14 January 2015

Gateway to success

The Graduate Aptitude Test in Engineering (GATE) exam is all set to begin from January 31. Conducted jointly by the Indian Institute of Science (IISc.) and seven Indian Institutes of Technology, IIT Kanpur is the organising institute for GATE 2015.
The score in the all-India exam, of which the results are expected on March 12, will be used for admissions to postgraduate programmes (M.E., M.Tech, direct Ph.D.) in Indian institutes of higher education with financial assistance provided by the Ministry of Human Resource Development and other government agencies, as well as by public and private sector undertakings for employment screening purposes.
Among the major changes to look forward to this year are the registration process and the test going online, and the inclusion of numerical answer questions apart from multiple choice questions.
Experts share a few last minute tips on preparations. Abhijit Chaudhari, Director, Gateforum, said with the exam going online, a lot of practice would be needed to familiarise oneself with a computer-based test. “A peculiar problem that can arise in GATE, where some questions might need workings to be done on a complicated figure/diagram (in case of a paper-based test the same can be done on the question paper itself), is that of replicating the diagram. Students might need to practice on that.”
With reference to the exam pattern, he said the GATE paper will consist of a total of 65 questions carrying 100 marks, out of which 10 questions carrying a total of 15 marks are in General Aptitude (GA). The test will have both Multiple Choice Questions (MCQ) carrying one or two marks each in all papers and sections; and Numerical Answer Questions of one or two marks each in all papers and sections. “For these questions, one has to enter an answer, instead of choosing among four options. Guesswork is eliminated and hence one cannot bet on luck or a solution based on elimination of wrong options.”
Students aiming particularly for a seat in the IISc., he said, must target a GATE rank less than 100.
Amartya Singh, Director, T.I.M.E., said with a low student qualification rate, one of the major focus areas in the exam has been a few fundamental subjects. “These subjects are not only doable, they are also mark-scoring. They need to be mastered first. A strong understanding of these subjects helps in doing well in other subjects.” In addition to extensive problem practice, he said, “There are questions which require smartness to identify the right approach rather than the conventional approach. A student should know the right tricks and strategies which can help in saving time and increasing accuracy.”

Thanks to : The Hindu | 11.01.2015

Book Review : 9

மனதோடு ஒரு உரையாடல்

மன ஓட்டங்களை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து நாம் எதை, எப்படி, ஏன் செய்ய வேண்டும் என விளக்கும் புத்தகம். வாழ்க்கையைச் சரியாக புரிந்து கொள்ள,எளிய விளக்கங்கள். மனதைப் புரிந்து கொள்ள,பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற உதவும் நூல்.

மனதோடு ஒரு சிட்டிங்

ஆசிரியர்- சோம. வள்ளியப்பன்
வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ்
10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,
தி.நகர்,சென்னை- 600 017

விலை- ரூ 85 தொடர்புக்கு:7200050073 

Book Review : 8

விஞ்ஞானிகளின் உழைப்பின் கதை

இந்திய விஞ்ஞானிகள் 40 பேரின் வாழ்க்கையை நமக்கு விளக்கும் நூல். இன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பின் பின்னாலும் எவ்வளவு வலிகளும், உழைப்பும், இருக்கின்றன என்பதை நம்முன் வைக்கிறது. இதை வாசிப்பவரின் கனவு விரியும். நம்பிக்கை வலுப்படும். உற்சாகம் பிறக்கும்.

அக்னிச் சுடர்கள்

(அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்),
அரவிந் குப்தா, தமிழில்- விழியன்,
வெளியீடு:புக்ஸ் ஃபார் சில்ரன், 7,இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை 600 018,

விலை: ₹ 160, தொடர்புக்கு: 044-24332424 

சாதனையாளருக்குப் பின்னால்

 # இந்தியக் கிரிக்கெட்டின் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ எனக் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர்,
# இந்திய மண்ணின் மைந்தர்களால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் விப்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் அசிம் பிரேம்ஜி,
# பாலிவுட் திரைப்பட உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆமிர் கான்,
# பெண்களுக்கான சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பலவற்றில் முதல் பரிசு வென்று, பத்மபூஷண், அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர் இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனை மேரி காம்,
# ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி

இவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறதா?
இவர்கள் அனைவரும் இந்தியர்கள், அவர்களுடைய துறைகளில் மாபெரும் சாதனைகள் படைத்தவர்கள். அதே நேரத்தில் இவர்கள் அனைவரும் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டு நின்றவர்கள்.

கல்வி தேவையா?
வாழ்வில் வெற்றி பெறக் கல்வி அவசியமில்லை எனச் சொல்வதற்காக இவர்களைப் பட்டியல் போடவில்லை. அது மிகத் தவறான பார்வையும்கூட. கல்வி என்பது தனிமனித உரிமையாகும். 40 சதவீத இந்தியக் குழந்தைகள் எட்டாம் வகுப்பு படிப்பை முடிக்கும் முன்னரே படிக்கும் வாய்ப்பை இழக்கும் கொடுமையான சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்கிறது 2014-ல் யூனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவு.
அதற்குச் சமூக, பொருளாதார அமைப்பில் இருக்கும் பல சிக்கல்கள் காரணமாக இருக்கின்றன. ஆனால் அவை அல்லாமலும் ஒரு அச்சுறுத்தும் சிக்கல் நிலவுகிறது. அதுதான் வித்தியாசமான அறிவுடையவர்களை அணுகும்விதம்.

வித்தியாசம்தான் சிக்கலா?
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றுத்திறனாளியாக இருப்பவர்களுக்கும் உரிய மதிப்பும், அங்கீகாரமும் அளிக்கப்பட வேண்டும் எனச் சொல்லும் நாம் மாற்று அறிவு கொண்டவர்களையும் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா!
ஆரம்பத்தில் பட்டியலிடப் பட்ட ஆளுமைகள் அப்படிப்பட்டவர்கள்தான். இவர்களுடைய கல்வியைத் துண்டித்தது எது? பொருளாதார நெருக்கடியோ, சமூகச் சூழலோ அல்ல. வழக்கமான கல்வித் திட்டம் என்ற சட்டகத்துக்குள் பொருந்தாதவர்களாகத் திகழ்ந்ததே காரணம்.
ஆனால் அதே சமயம் கல்விக் கூடங்களில் சராசரியான மதிப்பெண்கள் பெறவே தத்தளித்த இவர்கள் எப்படி அனைவரும் வியந்து பார்க்கும் ஆளுமைகளாகப் பரிணமித்தார்கள் என்ற கேள்வியும் உள்ளது. வாருங்கள்! கார்டனர், கில்ஃபோர்ட், டன் அண்ட் டன் போன்ற கல்வி மற்றும் உளவியல் நிபுணர்களின் துணையோடு இந்தக் கேள்விக்கான விடையைக் காண்போம்.

குவிந்தல்ல விரிந்து
கற்றுக் கொடுக்கப்படும் கருத்துகளைக் கோர்வையாக மனதில் பதித்துப் பின்னர் ஒப்பிப்பது, மற்றும் எழுதுவது இவற்றைத்தான் நம் கல்வி கூடங்கள் மாணவர்களிடம் எதிர்பார்க்கின்றன. இத்தகைய ஆற்றல் மொழி மற்றும் கணிதத்திறன் கொண்டவர்களிடம் இயல்பாக இருக்கும். அவர்களால் வகுப்பில் சொல்லித்தரப்படும் பாடங்களைப் பின் தொடர்ந்து, படித்துப் பின் படிப்படியாக எழுத முடியும். ஆனால் உடல் ரீதியான அறிவுத்திறன் மற்றும் காட்சி ரீதியான அறிவுத்திறன் கொண்டவர்களால் இப்படிப் படிக்க முடியாது.
அதிலும் காட்சி ரீதியான அறிவுத்திறன் கொண்டவர்களால் ஒரு கருத்தைக் காட்சியாகப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள முடியும். புவியியல், வடிவியல், மெக்கானிக்கல், கட்டுமான வேலைகள், வரைபடம் வரைதல் என இடம், வெளி தொடர்பான விஷயங்களில் பிச்சு உதறுவார்கள். ஆனால் இலக்கணம், கணினி சூத்திரம், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களின் சூத்திரங்களில் தடுமாறுவார்கள். புத்தகப் பாடங்களில் இடறுவார்கள். ஆனால் செயல்முறை பாடத்தில் அசத்துவார்கள். இவர்களுடைய மூளை இயங்கும் போது ஒரே ஒரு விஷயத்தில் குவிந்து செயல்படாது. மாறாகப் பரந்து விரிந்து காட்சிப்படுத்திச் செயல்படும்.

தோல்வி ஆனால் வெற்றி
அறிவை அளவிடும் முறையான ஐ கியூ தேர்வில், விஐகியூ (Verba#Intelligent Quotient (VIQ) எனப்படும் மொழி மற்றும் கணித அறிவுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் வகுப்பில் முதலிடம் பெறுகிறார்கள். ஆனால் வெளி உலகில் வெற்றி பெற விஐ கியூ மட்டும் போதாது. அங்குத் தேவை செயல்திறன் அடிப்படையிலான ஐகியூதான். இதை ஆங்கிலத்தில் Performance Intelligence Quotient (PIQ) என்கிறார்கள். இந்தப் பிஐகியூ என்பது மொழி அறிவுத்திறன் மட்டுமே உடையவர்களைக் காட்டிலும் காட்சி ரீதியான அறிவுடையவர்களிடம் அதிக அளவில் காணப்படும். அதனால்தான் வழக்கமான படிப்பில் பின்தங்கியிருந்த பலர் நிஜ உலகில் ஜொலிக் கிறார்கள். அப்படிப்பட்ட பிஐ கியூவை வளர்த்தெடுக்கும் வகையில் நம் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவந்தால் நம் கல்விக் கூடங்களுக்குள்ளேயே சச்சினும், ஆமிர் கானும், அசிம் பிரேம்ஜியும், மேரி காமும், முகேஷ் அம்பானியும் உருவெடுப்பார்கள். 

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துபவை புத்தகங்களே

 சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் ‘நூலக உலகம்’ மாத இதழ் மற்றும் ‘உத்தம நாயகன்’ நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
இன்றைய காலத்தில் பத்திரிகை நடத்துவது எளிய காரியமல்ல. தற்போது படிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் பொதுமக்களா? எழுத்தாளர்களா? பதிப்பாளர்களா? அல்லது வெளியீட்டாளர்களா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் புத்தகங்களை வாசிக்கும் போதுதான் உலகைப் பற்றிய, இந்த சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு உண்டாகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முக்கிய சட்டங்களைக்கூட மக்கள் இன்னும் சரிவர அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இத்தகைய நிலை மாற நூல்களைப் படிக்க வேண்டும்.

சமூக அக்கறையும் விழிப்புணர்வும் அருகி வரும் இன்றைய காலத்தில் அவற்றைத் தூண்டும் வல்லமை படைத்தவை நூல்களே. இளைஞர்கள் நூல்களைப் படிக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.