில் 10 காலி இடங்களும், டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் பிரிவில் 2 காலி இடங்களும் உள்ளன. பணியில் சேரும் என்ஜினீயர்களுக்கு மாதம் ரூ. 52,280 ஊதியமாகக் கிடைக்கும். பொதுப்பிரிவிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக். படிப்பை முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 750. இக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் ஜனவரி 19-ஆம் தேதி சென்னை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 45 நகரங்களில், ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் BIS இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013

விவரங்களுக்கு: www.bis.org.in








வங்கி சிறப்பு அதிகாரிகள் பணித் தேர்வு

நாட்டில் உள்ள முக்கிய வங்கிகளில்  சிறப்பு அதிகாரிகள் பணிகளில் சேர விரும்புபவர்கள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பர்ஸனல் செலக்ஷன் நடத்தும் எழுத்துத் தேர்வை எழுத வேண்டும்.

லகாபாத் வங்கி, ஆந்திர வங்கி, பரோடா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி,  சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, ஈசிஜிசி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க், சிண்டிகேட் பேங்க், யூகோ பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சிறப்பு அதிகாரிகளாகப் பணிபுரிய விரும்புபவர்களுக்கான தகுதித் தேர்வை இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பர்ஸனல் செலக்ஷன் நடத்துகிறது.
இந்த வங்கிகளில் ஐ.டி. அதிகாரி, வேளாண்மை கள அதிகாரி, மொழி  அதிகாரி, சட்ட அதிகாரி, எச்ஆர் பர்சனல் அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி ஆகிய துறைகளில் ஸ்கேல்-1 பிரிவுகளின் கீழும் ஐடி அதிகாரி, சட்ட அதிகாரி,  சார்ட்டர்ட் அக்கவுன்டண்ட், மேனேஜர் கிரெடிட், ஃபைனான்ஸ் எக்சஸிகியூட்டிவ் ஆகிய துறைகளில் ஸ்கேல்-2 பிரிவுகளின் கீழும் உள்ள காலி இடங்களை நிரப்ப இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டும்.
சட்ட அதிகாரி ஸ்கேல்-1 மற்றும் ஸ்கேல்-2, மொழி அதிகாரி  ஸ்கேல்-1 பிரிவுப் பணிகளுக்கான தேர்வில் ரீசனிங், ஆங்கில மொழி, வங்கித் தொழில் தொடர்பான பொது விழிப்புணர்வு, புரபஷனல் நாலெட்ஜ் ஆகிய பிரிவுகளின் கீழ் தலா 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்கு விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும்.
ஐடி அதிகாரிகள் ஸ்கேல்-1 மற்றும் ஸ்கேல்-2, வேளாண் கள அதிகாரி ஸ்கேல்-1, எச்ஆர், பர்சனல் அதிகாரி ஸ்கேல்-1, மார்க்கெட்டிங் அதிகாரி ஸ்கேல்-1, சார்ட்டர்ட் அக்கவுன்டண்ட் ஸ்கேல்-2, கிரெடிட், ஃபைனான்ஸ் எக்ஸ்கியூட்டிவ் ஸ்கேல்-2 ஆகிய பணிகளுக்கான தேர்வில் ரீசனிங், இங்கிலீஷ் லாங்வேஜ், குவான்டிட்டேட்டிவ் ஆப்டிட்யூட், புரபஷனல் நாலெட்ஜ் ஆகிய பிரிவுகளில் தலா 50 கேள்விகள் வீதம் கேட்கப்படும். இதற்கு இரண்டு மணி நேரத்தில் விடை அளிக்க வேண்டும். இதற்கு மொத்த மதிப்பெண்கள் 200. ஆங்கில மொழி அல்லாத மற்ற பிரிவுகளுக்கான வினாக்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த எழுத்துத் தேர்வு வருகிற பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். தமிழகத்தில்  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இத்தேர்வை எழுத முடியும். இத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி அதிகாரி ஸ்கேல்-1 பிரிவின் கீழ் சேர விரும்புபவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிஸ் அண்ட் டெலி கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் 4 ஆண்டு என்ஜினீயரிங் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும் அல்லது எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். டிஓஇஏசிசி நடத்தும் பி லெவல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இப்பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.
20 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஐடி அதிகாரி ஸ்கேல்-2 பிரிவின் கீழ் சேர விரும்புபவர்களுக்கும் இதே தகுதிதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் அதிகபட்ச வயது 35 வரை இருக்கலாம்.
சட்ட அதிகாரி ஸ்கேல்-1 பணிக்கும் இளநிலை  சட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். அத்துடன் பார் கவுன்சலில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும். வயது 30-க்கு மேல் இருக்கக் கூடாது. சட்ட அதிகாரி ஸ்கேல்-2 பணியில் சேர விரும்புபவர்கள் இளநிலை சட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். அத்துடன், பார் கவுன்சலில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது வங்கிகள், அரசுத் துறைகள், அரசுத் துறை நிறுவனங்களில் சட்ட அதிகாரிகளாக இரண்டு ஆண்டு காலம் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 35-க்கு மேல் இருக்கக் கூடாது.
வேளாண் கள அதிகாரி ஸ்கேல்-1 பணியில் சேர விரும்புபவர்கள் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை  அறிவியல், டெரி சயின்ஸ், அக்ரிகல்ச்சுரல் என்ஜினீயரிங், ஃபிஷரி சயின்ஸ், பிசிகல்ச்சர், அக்ரி மார்க்கெட்டிங் அண்ட் கோ-ஆபரேஷன், கோ-ஆபரேஷன் அண்ட் பேங்கிங், அக்ரோ பாரஸ்ட்ரி ஆகிய பாடப்பிரிவுகளில் நான்கு ஆண்டு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30.
எச்ஆர் பர்சனல் அதிகாரி ஸ்கேல்-1 பணியில் சேர விரும்புபவர்கள் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பர்ஸனல் மேனேஜ்மெண்ட், இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ், எச்ஆர், சோஷியல் ஒர்க், லேபர் லா போன்ற பாடப்பிரிவுகளில் முழு நேரமாக முதுநிலை பட்டமோ அல்லது முதுநிலை பட்ட டிப்ளமோ படிப்போ படித்திருக்க வேண்டும். இதற்கு அதிகபட்ச வயது வரம்பு 30.
மார்க்கெட்டிங் அதிகாரி ஸ்கேல்-1 பணியில் சேர விரும்புபவர்கள் ஏதாவது பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மார்க்கெட்டிங்கில் எம்பிஏ அல்லது பிஜிடிபிஏ அல்லது பிஜிடிபிஎம் (மார்க்கெட்டிங் சிறப்புப் பாடமாகக் கொண்டு) படித்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30. சார்ட்டர்ட் அக்கவுன்டண்ட் ஸ்கேல்-2 பணியில் சேர சிஏ இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதேபோல இந்தப் பணிகளுக்கான தகுதி மற்றும் விவரங்கள் இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600.இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் கட்டணங்களை இம்மாதம் 16-ஆம் தேதி வரை செலுத்தலாம்.
விவரங்களுக்கு: www.ibps.in

Tamil Nadu State Level Placement Programme

For Present Final Year (2014 Passing Out Students)
Final year students of B.E. / B.Tech. (CSE, ECE, EEE, EIE, ICE & IT) and PG (MCA) with CGPA
between 7.00 and 8.00 (no rounding off) (No Standing Arrears) from I Semester to Last Semester
are eligible to participate in this programme. It is mandatory that all the students should have
secured an average of 70.00 (no rounding off) and above marks consistently in 10th Std. and 12th

Std. The students who had already particpated in the previous CTS placement drive are strictly
not eligible to participate now.

Click here For more details 

Recruitment of Teaching Fellow - UNIVERSITY COLLEGE OF ENGINEERING TINDIVANAM

National Seminar on Environmental Pollution, Restoration and Management, EPRM-2013 - Dept. of Chemical Engg., ACT

How to sharpen up your document skills

The popular document editors that we use are a great deal more versatile than we give them credit for. They have loads of powerful features that you probably don't use. ET explains, how to move beyond just typing out a document.

14 Power tips to help master Microsoft Office WORD


1. By default, a lot of autocorrect options are built into Word. If you need complete control over what you type, you can switch off all autocorrect items in Word Options > Proofing > Autocorrect options.

2. Select a portion of text and press Shift + F3 to quickly cycle through uppercase (all caps), sentence case or lowercase text
3. On the top left is the Quick Access Toolbar, which normally has save, undo, redo buttons. Click the little triangle next to it and you can add more buttons that you frequently use. If something that you use often is in one of the other tabs, click 'More Commands' to add a button.

4. If you often copy and paste text from elsewhere, you probably get frustrated when the formatting does not match. To change how Word pastes text, go to Word Options > Advanced > Cut, copy, paste options.

5. If you have PowerPoint 2010, you don't need to carry a separate laser pointer while making a presentation. During a slide show, simply press Ctrl on the keyboard and move your cursor to turn it into a laser pointer.

6. You can use any shape as a container for an image of your choice. Go to the insert tab and insert any shape you want. Then right click on the shape, click 'Format Shape', click Picture or texture file and select the image you want to place inside it.

7. Before making a presentation, it's a good idea to rehearse it. Go to the Slide Show tab and click 'Rehearse Timings'. The program can then help you keep time - displaying the amount of time you spent on each slide and in total.

8. In PowerPoint 2007 onwards, you can set a password to prevent anyone from making any changes to your slides - especially useful if you need to distribute your presentation but don't want any unauthorised alterations. While saving the presentation for the first time, click Tools and then General Options. Then, enter a password in the 'Password to Modify' field. Now, if someone opens the presentation and they don't have the password, they can only open a Read-Only copy. In the Save As dialog, saving the entire presentation as a set of images or a PDF will also work.

9. To allow for wider viewing, you can save your presentation as an HTML file. Click Save As and choose 'Single file web page' - this can then be opened using a regular web browser, even if the recipient does not have Power-Point installed.

10. If you're using PowerPoint on a MAC, try a free add-on called Omni Dazzle from www.omnigroup. com. It lets you highlight certain sections of the slide easily.

11. Get Excel to read aloud what you type into a cell by using Text to Speech (could be useful for the visually impaired). On the top left of the screen, next to the Save, Undo and Redo buttons is a triangle that opens Quick Access Toolbar settings. Click More Commands, Customize and select 'All Commands' from the drop down list. Scroll down to the 'Speak Cells' command and add it. Now if you click this button on the Quick Access Toolbar, Excel will read the contents of the cell aloud.

12. Let's say you want to type the same text into the same cell in different sheets. Press and hold the Ctrl key and select all the sheets (sheet 1, sheet 2 and so on). Then type anything into a cell - you'll see that the same text has been placed into all the sheets you selected.

13. When working on large sheets, you may want to enter today's date/time into a cell. Simply press Ctrl + ; to insert the current date and Shift + Ctrl + ; to insert the current time.

14. To switch the orientation of a table after you have typed out all the values, select and copy all the cells, then right click on an empty space and click Paste Special — select the option called Transpose. The rows will become columns and vice versa.


  Mobile Apps KINGSOFT OFFICE


Use your choice of fonts on the app with the Cloud Fonts Service. Upload the font from a PC to the cloud and it will be synced to your phone You can open and switch between multiple documents using the 'File Tabs' icon on the top bar.

The popular Aldiko Book Reader Android supports epub and PDF fmats and allows you to sort books via tags. It displays mobile device

Kingsoft Office file manager supports cloud storage (Dropbox, Google Docs and Box.net). You can access files stored on the cloud directly

You can share text notes from a PC directly to the Kingsoft Office app on your smartphone wirelessly using the free Kingsoft Clip app for Android

 POLARIS


You can change the size, colour, font, effect, background color, and style of a single word during editing by tapping the wrench icon on the top bar You can do basic enhancements for inserted images within the app using the image 'property' box

Similar to Kingsoft, Polaris lets you add cloud storage services like Google Drive, Box.net & webDAV to access and edit document

Files of a particular format can be viewed in the file manager by tapping the four squares icon in the home screen and selecting view by type

Create a list of favourite documents by tapping the star icon next to document name. Favourites can be quickly accessed from the home screen

DOCUMENTS TO GO


Use the Documents To Go desktop app to sync files between your PC and Android/iOS device. The desktop app automatically merges updated files You can synchronize the mobile app with multiple desktop computers using the desktop app

Documents To Go has a built-in Shake to undo/redo feature. Instead of using the keyboard, shake the device to undo/redo the editing

To view Slide Notes in a presentation tap the 'More' icon on the toolbar & select 'Notes'. To hide them, slide the top of the note to the bottom

You can set the amount of storage space alloted for saving documents downloaded from cloud storage in the app's account settings

GOOGLE DRIVE


Drive comes with built-in support to create forms, surveys and polls. These can be shared with others or embedded on a blog, forum or website

All document revisions are automatically saved. To view various versions of any document, go to File > See Revision History

In Gmail, go to settings > Labs. Search and activate the Google Docs Preview add-on — this will enable previews of documents within Gmail

ZOHO DOCS


Connect your Dropbox storage with Zoho Docs to sync existing documents. You can choose which Dropbox folders will be synced with Zoho

If you have multiple headings in a word document, you can create a Table of contents for reference. Go to Insert > Table of contents to add one

You can embed a Zoho spreadsheet directly in a website. Select Publish Menu > Embed in Website/Blog & copy the HTML snippet to use it on a website


Source | Economic Times | 11 December 2013