29 April 2014

பெட்ரோலியத் துறையில் பி.டெக். படிப்புகள்!

பெட்ரோலியத் துறையில் பி.டெக். படிக்க விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள், டேராடூனில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி ஸ்டடீஸ் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

த்தரகாண்ட் மாநிலம் டேராடூனிலுள்ள  யுனிவர்சிட்டி ஆஃப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி ஸ்டடீஸ் கல்வி நிலையத்தில் பெட்ரோலியம், கேஸ், கெமிக்கல், ஜியோ-சயின்ஸ், ஜியோ-இன்பர்மேட்டிக், ஏரோஸ்பேஸ், ஆட்டோமோட்டிவ், எலெக்ட்ரானிக்ஸ், மெகட்ரானிக்ஸ், ஃபயர் அண்ட் சேப்டி, மெட்டீரியல் சயின்ஸ், ஏவியானிக்ஸ், சிவில், பவர் சிஸ்டம், மைனிங்,  டெக்னோ லீகல், சூப்பர் ஸ்பெஷலைஸ்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் ஸ்பெஷலைசேஷன் இன் டெலிகாம் இன்பர்மேட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் பி.டெக். படிப்புகள் உள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்த்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஷில்லாங்கிலுள்ள  யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் கல்வி நிலையத்தில் பெட்ரோலியம், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் வித் ஸ்பெஷலைசேஷன் இன் கிளவுட் கம்ப்யூட்டிங் அண்ட் வெர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பி.டெக். படிக்கலாம். 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்த்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த இரு கல்வி நிறுவனங்களிலும் உள்ள படிப்புகளில் சேர்க்க UPESEAT  என்கிற பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். ஆக்ரா, அலகாபாத், சென்னை, தில்லி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும். அப்ஜெக்ட்டிவ் முறையில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களிலிருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கில காம்ப்ரிஹென்சனில் 30 கேள்விகளும், கரண்ட் அபையர்ஸ் அண்ட் அவேர்னஸ் பிரிவில் 20 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்கள். மூன்று மணி நேரங்களுக்குத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?: இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1,750. இதை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலமாக விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும் அல்லது குறிப்பிட்ட சில நகரங்களில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக் கிளைகளில் ரூ.1,750-ஐ ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பத்தையும், விளக்கக் குறிப்பேட்டையும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது ரூ.1,850-க்கான டிமாண்ட் டிராப்ட்டை ‘க்கஉகு UPES Fee Account ‘ payable at New Delhi / Dehradun   என்கிற பெயருக்கு எடுத்து அனுப்பி பெற்றுக்கொள்ளவேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பிரிண்ட் அவுட் எடுத்து, தில்லியில் உள்ள என்ரோல்மெண்ட் அலுவலகத்திற்கோ அல்லது டேராடூனில் உள்ள அலுவலகத்திற்கோ கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2014
நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி24.05.2014
விவரங்களுக்கு: www.upes.ac.in

வெளிநாடுகளில் படிக்க ஆர்வமா? : தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சீர்மரபைச் சேர்ந்த நாடோடி பழங்குடி இன மாணவர்களுக்கும்  நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும்  பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச்  சேர்ந்த மாணவர்களுக்கும் மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கு கல்வி உதவித்தொகை கிடைக்குமா என்று ஏங்கி நிற்கும் மாணவர்களும் உண்டு. வங்கிகளில் கடன் உதவி பெறலாம்தான். ஆனால், அதற்கான உத்தரவாதம் கொடுக்க அசையாச் சொத்துக்கு எங்கே போவது? தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களின் நிலைமையைக் கேட்க வேண்டாம். வறுமைச் சூழ்நிலையிலும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும்கூட அவர்களை கைதூக்கி விட மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டியது உள்ளது. இந்தச் சூழ்நிலையில், தாழ்த்தப்பட்ட மாணவர்களும் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு கல்வி உதவித்தொகையை மத்திய சமூக நீதி அமைச்சகம் வழங்குகிறது. தாழ்த்தப்பட்ட, சீர்மரபு பழங்குடியினர் மற்றும் நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்கான கல்வி உதவித்தொகையை மத்திய சமூக நீதி அமைச்சகம் வழங்குகிறது. வெளிநாடுகளில் முதுநிலை பட்டப் படிப்போ அல்லது பிஎச்டி ஆய்வுப் படிப்போ படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச்  சேர்ந்த 54 மாணவர்களுக்கும் சீர்மரபைச் சேர்ந்த நாடோடி பழங்குடியைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்த  2 மாணவர்களுக்கும் வெளிநாடுகளில் படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
என்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மெண்ட் துறையில் படிக்க 20 பேருக்கும் பியூர் சயின்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ்,  அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ் அண்ட் மெடிசின், இன்டர்நேஷனல் காமர்ஸ் அண்ட் அக்கவுண்டிங் ஃபைனான்ஸ், ஹியுமானிடிஸ், சோஷியல் சயின்ஸ் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளில் தலா 10 மாணவர்கள் வீதம் மொத்தம் 60 மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள். இதுதவிர, 5 பேருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கான மானியத் தொகை வழங்கப்படும். இந்த வெளிநாட்டுப் பயண மானியத் தொகையைப் பெறுவதற்கு, முதுநிலை பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு, ஆராய்ச்சி அல்லது பயிற்சி பெற மெரிட் ஸ்காலர்ஷிப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தக் கல்வி உதவித்தொகை பெற என்ன தகுதி வேண்டும்?
பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்கள் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அனுபவம் மிக்க விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் இளநிலை பட்டப் படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அனுபவம் மிக்க விண்ணப்பதாரர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.6 லட்சத்துக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த வருமான வரிக் கணக்கு மற்றும் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து ஊதியச் சான்றிதழையும் பெற்று அனுப்ப வேண்டும். அத்துடன் ஆட்சேபணை இல்லை  (என்.ஓ.சி.) சான்றிதழையும் பெற வேண்டும். ஏற்கெனவே இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாட்டில் படித்தவர்கள் மீண்டும் படிக்க இந்த உதவித்தொகை பெற முடியாது. அதேசமயம், ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் வரை இந்தக் கல்வி உதவித்தொகை பெற அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2013-14  கல்வி ஆண்டிலிருந்து படிக்க அட்மிஷன் பெற்றுள்ளவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். படிக்கச் சேர்ந்துள்ள கல்வி நிறுவனம் தர அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்களுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெறுவதற்கு முயற்சி செய்யும் தகுதியுடைய மாணவர்களுக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அந்த மாணவர்களுக்கு இந்தச் சலுகை ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடைய  இரண்டு பேர் சமநிலையில் இருந்தால், வயதில் மூத்தவர் அந்தக் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். வேலை பார்க்கும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து ஆட்சேபணை இல்லை சான்றிதழ் வாங்கி அனுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் படிக்க எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?
பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு நான்கு ஆண்டு காலத்துக்கும் முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டு காலத்துக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பிரிட்டன் தவிர அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளில் படிப்பதற்கு ஆண்டுக்கு 15,400 டாலர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பிரிட்டனில் படிக்கும் மாணவர்களுக்கு 9,900 பிரிட்டிஷ் பவுண்ட் வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் நாடுகளில் ரிசர்ச் மற்றும் டீச்சிங்  அசிஸ்டென்ஷிப் மூலம் சம்பாதித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பிரிட்டன் நீங்கலாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் படிக்கச் சேரும் மாணவர்கள் புத்தகங்கள், உபகரணங்கள், ஸ்டடி டூர், கருத்தரங்குகளில் பங்கேற்கச் செல்வதற்கான பயணச் செலவு, ஆய்வுக் கட்டுரையை டைப் செய்தல் பைண்ட் செய்தல் ஆகியவற்றுக்கான செலவுகளுக்காக ஆண்டுக்கு 1,500 டாலர் வழங்கப்படும். பிரிட்டனில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தச் செலவுகளுக்காக ஆண்டுக்கு 1,100 பவுண்ட் வீதம் வழங்கப்படும். விசா கட்டணம், மருத்துவ இன்சூரன்ஸ் கட்டணம், விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கும் உரிய உதவித்தொகை வழங்கப்படும். படிப்பு முடிக்கும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இருவரிடம் தலா ரூ.50 ஆயிரத்துக்கான உத்தரவாதப் பத்திரத்தைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலோ அல்லது கல்வி நிறுவனங்களிலோ அட்மிஷன் பெற வேண்டியது மாணவர்களின் பொறுப்பு. இந்திய அரசின் தூதரக உறவு உள்ள நாடாகவும் அங்குள்ள கல்வி நிறுவனம் தர அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். திருமணமான விண்ணப்பதாரர்கள், தாங்கள் படிக்கும் காலத்தில் மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பினால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் விண்ணப்பதாரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும். படிப்புக் காலத்தில் தவிர்க்க முடியாத அவசரக் காரணங்களால் தாய்நாட்டுக்கு வந்து செல்ல வேண்டியதிருந்தால்,  சம்பந்தப்பட்ட மாணவர்கள்தான் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். படிப்புக் காலத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாணவர்களின் படிப்பு குறித்து அங்குள்ள இந்தியத் தூதரகம், பல்கலைக்கழகத்திடம் அறிக்கையை கேட்டுப் பெறும். இந்த உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, படிப்பை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் பேராசிரியர் அந்தப் பல்கலைக்கழகத்தை விட்டு விட்டுப் போதல் போன்ற நிலைமைகளில் வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர அனுமதிப்பது குறித்து அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் முடிவு செய்யும்.

படிப்புக்காலம் முடிந்ததும் தேவையைக் கருத்தில் கொண்டு மேலும் இரண்டு ஆண்டு காலம் அந்த மாணவரை தங்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும். ஆனால், அந்தக் கால கட்டத்துக்கு நிதியுதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது. இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவிலேயே இருக்க வேண்டும். அரசுப் பணியில் இருந்து கொண்டே இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாடுகளுக்குப் படிக்கச்  சென்றவர்கள், திரும்பி வந்து குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது அரசுப் பணியில் இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது?
இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டு 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து படிப்புச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பிறந்த தேதிச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். வெளிநாட்டில் படிக்க பயண உதவித்தொகை கோரும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை தில்லியிலுள்ள சமூக நீதி அமைச்சகத்தின் சார்புச் செயலர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்குத் தகுந்த விண்ணப்பதாரர்களை மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தேர்வுக் குழு தேர்வு செய்யும். இந்த உதவித்தொகை பெறுவதற்கான தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்கள் சமூக நீதி அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விவரங்களுக்குwww.socialjustice.nic.in

17 April 2014

Mentoring Workshop for Fulbright-Nehru fellowships - CIA

Dates of the workshop :April 17, 2014

Two - Week ISTE Workshop on Computer Programming - Conducted by IIT Bombay - RCC

Dates of the workshop : 16th June , 2014 to 21st June

Click here for more details 

Two - Week ISTE Workshop on Conducted by IIT Bombay - RCC

Date of the workshop : 30th June to 5th July, 2014.

Click here for more details

Short Term Training Course on CAD / CAE - AUFRG

பெட்ரோலியத் துறையில் பி.டெக். படிப்புகள்!

பெட்ரோலியத் துறையில் பி.டெக். படிக்க விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள், டேராடூனில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி ஸ்டடீஸ் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

த்தரகாண்ட் மாநிலம் டேராடூனிலுள்ள  யுனிவர்சிட்டி ஆஃப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி ஸ்டடீஸ் கல்வி நிலையத்தில் பெட்ரோலியம், கேஸ், கெமிக்கல், ஜியோ-சயின்ஸ், ஜியோ-இன்பர்மேட்டிக், ஏரோஸ்பேஸ், ஆட்டோமோட்டிவ், எலெக்ட்ரானிக்ஸ், மெகட்ரானிக்ஸ், ஃபயர் அண்ட் சேப்டி, மெட்டீரியல் சயின்ஸ், ஏவியானிக்ஸ், சிவில், பவர் சிஸ்டம், மைனிங்,  டெக்னோ லீகல், சூப்பர் ஸ்பெஷலைஸ்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் ஸ்பெஷலைசேஷன் இன் டெலிகாம் இன்பர்மேட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் பி.டெக். படிப்புகள் உள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்த்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஷில்லாங்கிலுள்ள  யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் கல்வி நிலையத்தில் பெட்ரோலியம், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் வித் ஸ்பெஷலைசேஷன் இன் கிளவுட் கம்ப்யூட்டிங் அண்ட் வெர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பி.டெக். படிக்கலாம். 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்த்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த இரு கல்வி நிறுவனங்களிலும் உள்ள படிப்புகளில் சேர்க்க UPESEAT  என்கிற பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். ஆக்ரா, அலகாபாத், சென்னை, தில்லி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும். அப்ஜெக்ட்டிவ் முறையில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களிலிருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கில காம்ப்ரிஹென்சனில் 30 கேள்விகளும், கரண்ட் அபையர்ஸ் அண்ட் அவேர்னஸ் பிரிவில் 20 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்கள். மூன்று மணி நேரங்களுக்குத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?: இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1,750. இதை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலமாக விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும் அல்லது குறிப்பிட்ட சில நகரங்களில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக் கிளைகளில் ரூ.1,750-ஐ ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பத்தையும், விளக்கக் குறிப்பேட்டையும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது ரூ.1,850-க்கான டிமாண்ட் டிராப்ட்டை ‘க்கஉகு UPES Fee Account ‘ payable at New Delhi / Dehradun   என்கிற பெயருக்கு எடுத்து அனுப்பி பெற்றுக்கொள்ளவேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பிரிண்ட் அவுட் எடுத்து, தில்லியில் உள்ள என்ரோல்மெண்ட் அலுவலகத்திற்கோ அல்லது டேராடூனில் உள்ள அலுவலகத்திற்கோ கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2014
நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி24.05.2014
விவரங்களுக்கு: www.upes.ac.in

வெளிநாடுகளில் படிக்க ஆர்வமா? : தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சீர்மரபைச் சேர்ந்த நாடோடி பழங்குடி இன மாணவர்களுக்கும்  நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும்  பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச்  சேர்ந்த மாணவர்களுக்கும் மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கு கல்வி உதவித்தொகை கிடைக்குமா என்று ஏங்கி நிற்கும் மாணவர்களும் உண்டு. வங்கிகளில் கடன் உதவி பெறலாம்தான். ஆனால், அதற்கான உத்தரவாதம் கொடுக்க அசையாச் சொத்துக்கு எங்கே போவது? தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களின் நிலைமையைக் கேட்க வேண்டாம். வறுமைச் சூழ்நிலையிலும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும்கூட அவர்களை கைதூக்கி விட மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டியது உள்ளது. இந்தச் சூழ்நிலையில், தாழ்த்தப்பட்ட மாணவர்களும் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு கல்வி உதவித்தொகையை மத்திய சமூக நீதி அமைச்சகம் வழங்குகிறது. தாழ்த்தப்பட்ட, சீர்மரபு பழங்குடியினர் மற்றும் நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்கான கல்வி உதவித்தொகையை மத்திய சமூக நீதி அமைச்சகம் வழங்குகிறது. வெளிநாடுகளில் முதுநிலை பட்டப் படிப்போ அல்லது பிஎச்டி ஆய்வுப் படிப்போ படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச்  சேர்ந்த 54 மாணவர்களுக்கும் சீர்மரபைச் சேர்ந்த நாடோடி பழங்குடியைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்த  2 மாணவர்களுக்கும் வெளிநாடுகளில் படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
என்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மெண்ட் துறையில் படிக்க 20 பேருக்கும் பியூர் சயின்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ்,  அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ் அண்ட் மெடிசின், இன்டர்நேஷனல் காமர்ஸ் அண்ட் அக்கவுண்டிங் ஃபைனான்ஸ், ஹியுமானிடிஸ், சோஷியல் சயின்ஸ் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளில் தலா 10 மாணவர்கள் வீதம் மொத்தம் 60 மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள். இதுதவிர, 5 பேருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கான மானியத் தொகை வழங்கப்படும். இந்த வெளிநாட்டுப் பயண மானியத் தொகையைப் பெறுவதற்கு, முதுநிலை பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு, ஆராய்ச்சி அல்லது பயிற்சி பெற மெரிட் ஸ்காலர்ஷிப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தக் கல்வி உதவித்தொகை பெற என்ன தகுதி வேண்டும்?
பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்கள் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அனுபவம் மிக்க விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் இளநிலை பட்டப் படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அனுபவம் மிக்க விண்ணப்பதாரர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.6 லட்சத்துக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த வருமான வரிக் கணக்கு மற்றும் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து ஊதியச் சான்றிதழையும் பெற்று அனுப்ப வேண்டும். அத்துடன் ஆட்சேபணை இல்லை  (என்.ஓ.சி.) சான்றிதழையும் பெற வேண்டும். ஏற்கெனவே இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாட்டில் படித்தவர்கள் மீண்டும் படிக்க இந்த உதவித்தொகை பெற முடியாது. அதேசமயம், ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் வரை இந்தக் கல்வி உதவித்தொகை பெற அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2013-14  கல்வி ஆண்டிலிருந்து படிக்க அட்மிஷன் பெற்றுள்ளவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். படிக்கச் சேர்ந்துள்ள கல்வி நிறுவனம் தர அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்களுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெறுவதற்கு முயற்சி செய்யும் தகுதியுடைய மாணவர்களுக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அந்த மாணவர்களுக்கு இந்தச் சலுகை ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடைய  இரண்டு பேர் சமநிலையில் இருந்தால், வயதில் மூத்தவர் அந்தக் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். வேலை பார்க்கும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து ஆட்சேபணை இல்லை சான்றிதழ் வாங்கி அனுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் படிக்க எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?
பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு நான்கு ஆண்டு காலத்துக்கும் முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டு காலத்துக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பிரிட்டன் தவிர அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளில் படிப்பதற்கு ஆண்டுக்கு 15,400 டாலர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பிரிட்டனில் படிக்கும் மாணவர்களுக்கு 9,900 பிரிட்டிஷ் பவுண்ட் வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் நாடுகளில் ரிசர்ச் மற்றும் டீச்சிங்  அசிஸ்டென்ஷிப் மூலம் சம்பாதித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பிரிட்டன் நீங்கலாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் படிக்கச் சேரும் மாணவர்கள் புத்தகங்கள், உபகரணங்கள், ஸ்டடி டூர், கருத்தரங்குகளில் பங்கேற்கச் செல்வதற்கான பயணச் செலவு, ஆய்வுக் கட்டுரையை டைப் செய்தல் பைண்ட் செய்தல் ஆகியவற்றுக்கான செலவுகளுக்காக ஆண்டுக்கு 1,500 டாலர் வழங்கப்படும். பிரிட்டனில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தச் செலவுகளுக்காக ஆண்டுக்கு 1,100 பவுண்ட் வீதம் வழங்கப்படும். விசா கட்டணம், மருத்துவ இன்சூரன்ஸ் கட்டணம், விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கும் உரிய உதவித்தொகை வழங்கப்படும். படிப்பு முடிக்கும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இருவரிடம் தலா ரூ.50 ஆயிரத்துக்கான உத்தரவாதப் பத்திரத்தைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலோ அல்லது கல்வி நிறுவனங்களிலோ அட்மிஷன் பெற வேண்டியது மாணவர்களின் பொறுப்பு. இந்திய அரசின் தூதரக உறவு உள்ள நாடாகவும் அங்குள்ள கல்வி நிறுவனம் தர அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். திருமணமான விண்ணப்பதாரர்கள், தாங்கள் படிக்கும் காலத்தில் மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பினால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் விண்ணப்பதாரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும். படிப்புக் காலத்தில் தவிர்க்க முடியாத அவசரக் காரணங்களால் தாய்நாட்டுக்கு வந்து செல்ல வேண்டியதிருந்தால்,  சம்பந்தப்பட்ட மாணவர்கள்தான் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். படிப்புக் காலத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாணவர்களின் படிப்பு குறித்து அங்குள்ள இந்தியத் தூதரகம், பல்கலைக்கழகத்திடம் அறிக்கையை கேட்டுப் பெறும். இந்த உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, படிப்பை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் பேராசிரியர் அந்தப் பல்கலைக்கழகத்தை விட்டு விட்டுப் போதல் போன்ற நிலைமைகளில் வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர அனுமதிப்பது குறித்து அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் முடிவு செய்யும்.

படிப்புக்காலம் முடிந்ததும் தேவையைக் கருத்தில் கொண்டு மேலும் இரண்டு ஆண்டு காலம் அந்த மாணவரை தங்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும். ஆனால், அந்தக் கால கட்டத்துக்கு நிதியுதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது. இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவிலேயே இருக்க வேண்டும். அரசுப் பணியில் இருந்து கொண்டே இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாடுகளுக்குப் படிக்கச்  சென்றவர்கள், திரும்பி வந்து குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது அரசுப் பணியில் இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது?
இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டு 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து படிப்புச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பிறந்த தேதிச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். வெளிநாட்டில் படிக்க பயண உதவித்தொகை கோரும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை தில்லியிலுள்ள சமூக நீதி அமைச்சகத்தின் சார்புச் செயலர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்குத் தகுந்த விண்ணப்பதாரர்களை மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தேர்வுக் குழு தேர்வு செய்யும். இந்த உதவித்தொகை பெறுவதற்கான தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்கள் சமூக நீதி அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விவரங்களுக்குwww.socialjustice.nic.in

10 April 2014

National Conference on Transdisciplinary Approach towards Computing - UCE, Nagercoil

Date of the Conference : 21 April 2014

Click here for more details

Mentoring Workshop for Fulbright-Nehru fellowships - CIA

Registration for the workshops is on first-come basis and the last date to register is
Friday, April 11, 2014.

Click here for more details

8 April 2014

ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி?

இவள் பாரதி

வீடு மாறினாலோ, வேலை காரணமாக ஊர் மாறினாலோ  நமது ஆவணங்களிலும் முகவரியை மாற்ற வேண்டியது அவசியம். குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

குடும்ப அட்டையில் முகவரி மாற்ற :  தேவையான ஆவணங்கள்:
முகவரி மாறியவுடன் முதலில் மாற்ற வேண்டியது கேஸ்  இணைப்பைத்தான். அதற்கு தற்போது குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தந்தை அளித்து கைப்பட ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் போதும். வீட்டு ஒப்பந்தம், கேஸ் இணைப்பின் ரசீது இவற்றின் நகல்களை இணைத்து குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

எங்கே விண்ணப்பிப்பது?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் எனில் 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். அதே மாவட்டத்தில் வேறு ஊரில் கடை மாற்றம் செய்யவேண்டுமெனில் 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுகா முகவரி மாற்றம் 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

தாமதமானால் என்ன செய்ய வேண்டும்?
வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளரிடமும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட  வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மாநில நுகர்வோர் மையத்தை 044  2859 2858 என்கிற எண்ணில் தொலைபேசியிலோ, consumer@tn.gov.in, schtamilnadu@gmail.com   என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு,

எங்கே விண்ணப்பிப்பது?
வேறு வாக்காளப் பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக படிவம்  8 A –ஐ பயன்படுத்தவேண்டும்.

மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPIC_CENTRE_ADDRESS.pdf   என்கிற இத்தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்ற: தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, இத்துடன் முந்தைய முகவரிக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் என்.ஓ.சி. (‡No objection Certificate) ) வாங்கி இணைக்க வேண்டும்.  

எங்கே விண்ணப்பிப்பது?
ஓட்டுநர் உரிமத்தில் தனது பெயரையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, பிறந்த தேதியையோ, முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால் அதற்கான சான்றையும், ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பமும் எழுதிக் கொடுத்தால் போதும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I / II அவர்களிடம் நேரில் கொடுக்க வேண்டும்.

கட்டணம்:
கட்டணம் 315 ரூபாய்தான்.

வங்கிக் கணக்கில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது.

எப்படி விண்ணப்பிப்பது?
கணக்கு இருக்கும் வங்கிக்குச் சென்று வங்கிக் கிளையை மாற்றம் செய்து தரக் கோரி ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பித்தால் போதும், உங்கள் வங்கிப் புத்தகத்தில் அந்தக் கிளையின் பெயரை எழுதிக் கொடுத்துவிடுவார்கள். பின்னர் அந்தப் புத்தகத்துடன் எந்த வங்கிக் கிளைக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அங்கு சென்று கணக்குப் புத்தகத்தைக் கொடுத்து, தேவையான ஆவணங்களையும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஒரு வாரம் முதல்  15 நாட்களுக்குள் மாற்றம் செய்து தந்துவிடுவார்கள்.

ஆதார் அட்டையில் முகவரி மாற்ற :
ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை.http://uidai.gov.in/update-your-aadhaar-data.html  என்கிற இத்தளத்திற்குச் சென்று ஆன்லைன் வழியாக அப்டேட் செய்துகொள்ளலாம். தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்னும் நிரந்த மையம் அமையாததால் தபாலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் அனுப்பலாம். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: http://uidai.gov.in/images/application_form_11102012.pdf

தமிழில் விண்ணப்பம் அனுப்ப :
UIDAI Regional Office
Khanija Bhavan, No.49, 3rd Floor,
South Wing Race Course Road, Bangalore -  01080-22340862

ஆங்கிலத்தில் விண்ணப்பம் அனுப்ப:
UIDAI Regional Office,
5th 7th Floor, MTNL Building,
B D Somani Marg, Cuff Parade, Mumbai – 400 005   
022  - 22186168  

மேலும் விவரங்கள் பெற: 1800-300-1947, help@uidai.gov.in

பாஸ்போர்ட்டில் முகவரி மாற்ற :
எல்லா ஆவணங்களையும் மாற்றிவிட்டு இறுதியாக பாஸ்போர்ட் முகவரியை மாற்ற வேண்டும். ஏனெனில் பாஸ்போர்ட் முகவரி மாற்றத்துக்குத் தேவையான ஆவணங்கள் அதிகம்.

தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை.

எங்கே விண்ணப்பிப்பது?
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் விண்ணப்பிக்கலாம் இவற்றுக்கு ஃபார்ம் 2 - ஐ பயன்படுத்த வேண்டும். (பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சிறு திருத்தங்கள் மேற்கொள்ள, பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை).

கட்டணம்:
இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆவணங்களில் முகவரியை மாற்ற  விரும்புவோர் கவனத்திற்கு
  • புதிய முகவரிக்கு ஆவணங்களை மாற்றும்போது முதலில் ஓர் ஆவணத்தில் முகவரியை மாற்றி, பின்னர் மற்ற ஆவணங்களை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும்.
  • முதலில் கேஸ் இணைப்பை மாற்றிவிட வேண்டும். பின்னர் அதை வைத்து குடும்ப அட்டையையும், குடும்ப அட்டையை வைத்து மற்ற ஆவணங்களையும் மாற்றிவிட்டு கடைசியாக பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • சில இடங்களில் நீங்கள் கொடுக்கும் ஆவணங்களுடன் கூடுதல் ஆவணம் கேட்டால் நோட்டரி பப்ளிக் வாங்கிக் கொடுக்கலாம்.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் என்ஜினீயர் பணி

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன்  நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், என்விரான்மெண்டல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், புரடெக்ஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
11.04.2014-ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 30  வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும்,  தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- (ஓ.பி.சி. மற்றும் பொது பிரிவினருக்கு), ரூ.100/- (மற்றவர்களுக்கு).
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அப்ஜெக்ட்டிவ் முறையில் நடைபெறும் தேர்வில், தாங்கள் படித்த படிப்பு தொடர்புடைய பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அத்துடன், ஜெனரல் அவேர்னஸ் மற்றும் ஆப்டிட்யூட்  முறையிலும் கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் சிறப்பிடம் பெறுவோருக்கு நேர்முகத் தேர்வும், உளவியல் தேர்வும் நடைபெறும்.  எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வுக்கு 15 மதிப்பெண்களும், தகுதித் தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஆக மொத்தம்  100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், தில்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 14 நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2014
விவரங்களுக்கு: www.ongcindia.com

இந்திய கடற்படையில் பைலட் பணி

இந்திய கடற்படையில் பைலட்டாகப் பணியாற்ற திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு  ஜனவரி முதல்  தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 19 வயதுக்குக் குறையாமலும் 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும் அதாவது 02.01.1991-ஆம் தேதியிலிருந்து 01.01.1996-ஆம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இந்த பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2014
விவரங்களுக்கு: www.nausena-bharti.nic.in

ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், மெட்டலர்ஜிகல், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 16  
நேர்முகத் தேர்வு நாட்கள்: 10.04.2014, 11.04.2014
விவரங்களுக்கு: www.rites.com

டிப்ளமோ படித்தவர்களுக்கு அணுசக்தி துறை வேலை!

ஹைதராபாத் மற்றும் தூத்துக்குடியில் இயங்கி வரும் அணுசக்தி துறையில் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிரெய்னி (category 1) பணிக்கு மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ  பெற்றிருக்க வேண்டும். இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 13 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 4 காலியிடங்களும், பொதுப் பிரிவினருக்கு 77 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 6 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள்  18 வயதுக்குக் குறையாமலும் 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும்,  தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

டிரெய்னி (category 2) பணிக்கு ஃபிட்டர், டர்னர், வெல்டர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கார்பெண்டர், பிளம்பர், ரிக்கர், லேப் டெக்னீஷியன், கெமிக்கல் பிளாண்ட் ஆபரேட்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 152 காலியிடங்களும், பொதுப் பிரிவினருக்கு 208 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 183 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு  ஏப்ரல் 14-ஆம்  தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 22 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.  ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும்,  தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/- (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது).

விண்ணப்பிப்பது எப்படி?:
1. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் தற்போதைய புகைப்படம், கையெழுத்து, வயதுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழையும் ஸ்கேன் செய்து கொள்ளவும்.
2. இணையதளத்திற்குச் சென்று செலானை பிரிண்ட் அவுட் எடுத்து வங்கியில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
3. பின்னர், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.04.2014
விவரங்களுக்கு: www.nfcrecruitment.in

பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப் பணிகளில் வேலை!

மிழ்நாட்டில் பொதுப்பணித் துறையில் உதவிப் பொறியாளர் பணிகளிலும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் உதவி இயக்குநர் பணியிலும் சேர விரும்புபவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வை எழுத வேண்டும்.

பொதுப் பணித்துறையில் தண்ணீர் வளத் துறையில் உதவிப் பொறியாளர் (சிவில்), பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவில் உதவிப் பொறியாளர் பணிகளில் சேர விரும்புபவர்கள் சிவில் என்ஜினீயரிங் அல்லது சிவில் அண்ட் ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பி.இ., படித்திருக்க வேண்டும். இன்ஸ்டிட்யூஷன் தேர்வில் சிவில் என்ஜினீயரிங் தேர்வில் ஏ, பி பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஓராண்டுக்குக் குறையாமல் சர்வே பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொதுப்பணித் துறையில் ஓவர்சீயர் அல்லது ஜூனியர் என்ஜினீயராக ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் அல்லது எல்சிஇ டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

பொதுப் பணித்துறையில் உதவிப் பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) பணியில் சேர விரும்புபவர்கள் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது இன்ஸ்டிட்யூஷன் தேர்வில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவை எடுத்து அதில் ஏ, பி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநர் பணியில் சேர விரும்புபவர்கள், மெக்கானிக்கல், புரடக்ஷன், இன்டஸ்ட்ரியல், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள், பத்தாம் வகுப்பு படித்து விட்டு பிளஸ் டூ அல்லது டிப்ளமோ படித்து விட்டு இளநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டியது அவசியம். தமிழ் மொழி அறிவு இருக்க வேண்டியது அவசியம். தேர்வு செய்யப்படுபவர்கள் உடல் தகுதி  சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது இருக்கும். இந்தப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு குறைந்தது 18 வயது ஆகி இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சாதிகளைச் சேர்ந்த விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. மற்றவர்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், அவர்கள்  30 வயதுக்கு உட்பட்டிருந்தாலும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்க முடியாது.

போட்டித் தேர்வு எப்படி இருக்கும்?

சென்னை, மதுரை, கோவை, சிதம்பரம், காஞ்சிபுரம், காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, உதகமண்டலம், வேலூர் ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம்.

முதல் தாள் ஜூலை 27-ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 1 மணி வரையிலும் நடைபெறும். இரண்டாம் தாள், அதே நாளில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து 4.30 மணி வரையில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. இதில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். முதல் தாளில் பட்டப் படிப்பு நிலையில் சம்பந்தப்பட்ட பாடங்களில்  200 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க 3 மணி நேரம் வழங்கப்படும்.

முதல் தாளுக்கு 300 மதிப்பெண்கள். இரண்டாம் தாளில் ஜெனரல் ஸ்டடீஸ் பாடத்தில் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து நடத்தப்படும் வாய்மொழித் தேர்வுக்கு 70 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வில் தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோர் 570-க்கு குறைந்தது 171 மதிப்பெண்களும் மற்றவர்கள் 228 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப் படிவத்துக்குக் கட்டணம் ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.125. அதாவது மொத்தக் கட்டணம் ரூ.175. ஏற்கெனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கெனவே பதிவு செய்து பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி பதிவு எண் பெற்றுள்ளவர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டியதில்லை. அவர்கள், தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேக்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம். தபால் அலுவலகம் அல்லது இந்தியன் வங்கி மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்னதாக புகைப்படத்தையும் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து புகைப்படத்தை சிடி அல்லது பென் டிரைவில் வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரருக்கு இ-மெயில் முகவரியும் மொபைல் எண்ணும் இருக்க வேண்டியது அவசியம். ஹால் டிக்கெட், நேர்காணல் அழைப்புக் கடிதம் போன்றவை இ-மெயில் முகவரிக்கே அனுப்பப்படும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பித்த பிறகு, அதனை பிரிண்ட் PDF முறையில்  சேமித்து வைத்துக் கொள்வதுடன் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு 11.59-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு : www.tnpsc.gov.in

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும்  என்ஜினீயரிங் பட்டதாரிகள்,  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் என்ஜினீயரிங் சர்வீசஸ்  தேர்வை எழுத வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான பல்வேறு பணிகளில் என்ஜினீயரிங் படித்த மாணவர்களை சேர்ப்பதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வை (IES) நடத்துகிறது. சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வை எழுதலாம்.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், சென்ட்ரல் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், இந்தியன் ஆர்டினன்ஸ் ஃபேக்டரிஸ் சர்வீஸ், சென்ட்ரல் என்ஜினீயரிங் சர்வீஸ் (சாலைகள்) குரூப் ஏ பணி, அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (பார்டர் ரோட்ஸ் என்ஜினீயரிங் சர்வீஸ்) குரூப் ஏ பணி, அசிஸ்ட்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர்  (பி அண்ட் டி பில்டிங் ஒர்க்ஸ்) குரூப் ஏ பணி, சர்வே ஆஃப் இந்தியா குரூப் ஏ சர்வீஸ், இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் (உதவி இயக்குநர் கிரேடு 1) ஆகிய பணிகள் சிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் மெக்கானிக்கல் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ் (கிரேடு ஏ), இந்தியன் ஆர்டினன்ஸ் ஃபேக்டரிஸ் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ், பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்ட்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் குரூப் ஏ, அசிஸ்ட்டெண்ட் நேவல் ஸ்டோர்ஸ் ஆபீசர் - கிரேடு 1 (இந்திய கடற்படை), சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல் அண்ட் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சர்வீஸ், அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (பார்டர் ரோட்ஸ் என்ஜினீயரிங் சர்வீஸ் - குரூப் ஏ), இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், அசிஸ்டெண்ட் எக்ஸ்கியூட்டிவ் என்ஜினீயர் ஜிஎஸ்ஐ என்ஜினீயரிங் சர்வீஸ் கிரேடு ஏ, இந்தியன் சப்ளை சர்வீஸ் (ஜேடிஎஸ் குரூப் ஏ), இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் உதவி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பணிகள் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல் அண்ட் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ், இந்தியன் ஆர்டினன்ஸ் ஃபேக்டரிஸ் சர்வீஸ், சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ் கிரேடு ஏ, இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், அசிஸ்ட்டெண்ட் நேவல் ஸ்டோர்ஸ் ஆபீசர் (கிரேடு 1), பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (கிரேடு ஏ), இந்தியன் சப்ளை சர்வீஸ் (ஜேடிஎஸ் குரூப் ஏ), இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் (அசிஸ்டெண்ட் டைரக்டர் கிரேடு 1)  ஆகிய பணிகள் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆஃப் சிக்னல் என்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ், பாதுகாப்பு அமைச்சகத்தில் அசிஸ்டெண்ட் எக்ஸிகியூட்டிவ் என்ஜினீயர் (குரூப் ஏ), சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ் (குரூப் ஏ), இந்தியன் ரேடியோ ரெகுலேட்டரி சர்வீஸ் (குரூப் ஏ), அசிஸ்டெண்ட் நேவல் ஸ்டேர்ஸ் ஆபீசர் கிரேடு 1 (கடற்படை), இந்தியன் சப்ளை சர்வீஸ் குரூப் ஏ, இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் என்ஜினீயர்ஸ், இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் (அசிஸ்டெண்ட் டைரக்டர் கிரேடு 1), இந்தியன் டெலிகம்யூனிக்கேஷன் சர்வீஸ் குரூப் ஏ, ஜூனியர் டெலிகாம் ஆபீசர் (குரூப் பி), ஆகிய பணிகள் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கானவை.

என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பட்டப் படிப்பை படித்திருக்க வேண்டும். இன்ஸ்ட்டியூஷன் ஆஃப் என்ஜினீயர்ஸ் அமைப்பு நடத்தும் ஏ மற்றும் பி பிரிவு தேர்வுகளை எழுதியிருக்க வேண்டும். இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர்ஸ் அமைப்பு நடத்தும் கிராஜுவேட் மெம்பர்ஷிப் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். ஏரோ நாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தும் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வில் (பகுதி 1 மற்றும் 2 அல்லது ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லண்டனில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் ரேடியோ என்ஜினீயர்ஸ்  அமைப்பு நடத்தும் கிராஜுவேட் மெம்பர்ஷிப் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியன் நேவல் ஆர்மமெண்ட் சர்வீஸ் (எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பணிகள்) மற்றும் என்ஜினீயர் (கிரேடு ஏ வயர்லஸ் பிளானிங் அண்ட் கோ ஆர்டினேஷன் விங், மானிட்டரிங் ஆர்கனைசேஷன்) பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு மேற்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்  அல்லது வயர்லெஸ் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ்,  ரேடியோ பிசிக்ஸ் அல்லது ரேடியோ என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளை சிறப்புப் பாடமாக எடுத்து எம்எஸ்சி படித்தவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 21 வயது ஆகி இருக்க வேண்டும்.  ஆனால்  30 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. அதாவது, 1984-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது 1993-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குப் பிறகோ பிறந்திருக்கக் கூடாது. பணியில் இருப்பவர்கள், தாற்காலிக பணியில் இருப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கான விதிமுறை விவரங்கள் இணையதளத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. உடல் தகுதியும் அவசியம் தேவை.

சென்னை, மதுரை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வு ஜூன் 20-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளாக இருக்கும். முதல் பிரிவில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். அதில் ஜெனரல் இங்கிலீஷ், ஜெனரல் ஸ்டடீஸ் ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் இருக்கும். இது அனைவருக்கும் பொதுவானது. இரண்டாம் பிரிவில் மாணவர்கள் தேர்வு செய்த என்ஜினீயரிங் பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிவில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வில் சிவில் என்ஜினீயரிங் பாடத்தில் நான்கு தாள்கள் உண்டு. இதில் முதல் இரண்டு தாள்களுக்கு விடையளிக்க தலா 2 மணி நேரமும் அதையடுத்துள்ள இரண்டு தாள்களுக்கு விடையளிக்க தலா 3 மணி நேரமும் வழங்கப்படும். இந்த நான்கு தாள்களுக்கும் தலா 200 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும். இதேபோல், மெக்கானிக்கல், என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களிலும் தேர்வு இருக்கும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு பர்ஸனாலிட்டி டெஸ்ட் நடத்தப்படும். அதற்கும் 200 மதிப்பெண்கள். இந்தப் போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்களையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பக் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் நேரடியாகச் செலுத்தலாம். பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளில் நெட் பேங்கிங் வசதிகளைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம் அல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசுத் துறையிலோ அல்லது அரசுத் துறை நிறுவனங்களிலோ நிரந்தரமாகவோ அல்லது தாற்காலிகமாகவோ பணி செய்து வருபவர்கள், இத்தேர்வை எழுத விரும்பினால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாங்கள் தேர்வு எழுத விரும்பும் மையம், எந்த என்ஜினீயரிங் பாடத்தில் தேர்வு எழுத விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த படிவத்தின் நகலை பிரிண்ட் அவுட் எடுத்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டியதில்லை. என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 21-ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.upsc.gov.in

4 April 2014

INDO-US Workshop on Advances in Solar Energy and Utilization-Fast Forward with Solar Mission-IES

Date of the workshop : 7 & 8 April 2014

Click here for more details 

CONVENER:
Dr. R. VELRAJ,
Professor and Director,
Institute for Energy Studies,
Anna University
Chennai 600025
Ph: 044-2235 7600
E-mail:enegrysolarindia@gmail.com
Mobile No: 09600278333

Workshop on Fluid Mechanics - Conducted by IIT Kharagpur - CWR

Date of the workshop : May 20 , 2014 to May 30, 2014

Click here for more details



Admin Team,
Project "T10KT", IIT Kharagpur
Vikramshila Building
Ground floor, Kalidas Auditorium
IIT Kharagpur, Kharagpur-721302
Tel: +91 3222 281497/ 281070
email: office_nmeict@iitkgp.ac.in

Post of JRF - Dept. of Mathematics at Anna University, Chennai 600 025.

Last date for submission of application : 07/04/2014

Click here for more details 

2 April 2014

நாளைய உலகம்: உஷாரான கூகுள்

இணையத்தில் ஒரு முகவரியை கொடுக்கும் போது அதற்கு முன்பு http அல்லது https என்ற வார்த்தைகள் இருக்கும். இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுமென்றால் httpக்கு பதிலாக https (hyper text transfer protocol secure) முறையை இயக்கத்தில் வைத்திருப்பது நல்லது.
ஜிமெயில் போன்ற இணையதளங்களில் http முறை பயன்படுத்தினால் ஒருவர் கணக்கை அடுத்தவர் கைப்பற்றுகிற ‘ஸ்னூப்பிங்’ பிரச்னை எளிதில் நிகழ்ந்துவிடக்கூடும். இதை தடுப்பதற்காக கூகுள் தனது ஜிமெயில் இணையதளத்தை https முறையில் இயங்கும்படி மாற்றியுள்ளது. அதே போல் பயனருக்கும் கூகுள் செர்வருக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றங்களை மறையாக்க ( encryption) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

Smartphone sales/ business development at Huawei India

Category: Sales / business development
Eligibility: Any college student
Stipend: Rs 5,000 per month
Location: Work from home

Testing Times

The Other Side of Testing
Most of us associate the word ‘testing’ with examinations that are imposed on us by schools and colleges. We believe that they are a rite of passage that we need to undergo in order to satisfy graduation requirements of educational institutions. Further, tests are paired with marks and ranks to gauge our performance relative to others. But testing need not necessarily be limited to externally mandated requirements or competitive purposes. In fact, self-testing, wherein we test our own abilities or knowledge, can be a powerful tool for learning that promotes understanding at a deeper and more sophisticated level.
Creating a test
In fact, creating a test itself can enhance your grasp of a particular subject. As a student, you typically prepare yourself to answer questions, but often posing questions can aid comprehension as you might see connections you didn’t notice before or come up with fresh insights or inferences. Further, generating a variety of types of questions in varying formats can help you see the material from new angles. Thus, your questions may require direct, inferential, analytical and open-ended responses. By framing exercises involving short-answers, extended essays, multiple-choice options, match the following or fill-in-the-blank activities, you will find that you can penetrate a text at multiple levels.
After creating your ‘test’, you may want to take a break before you actually take it. If time permits, you can do the test under exam-like conditions where you seclude and time yourself. But if you are pressed for time, you must at least try to answer the questions orally. When in doubt, refer to the text. If you still cannot answer a question, then you should probably consult your peers or professors.
Of course, it might be worthwhile to challenge yourself with one or two questions that you cannot answer readily. Even if you are not able to answer the questions, the very act of asking it will probably change the way you view the concept you are studying. Some questions may even pique your curiosity to seek further. In addition to asking your teachers for advice, you may be motivated to read beyond the confines of your text.
Improves delayed recall
Further, psychologists have documented an intriguing phenomenon called the “testing effect.” Professors Henry Roediger and Jeffrey Karpicke have found that the act of testing improves subjects’ delayed recall of material. Interestingly, testing was found to be superior at aiding students’ long-term retention compared to simply restudying content. In a paper published in Psychological Science, Roediger and Karpicke write, “Testing is a powerful means of improving learning, not just assessing it.” In another study, published in Science, Karpicke and Janell Blunt found that students who took a test were better at long-term recall than a group that engaged in concept mapping. Thus, once you have mastered a few chapters, it might be more prudent to test yourself instead of merely restudying the material. For reasons that are not entirely clear to psychologists, the act of retrieving information helps it stick better in your memory.
After you take your test, you will also have a better grip on how effectively you have studied. Were you able to answer most questions smoothly? If you were stymied by most of them, then you need to review the lesson again or probably even alter the way you study. Perhaps, you read the lesson in a cursory fashion without processing the content at a deeper level.
Self-testing can be an effective measure of your study habits and can sharpen your meta-cognitive awareness, which is a personal reflection of how your inner faculties operate. You will realise whether you have been an attentive reader or if your mind has been drifting during some sections. You may find that it is not enough for you to revise the content a couple of times; memorising dates in history may take longer and require more effort on your part. As you begin to fathom under what conditions you learn and remember best, and what you need to do in order to understand a concept deeply, you will be able to optimise your study habits.
While testing can be a solitary activity, you may also find it useful to exchange test questions with your peers. In fact, a whole class of test-makers will be a formidable challenge for any professor to beat. When you have 40 minds devising tricky or complex questions, you are bound to have a valuable question bank at your disposal.
Students sometimes attempt question papers from previous years when studying. While old question papers can definitely be used to test yourself, don’t deny yourself the opportunity of being a test-creator. Finally, you must remember that the goal of education is not to crack tests but to learn and extend yourself.
The author is director, Prayatna. Email: arunasankara@gmail.com

Mobile & Embedded App Development at mNm Infomedia Technologies

Category: Mobile app development
Eligibility: College students
Stipend: Rs. 2,500 – 7,500 per month
Location: Bangalore, Hubli, Pune

Web Developer at SellerworX

Web Developer at SellerworX

Category: Software
Eligibility: College students
Stipend: Rs. 5,000-15,000 per month
Location: Bangalore

Relationship management at PUR Health Online Services

Category: Client servicing /customer support
Eligibility: College students
Stipend: Rs. 5,000 – 20,000 per month
Location: Hyderabad, Bangalore, Chennai

Come to the Education Plus Fair

The Chennai edition of The Hindu Education Plus Fair will be held on April 4 and 5 at Chennai Trade Centre, Nandambakkam, between 10 a.m. and 5 p.m. The fair is organised with the objective of providing an opportunity for students to interact with institutions/professionals about various options available for higher studies.
Several leading colleges, IT training institutions, banks and financial institutions will be participating in the two-day fair. Youngsters may make their choice of courses from the plethora of information available on the latest developments in the higher education field.
N. Ram, Chairman of Kasturi and Sons, will deliver the inaugural address. T.V.Mohandas Pai, Chairman, Manipal Global Education Services, will be the chief guest for the event. Dr. G. Viswanathan, Founder and chancellor, VIT university, will preside. A comprehensive career guidance book, The Nxt Step, will be released on the occasion by the chief guest.
On both days, there are talks and presentations by experts from various fields and the floor will be open for Q and A sessions with the speakers. A free psychometric test will be offered by Bodhi on April 5, 3 p.m.
The fair will be a platform to showcase education opportunities across the country and facilitate representatives of institutions to interact with students. VIT University is the presenting sponsor. Bharath University, Dr. MGR University and Vel's University are associate sponsors.
For details and reservations for stalls, contact 98414-16933

Countdown JEE

With the exam just a week away, here are tips to help you crack the test.

The focus now shifts to the Joint Entrance Examination (JEE) which will decide the course of many an engineer aspirants’ career. The paper pen phase of the 2014 edition of the JEE-Mains is scheduled for April 6 and the online examinations will be conducted on April 9, 11, 12 and 19. Let’s look at some last-minute tips for the largest engineering entrance examination in India. The duration of the examination is three hours and will test the candidates on physics, chemistry and mathematics.
Pay attention
Traditionally, mechanics has been the heavy weight test area in physics. Definitely include the areas such as laws of motion, rotational motion, work, power, energy and kinematics in the plan for the final revision. Also do keep in mind that these areas are not compartmentalised as they are presented in your text books. It pays to complete your revision in all the areas mentioned with a comprehensive look at the multiple choice questions you have had difficulty during the model exams. Pay attention to the units and dimensional formulae. Electrostatics, current electricity and magnetism forms the other important set of topics in physics. Together, these two sets of topics have accounted for more than 80 per cent of questions in several of the past editions of the exam. Application questions using Young’s modulus, Bernoulli’s principle etc. are relatively easy, and so, do pay special attention to these while revising. Compared to mechanics, the section on properties of solids and liquids involves more memorising. At the same time, the questions can be presented as a contextual case study.

Revisit the basics
Physical chemistry, organic chemistry and inorganic chemistry have taken up weightages in the ratio of 4:3:3 in the past several years of AIEEE/JEE-Mains examinations. While the questions in physical chemistry could be calculation intensive, the questions in organic and inorganic chemistry will require the ability to immediately bring to mind the several properties of compounds and the manner in which they react with other substances. Most students have one favourite area from among the three. While it is okay to start searching for questions from that area in the actual test, complete your revision in all areas. Many a time, students leave out questions from a less favourite area that could otherwise have been done with ease, just because they did not spend time on the last minute refreshing. It’s a good tactic to revisit the very basics of atomic structure and chemical bonding.
Since you have learned this at the very beginning of Class XI, it will require preparation. Chemical thermodynamics and chemical kinetics is a test area students make relatively more mistakes while actually getting into the final solving phase. Special attention is required for studying the rates of reactions and the concentration of reactants.

Capture standard formats
Calculus – starting from differentiability, integral calculus and differential equations has remained the single largest test area. These topics together have accounted for just over 40 per cent in several versions of the examination over the years since its inception in 2004. The other heavyweights in mathematics are trigonometry, coordinate geometry and complex numbers. There are several patterns of questions — those that are called standard formats. Your revision should capture all the standard formats of equations so that you are able to immediately identify them in a question. This is almost one-third of the work done. If you are able to generally fix the direction of the question, the remaining task will be to work out the specific problem with respect to the variables mentioned.
Margin for error in this examination where more than 10 lakh students compete for admission is very limited. Just a couple of questions can make a big difference in your overall rank. So prepare well and let it show in your performance.

The writer is director, T.I.M.E. Chennai

1 April 2014

பேலன்ஸ் எதுக்கு? ஃப்ரீ கால் இருக்கு!

செல்போனில்  பேலன்ஸ் இல்லாதவர்கள் இலவசமாகப் பேச ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது

இப்போதெல்லாம் மாதச் செலவில் பாலுக்கு, பேப்பருக்கு என்று எடுத்துவைப்பது போல் செல்போனுக்கு என்று தனியாக பணம் எடுத்து வைக்கும் அளவுக்கு வீட்டில் இருக்கும் அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. என்னதான் கால் பூஸ்டர், மெசேஜ் பூஸ்டர் என்று போட்டாலும் 500 ரூபாய்க்கு குறையாமல் செல்போன் விழுங்கி விடும். ‘கவலையை விடுங்க. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லோருமே இலவசமாகப் பேசலாம்’ என்கிறார்கள் பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள்.

யாஷ்வாஸ் சேகர், விஜயகுமார் உமலுட்டி மற்றும் சண்டேஷ் ஈஸ்வரப்பா  என்கிற மூன்று மாணவர்களும் இணைந்து ஃப்ரீகால்(Freekall) என்கிற இலவச அழைப்புச் சேவையைக் கண்டுபிடித்து ஒரு நிறுவனமாக்கியிருக்கிறார்கள்.  இதன்மூலம் பேசுவதற்கு நம் போனில் பேலன்ஸ் தேவையில்லை. ஏற்கெனவே ஸ்கைப், வைபர், ஃபேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தி இலவசமாகப் பேசலாம் என்றாலும் அதற்கு எல்லாம் இணையம் தேவை. ஆனால் ஃப்ரீகாலுக்கு இணையம் கூடத் தேவையில்லை. நமது அலைபேசியில் இருந்து 080-67683693 என்கிற எண்ணுக்கு அழைத்தால் போதும், அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டு நமது அலைபேசிக்கு அழைப்பு வரும். அந்த அழைப்பை ஏற்றவுடன் நாம் பேச வேண்டிய எண்ணை பதிவு செய்யச் சொல்லி கணினியின் குரல் கேட்கும். நாம் எண்ணைப் பதிவு செய்தபின்பு பேச வேண்டிய நபருக்கு இணைப்பு கொடுக்கப்படும். இதன் செயல்முறை டிரங்க் கால் போல் இருந்தாலும் இது முழுக்க முழுக்க மேகக் கணிமை(Cloud computing) முறைப்படி இயங்குகிறது. ஜிமெயில், ஃபேஸ்புக் போல் இதற்கும் கணக்கை உருவாக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்கள் பன்னிரண்டு நிமிடங்கள் பேசலாம். கணக்கு இல்லாதபட்சத்தில் மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசமுடியும்.

இதை முதற்கட்டமாக பெங்களூருவில் சோதனை செய்து பார்த்தபோது மிக அதிக அழைப்புகள் வந்ததால் ஃப்ரீகாலின் சர்வர் ஏழு முறை பழுதடைந்து விட்டது. இதனால் தற்போது அதிகத் திறன் உள்ள சர்வர் பொருத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ஆம் தேதியில் இருந்து இந்தியா முழுமைக்கும் இந்தச் சேவை செயல்படுத்தப்படும் என்றும், ஒரே நாளில் இந்தியா முழுக்க ஒரு கோடி அழைப்புகள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஃப்ரீகால் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்கவில்லையே தவிர, வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது. அதாவது நீங்கள் டயல் செய்யும் போது ரிங்கிற்கு பதிலாக விளம்பரங்கள் ஓடும். அதே போல் பேசும் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு நடுவே விளம்பரம் ஒலிபரப்பப்படும். இதன் மூலம் வருடத்திற்கு நூற்றி எண்பது கோடி வரை வருமானம் பெறமுடியுமாம். இந்தியா மட்டுமில்லாமல் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் ஃப்ரீகாலுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்று ஃப்ரீகால் நினைக்கிறது. அதனால் ஆரம்பிக்கும் போதே உலகம் முழுக்க ஆரம்பிக்கலாமா என்று ஃப்ரீகால் யோசித்து வருகிறது.  ஃப்ரீகால் கணக்கை  http://www.freekall.in/ என்கிற இணையதளத்தில் சென்று பதிவுசெய்து கொள்ளலாம். https://www.facebook.com/freekall  என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் அவர்களது செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளலாம்.