31 January 2014

TOP BANKS OFFERING EDUCATIONAL LOAN TO ENGINEERING STUDENTS

There are several top banks for educational loans which are provided to the engineering students in India. People approach different banks offering loans for engineering because of the increasing expenditure in this educational sector. The basic documents which are required for applying for such loans can be stated as follows:

1. Confirmation of admission of the student under a properly affiliated engineering college in India
2. Age proof
3. Residential proof
4. Agreement of parents or guardians with the student
5. The performance report of the student at secondary and higher secondary level examination
6. Income certificate of the parents, IT files and other proofs of steady source of salary

Banks offering educational loan to engineering students are summarized below:

1. State Bank of India Education Loan Scheme: This government bank provides educational loans for engineering students under Diploma or technical Degree. The college must be approved under AICTE/Govt. /UGC. Students studying at IIT and IIM can also apply for this loan. A maximum amount of Rs.10 Lakhs can be accepted by this bank if the student wants to study engineering in India. Expenses like tuition fees, caution deposits, examination fees, cost of any two-wheeler, having a maximum amount of Rs.50, 000 are all borne in the loan sanctioned by this bank. The interest rate is applied as per the RBI regulations.

2. Canara Bank educational loan: This bank provides loan to engineering students up to an amount of Rs10.5 Lakhs for studying in India. The interest rate charged by Canara Bank is 10.5% of the base amount.

3. HDFC Bank Educational Loan: HDFC bank offering loans for engineering covers 90% of the entire cost as determined through HDFC. This bank lends a maximum amount of Rs.2 Lakhs. The interest rate charged by HDFC Bank is 14%.

4. UCO Bank: This bank lends up to an amount of Rs.4 Lakhs for pursuing an engineering degree in India. The hostel fees, books or journal expenditures are also covered under this education loan scheme.

5. IBDI Bank Education Loan Scheme: Under this scheme the annual income of the family must be more than Rs.3 Lakhs. The student must secure at least 75% marks in the 12th standard for getting educational loans for engineering students.

6. Vijaya Bank Educational Loan: An amount up to Rs 4 Lakhs is provided to engineering students. The margin is of 25% above the amount of Rs.25,000. Here the mode of repayment is 6 months after completion of the course or 3 months after the students get a job.

ஐஏஎஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

ஜி.மீனாட்சி

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஐஏஎஸ் தேர்வை எதிர்கொள்வது குறித்தும் அளித்த பிரத்யேகப் பேட்டி:
அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் நடத்தும் இலவசப் பயிற்சியில் சேர என்ன தகுதி வேண்டும்? மாணவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் ஆர்வலர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவும், இருப்பிடமும், பயிற்சியும் இங்கு இலவசம்.
ஆதிதிராவிட பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்களுக்காக தனித்தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. தமிழக அரசு அவற்றை ஒருங்கிணைத்து ஒரே மையமாக பிப்ரவரி 2000 முதல் நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் நுழைவுத் தேர்வின் மூலம் முதல்நிலைத் தேர்வுக்கு (Preliminary Examination) 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிறகு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி (Main Examination)  அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மெயின் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே மாதிரி ஆளுமைத்தேர்வு (Mock-Interview) நடத்தப்படுகிறது. அவர்கள் புதுதில்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட சலுகைக் கட்டணத்தில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க அனுமதி வழங்கப்படுகிறது.
இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் 800 ரூபாயாக இருந்தது. இப்போது அரசு அதை 2,000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. பிரதானத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் ஊக்கத் தொகையும், ஆளுமைத் தேர்வுக்கு தில்லி சென்று வர 200 ரூபாய் வழிச் செலவுக்கும் அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தில் சேர ஒரு நுழைவுத் தேர்வை நாங்கள் நடத்துகிறோம். பட்டப்படிப்பு முடித்த யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். வெளியிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அரசாங்க அடையாள அட்டை அளிக்கப்பட்டு வகுப்புகளுக்கு வரவும், நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இங்கிருக்கும் நூலகம் போட்டித் தேர்வுகள் எழுத அனைத்து வசதிகளும் கொண்ட அருமையான நிலையமாகும்.  இங்கு 21,000 புத்தகங்கள் உள்ளன. கணினிக்கென்றே தனி அறையும் உள்ளது. இங்குள்ள கருத்தரங்குக் கூடம் குளிர்சாதன வசதி கொண்ட அருமையான அரங்கமாகும்.
இந்த நிறுவனத்திலேயே இரண்டு பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் சிறந்த பேராசிரியர்களும், வல்லுநர்களும் அழைப்புப் பேராசிரியர்களாக தருவிக்கப்படுகிறார்கள். இந்த நிறுவனத்தில் பயின்று வெற்றி பெற்ற அலுவலர்களும் அவ்வப்போது தன்னம்பிக்கையூட்டும் உரைகளை வழங்கி இந்த மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றார்கள்.  தில்லி போன்ற நகரங்களில் பயிற்சி மையம் நடத்தும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணிபுரிகிறவர்களையும் அவ்வப்போது பாடங்களை நடத்தவும், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தவும் பயன்படுத்திக் கொள்கிறோம். மாணவர்களே விருப்பப்படும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். சில நேரங்களில் தனியார் நிறுவனங்களில் படிக்கிற மாணவர்களும் இங்கு வந்து வகுப்புகளை கவனிக்க தடையேதும் நாங்கள் விதிப்பதில்லை. தமிழகத்திலிருந்து நிறைய பேர் இப்பணிகளுக்குச் சென்று, நம் பெருமையை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா.


இந்தப் பயிற்சி மையத்தில் எத்தனை பேர் பயிற்சி பெறுகிறார்கள்? எத்தனை பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்?
முதன்மைத் தேர்வுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தயாராவோருக்காக மாதிரி நேர்முகத் தேர்வை (Mock Interview) நடத்துகிறீர்களா?
வருங்காலத் திட்டங்கள் எவை?
பவானி சாகரில் அரசு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற அலுவலர்களுக்கு இரண்டு மாத அடிப்படைப் பயிற்சியும், துணை வட்டாட்சியர்களுக்கு 28 நாட்கள் இடைநிலைப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.
இந்திய வனப்பணி, முதல் பிரிவு போட்டித் தேர்வு போன்றவற்றிற்கும் அறிமுகப் பயிற்சியை நடத்தலாம் என்று பரிசீலித்து வருகிறோம். அது தவிர அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை குழு விவாதமாகவும், கலந்துரையாடலாகவும், ரோல் ப்ளேவாகவும் நடத்தி பயிற்சியை வாழ்க்கையோடும், பணியோடும் தொடர்புபடுத்தும் விதமாக மாற்ற இருக்கிறோம். இப்போது தமிழக அரசு 36.23 கோடி ரூபாய் ஒதுக்கி, பவானி சாகரில் மிகச் சிறந்த பயிற்சிக் கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 
இங்கு பயிற்சியாளர்களுக்கு நல்ல நூலகம், கணினி அறை, விளையாட்டுக் கூடங்கள், கருத்தரங்கக் கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் நான்கு ஐந்து மாதங்களில் இந்தப் பயிற்சி மையம் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பயிற்சி தரப்படாமல் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இங்கும் அழைப்புப் பயிற்சி அளிப்பவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே ஒட்டு மொத்தமாக பயிற்சியின் தரத்தை எல்லா வகைகளிலும் பயனுள்ளதாக மாற்றி வருகிறோம். பயிற்சியாளர்களும் இந்த மாற்றங்களை நேசித்து முழுமையாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் போட்டிகள், படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்தும் சஞ்சிகைகள் போன்றவற்றை ஏற்படுத்தி பயிற்சியை அயர்ச்சியில்லாத அனுபவமாக மாற்றியிருக்கிறோம்.


சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களிடம் தாங்கள் காணும் பொதுவான குறைபாடுகள் என்ன?
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவது எப்படி?  
இத்தேர்வை எழுத குறைந்தபட்ச வயது  21.  பொதுப் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 30.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35.  பொதுப்பிரிவினர் நான்கு முறையும்,  பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 7 முறையும், தாழ்த்தப்பட்டவர் வயது வரம்பு முடியும் வரையும் எழுதலாம்.
இந்தத் தேர்வை எழுதுவதற்கு பொது அறிவிலும்,  நுண்ணறிவிலும் அதிகத் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்.  தற்சமயம் பிரிலிமினரி தேர்வில் ஒருவருடைய ஆராயும் திறனை அறிய சிவில் சர்வீஸ் ‘ஆப்டிடியூட் டெஸ்ட்‘  நடத்தப்படுகிறது.  அதற்கு மொத்த மதிப்பெண்கள் 200.  இரண்டாவது தாள் பொது அறிவு.  அதற்கும் 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இவை மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்.  இதில் சுமார் 10,000 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் அடங்கும்.
மெயின் தேர்வைப் பொருத்தவரை, பொது அறிவுத் தாள்கள் நான்கு  இருக்கின்றன.  அவற்றிற்கு 250 வீதம் 1000 மதிப்பெண்கள் உண்டு.  அடுத்ததாக கட்டுரைத்தாள் ஒன்று உண்டு.  அதற்கு 250 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  ஆறாவதாக ஒரே ஒரு விருப்பப் பாடத்தில் இரண்டு தாள்கள் தலா 250 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன.  இவை அன்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரு தாள் தகுதி பெறுவதற்காக நடத்தப்படுகிறது.  தமிழைப் படிக்காதவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் தேர்வை எழுதலாம்.  இந்தத் தாள்களில் பெறும் மதிப்பெண்கள் ரேங்கை நிர்ணயிக்க எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
முதன்மைத் தேர்வில் முதல் 2 ஆயிரம் இடங்களை பெறுபவர்கள் ஆளுமைத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.  ஆளுமைத் தேர்விற்கு மொத்தம் 250 மதிப்பெண்கள்.
ஆளுமைத் தேர்விலும்,  பிராதனத் தேர்விலும் பெறும் மதிப்பெண்களைக் கூட்டி இறங்கு வரிசையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  முதல் 600 இடங்களைப் பெறுபவர்கள் ஏதேனும் ஒரு பணியை கண்டிப்பாக பெற்றுவிடலாம்.
சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராக வேண்டும் என எண்ணுபவர்கள் பள்ளிக் காலம் தொட்டே செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும்.   பொது அறிவுப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். தகவல் தொடர்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  பொருளாதாரம், கணிதம், அறிவியல், அரசியல், நாட்டு நடப்பு,  அரசியல் அமைப்புச் சட்டம், புவியியல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.  கல்லூரியில் இந்தத் தேர்வு எழுதுவதற்குத் தோதாக இளங்கலைப் படிப்பையோ, இளம் அறிவியல் படிப்பையோ தேர்ந்தெடுக்க வேண்டும்.  பாடப் புத்தகங்களோடு நிறுத்திவிடாமல், நிறைய மேற்கோள் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.  முடிந்தால்  நிறைகலைப் படிப்பை தில்லி போன்ற இடங்களில் தொடரலாம்.  தேர்விற்குத் தயாரவது என்று முடிவு செய்த பிறகு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது படிக்க வேண்டும்.  விடா முயற்சியும் , அர்ப்பணிப்பும், அகலாத கவனமும், மாறாத ஆர்வமும் சேர்ந்தால் வெகு எளிதில் இதில் வெற்றி பெற்றுவிடலாம். 


ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவில் வலம் வரும் இளைஞர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைக் குணங்களாக நீங்கள் கருதுவது என்ன?

தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 300 பேர் ஒவ்வொரு வருடமும் பயிற்சி பெறுகிறார்கள். 2000 முதல் 2012-ஆம் ஆண்டு வரை 432 தமிழக மாணவர்கள் பல்வேறு குடிமைப்பணி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நம்முடைய பயிற்சி மையத்திலிருந்து 2010-ஆம் ஆண்டில் 48 பேரும், 2011-ஆம் ஆண்டில் 47 பேரும், 2012-ஆம் ஆண்டில் 49 பேரும் அகில இந்திய அளவில் உயர்ந்த இடங்களைப் பிடித்து தேர்வு பெற்றிருக்கிறார்கள். இதைப் போன்ற ஒரு மையத்தை தங்கள் மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் வந்து பார்த்தவண்ணம் இருக்கின்றன. ஆந்திரப்பிரதேசத்தில் இருந்தும் இதைப் பார்ப்பதற்காக வருகை புரிய உள்ளார்கள்.

ஆளுமைத் தேர்வுக்கு பயிற்சி அவசியம். எனவே மத்திய தேர்வாணயம் நடத்துவது போலவே நாங்கள் நான்கு ஐந்து முக்கியமான அலுவலர்கள், தனியார் துறையைச் சார்ந்த நிர்வாகிகள், பேராசிரியர்கள், மனநல வல்லுநர்கள் போன்றவர்களைக் கொண்டு அச்சு அசலாக மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்துகிறோம். இதனால் மாணவர்கள் பயமும், பதற்றமும் இன்றி தில்லியில் நடக்கும் ஆளுமைத் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடு குறித்து விரிவாக விவாதிக்கவும் செய்கிறோம். இவையெல்லாம் அவர்களை மெருகேற்றுகின்றன.

அண்ணா மேலாண்மை நிறுவனம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. இங்கு அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு துணை மாவட்ட ஆட்சியர், மாவட்டப் பதிவாளர், வணிக வரி அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், உதவி வனப் பாதுகாவலர் போன்ற அ தொகுதி அலுவலர்களுக்கு ஐந்து வார அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண்மை அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் போன்ற ஆ பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நமது மாநில மாணவர்கள் தகவல் தொடர்புத் திறனை இன்னும் கொஞ்சம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிவில் சர்வீஸஸ் தேர்வு என்பது ஏறத்தாழ 25 பணிகளுக்கு நடத்தப்படுகிற போட்டித் தேர்வு.  இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயல் நாட்டுப் பணி, வருமான வரி பணி, கஸ்டம்ஸ் பணி, ஆடிட் பணி, போன்ற பல பணிகள் அதில் அடங்கும்.  இந்தத் தேர்வு மூன்று கட்டங்களாக  நடத்தப்படுகிறது.  பிரிலிமினிரி தேர்வு, மெயின் தேர்வு,  பர்சனாலிடி தேர்வு என மூன்று கட்டங்களில் நடத்தப்படும். இத்தேர்வை ஆண்டுதோறும்  10 லட்சத்திற்கும்  மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள்.   இந்தத் தேர்வு எழுத குறைந்தபட்ச படிப்பு  பட்டப் படிப்பு.  அதை தொலைத்தொடர்பின் மூலம் பெறுவதில் ஆட்சேபணை இல்லை.  பட்டயப் படிப்பை முடித்தவர்கள், இதை எழுத முடியாது.  

உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, தூய்மை, கனிவு, கருணை, மக்களோடு பணியாற்றும் ஆர்வம், பணத்திற்கு ஆசைப்படாத எளிமை, எப்போதும் மற்றவர்கள் சந்திக்கும் அளவு இயல்பான வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட மாணவர்கள் காத்திரமான அலுவலர்களாகப் பரிமளிப்பார்கள்.

30 January 2014

ஐஐடியில் கோடைகாலப் பயிற்சி

என்ஜினீயரிங், அறிவியல், கலை மற்றும் சமூக அறிவியல் மற்றும் மேனேஜ்மெண்ட் படிப்பு  மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கோடைகாலப் பயிற்சி வழங்குகிறது சென்னை ஐஐடி.

பொறியியல் பாடங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளைப் படித்து வரும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி கோடைகாலப் பயிற்சியை அளிக்க உள்ளது. பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் ஒருங்கிணைந்த எம்இ, எம்டெக் படிக்கும் மாணவர்களும் இந்தக் கோடைகாலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். எம்இ, எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ, எம்பிஏ ஆகிய படிப்புகளில் முதல் ஆண்டு படிக்கும், பல்கலைக்கழக அளவில் சிறந்து விளங்கும் மாணவர்களும் இந்தக் கோடைகாலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். கருத்தரங்குகளில் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தாலோ, புராஜக்ட் செய்திருந்தாலோ புதிய  சாதனங்களின் வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்றிருந்தாலோ, கணித ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பிடம் பெற்றிருந்தாலோ அல்லது விருது பெற்றிருந்தாலோ அதுகுறித்து மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே,  ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் இந்தக் கோடை காலப் பயிற்சியில் சேர முடியாது.

ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், அப்ளைடு மெக்கானிக்ஸ், பயோடெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் டிசைன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல் என்ஜினீயரிங், ஓசன் என்ஜினீயரிங் ஆகிய துறைகளின் மூலம் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. அத்துடன், இயற்பியல், வேதியியல், கணிதம், கலைப்புலம் மற்றும் சமூக அறிவியல் துறை, மேலாண்மைக் கல்வித் துறை போன்ற துறைகளும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றன. எனவே, இதுபோன்ற துறை மாணவர்கள் இந்தக் கோடைகாலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இரண்டு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சி வருகிற மே 16-ஆம் தேதியிலிருந்து ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு ஏற்ப இத்தேதியில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் கோடை காலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரிடமிருந்து பரிந்துரைக் கடிதத்தையும் வாங்கி இ¬ணைத்து அனுப்ப வேண்டும். சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கோடைகாலத்தில் பயிற்சி எடுக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்குwww.iitm.ac.in

இ-மெயில்: sfp2014@wmail.iitm.ac.in

Project Assistant Post from NIT, ROURKELA

Date of the Interview : 03.02.2014

Click here for more details 

Jr Project Officer Vacancies from IIT Kharagpur

Indian Institute of Technology (IIT), Kharagpur has given a notification for the recruitment of Junior Project Officer vacancies to work for project entitled “Green House Gas recovery from coalmines and un-mineable coal beds and conservation to energy” in the department of Mining Engineering. Eligible candidates can send their biodata on or before 10-02-2014. Other details like age limit, educational qualification, selection process, how to apply are given below…

IIT Kharagpur Vacancy Details:

Total No of Posts: 01

Name of the Posts: Junior Project Officer


Educational Qualification: Candidates must possess 1st Class B.Tech in Mechanical/ Electrical/ Electronics & communication Engineering.

Application Fee: Candidates should pay Rs.50/- (Not for Female candidates) Demand draft in favour of IIT Kharagpur payable at Kha.

How to Apply: Eligible candidates may send their complete biodata on plain paper along with attested copies of certificates/ testimonials, addressed to Administrative Officer (Projects), Sponsored Research and Industrial Consultancy, IIT Kharagpur, Kharagpur-721302 on or before 10-02-2014.

Last Date for Submission of Applications: 10-02-2014.



Architect Consultant Post from EdCIL

Last date for submission of application : 03.02.2014

Click here for more details 

24 January 2014

Short term Course for ORACLE PL/SQL Programming

Recruitment of Junior Research Fellow - CPEES

DST - Locked Martin India Innovation Growth Programme 2014 - CTDT

Last date to apply : February 24, 2014

Click here for more details 

CICT Sponsored Three Days National Seminar on Management Thoughts in Classical Tamil Literature at Dept. of MBA, Regional Centre, Coimbatore

Date of the seminar : 12th to 14th February

Click here for more details 

Recruitment of Professional JRF in NHHID

Essential Qualifications : First class M. Tech (Biotechnology,
 Biomedical engineering and allied subjects).

Last date for submission of Application : 31.01.2014

Click here for more details

International Wokshop on Electronics Materials Technology at CGC, Anna University, Chennai

Date of the workshop : March 13th - 15th, 2014
Click here for more details 

UGC Anna University facilities programme to undertake research/training at Crystal Growth Centre

National level conference on Energy and Environment at Dept .of Chemical Engineering, AC Tech, Anna University

Date of the Conference : 3rd March 2014

Click here for more details 

National Seminar on E-Resources for Scholarly Communication at BIT Campus,Trichy

Date of the Seminar : 28.02.2014

Click here for more details

National Seminar on Research paper, Dissertation and Project Proposal Preparation at BIT Campus, Anna University, Trichy

Date of the seminar : 14.02.2014

National Seminar on Career Guidance, Gate Exam Preparation & Development of Soft Skills at BIT Campus, Anna University, Trichy

Date of the Seminar : 06/02/2014

Click here for more details 

20 January 2014

பொக்கரோ செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணி

த்திய அரசின்கீழ் இயங்கி வரும் பொக்கரோ செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோருக்கு 20 காலியிடங்களும், பழங்குடியினருக்கு  31 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு  17 காலியிடங்களும், மற்றவர்களுக்கு 63 காலியிடங்களும் உள்ளன. மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமெண்டேஷன், மெட்டலர்ஜி, கெமிக்கல்,  செராமிக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்  டெலிகம்யூனிக்கேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 28க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு  5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50. மற்றவர்களுக்கும் ஓ.பி.சி. பிரிவினருக்கும் கட்டணம் ரூ.250.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த விதிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2014

விவரங்களுக்குwww.sail.shine.com

ஹெவி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 186 பணியிடங்கள்

ஹெவி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அப்ரண்டீஸ்  டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர்  சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், புரொடக்‌ஷன், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், மெட்டலர்ஜி, இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க  வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2014
விவரங்களுக்கு: www.hecltd.com

கெயில் நிறுவனத்தில் 65 எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர் பணி

கெயில் நிறுவனத்தில் 65 எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர்  பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல் பிரிவில் 18 காலியிடங்களும், எலெக்ட்ரிக்கல் பிரிவில் 14 காலியிடங்களும், இன்ஸ்ட்ருமெண்டேஷன் பிரிவில் 13 காலியிடங்களும், கெமிக்கல் பிரிவில் 20 காலியிடங்களும் உள்ளன. 25 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். கேட் 2014 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2014
விவரங்களுக்குhttps://gailebank.gail.co.in

செயில் நிறுவனத்தில் 650 என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7.5 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான செயில் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியிடங்களில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

த்திய அரசு நிறுவனமான செயில் என்று அழைக்கப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் 650 காலியிடங்களும், நிர்வாகப் பிரிவில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் 60 காலியிடங்களும் உள்ளன.

இப்பணிகளில் சேர என்ன தகுதி இருக்க வேண்டும்?
தொழில்நுட்பப் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியில் சேர விரும்புபவர்கள் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், மெட்டலர்ஜி, எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன், செராமிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைனிங், கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதாவது ஒரு துறையில் முழு நேரமாகப் படித்து பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்துடன், அனைத்து செமஸ்டர்களிலும் சேர்த்து சராசரியாக 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

நிர்வாகப் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹியூமன் ரிசோர்சஸ், பர்சனல் மேனேஜ்மெண்ட் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ், பர்சனல் மேனேஜ்மெண்ட் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்பிஏ அல்லது மேனஜ்மெண்ட் முதுநிலை டிப்ளமோ படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்  55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். எச்ஆர் பணிப் பிரிவுக்கு சேர விரும்புபவர்கள்  ஹியூமன்  ரிசோர்சஸ் அண்ட் ஆர்கனைசேஷனல் டெவலப்மெண்ட்டில் முதுநிலைப் பட்டமும் மார்க்கெட்டிங் பிரிவில் சேர விரும்புபவர்கள் மார்க்கெட்டிங்கில் முதுநிலைப் பட்டமும் மெட்டீரியல் பிரிவில் சேர விரும்புபவர்கள் புரடக்ஷன், ஆபரேஷனஸ், மெட்டீரியல்ஸ், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் போன்ற பிரிவுகளில் முதுநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். நிதிப் பிரிவில் சேர விரும்புபவர்கள் சி.ஏ அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. படித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிகளில் சேர, இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் நிலவரப்படி, 30 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு  5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களின் மருத்துவ உடல் தகுதியும் கருத்தில் கொள்ளப்படும்.

இந்தப் பணிகளில் சேர எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?
தமிழகத்தில் சென்னை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த எழுத்துத் தேர்வு வரும் மார்ச் 23-ஆம் தேதி நடத்த  உத்தேசிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பப் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்களுக்கு காலையிலும் நிர்வாகப் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில் சேர விரும்புபவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட துறை அறிவு, திறன் அறிவு (குவாலிடேட்டிவ் ஆப்டிட்யூட், வெர்பல் எபிலிட்டி, ரீசனிங் அண்ட் ஜெனரல் அவேர்னஸ் ஆகிய பிரிவுகளில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள், குரூப் டிஸ்கஷனுக்கு  20 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 20 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியுடையவர்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனால், விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் அவசியம்.

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் துறை சார் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. செயில் இணையதளத்திற்கு  சென்று செலானை டவுன்லோடு செய்து, அதனைப் பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியில் இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பிறகு Unique Journal Number  மற்றும் Branch Code ஐ வங்கியில் பெற்றுக்கொள்ளவும். செயில் இணையதளத்திற்கு சென்று Unique Journal Number, Branch, புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்த தங்களுடைய கையெழுத்தை அப்லோடு செய்து விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்த விரிவான தகவல்கள் இணைய தளத்தில் உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2014
விவரங்களுக்குwww.sail.co.in

10 January 2014

Sr R & D Engineer Post from NBRC

NBRC Recruitment 2014 – Senior R & D Engineer Posts: National Brain Research Centre (NBRC) has issued notification for the recruitment of Senior R & D Engineer Posts for signal and image processing research. Eligible candidates should apply through prescribed application format on or before 18-01-2014. Other details like age limit, educational qualification, selection process and how to apply are given below…

NBRC Vacancy Details:

Name of the Posts: Senior R & D Engineer 


Age Limit: Candidates age should be 35 years as on date of advertisement.

Educational Qualification: Candidates should possess M.Tech in Electrical/ Electronics/ Biomedical engineering & have relevant experience.

How to Apply: Eligible candidates can send their biodata along with attested copies of certificates in support of their qualifications and experience mentioned in biodata on or before 18-01-2014 to the Registrar, National Brain Research Centre, Nainwal Mode, Manesar- 122051, Gurgon (Haryana).

Last Date for Receipt of Application: 18-01-2014.
For more details like age limit, educational qualification, selection process, how to apply and other information are available in the following link..



Jr Research Fellow – 01 Post from IIT, Roorkee

IIT Roorkee Recruitment 2014 – Walk in for Jr Research Fellow Posts: Department of Science & Engineering, Indian Institute of Technology (IIT) Roorkee has issued notification for the recruitment of Junior Research Fellow (JRF) Posts for research project under Dr. Durga Toshniwal (PI) entitled ” Applying Data mining Technique on Nuclear Power Plant Data for Predictive Maintenance”. Eligible candidates send their application along with copies of necessary certificates in advance by post or email & attend the interview on 17-01-2014 at 09:30 AM. Other details like age limit, educational qualification, selection process and how to apply are given below…
IIT Roorkee Vacancy Details:



Date & Time of interview: 17-01-2014 at 09:30 AM.


Total No of Posts: 01
Name of the Post: Junior Research Fellow (JRF)

Educational Qualification: Eligible candidates should possess M.E/ M.Tech in Computer Science & Engineering or equivalent with 1st class.

Selection Process: Candidates will be selected based on performance in interview.

How to Apply: Eligible candidates can send their application on plain paper with detailed CV including chronological discipline of degree/ certificates, experience including research, industrial field, attested copies of degree & experience certificates by post or email(durgatoshniwal@gmail.com, durgafec@iitr.ac.in) or produce at the time of interview & attend the interview along with original degree & experience certificates for verification on 17-01-2014 at 09:30 AM in conference Room of Department of Electronics & Computer Science & Engineering.Tel: 01332 – 285687.

Important Dates:
Last Date for Receipt of Application: 17-01-2014

For more details like age limit, educational qualification, selection process, how to apply and other information are available in the following link..


Click here for more details  

9 January 2014

JRF, SRF – 02 Posts from IIT, Kharagpur for B.Tech/ M.Tech

IIT Kharagpur Recruitment 2014 – JRF & SRF Posts: Indian Institute of Technology ((IIT), Kharagpur has issued notification for the recruitment of Junior Research Fellow and Senior Research Fellow posts. Eligible candidates should apply through prescribed format on or before 20-01-2014. Other details like qualification and how to apply are given below..
IIT Kharagpur Vacancy Details:
Total No of Posts: 02 PostName of the Post :1. Junior Research Fellow: 01 post
2. Senior Research Fellow: 01 post


Educational Qualification: Candidates should possess B. Tech or equivalent in Metallurgical/ Materials/ Ceramic/ Mechanical/ Chemical Engg/ Sci with valid GATE/NET score. B. Tech or equivalent in Metallurgical/ Materials/ Nanotech/ Ceramic/ Mechanical/ Chemical Engg/Sci and post-graduate degree (M. Tech or equivalent) in Metallurgical/ Materials/ Nanotech/ Chemical/ Mechanical/ Ceramic Engg/ Sci with two years research experience.
How to Apply: Eligible candidates may apply on plain paper,giving full bio-data along with attested copies of testimonials to Administrative Officer (Projects) ,Sponsored Research and Industrial Consultancy,Indian Institute of Technology,Kharagpur-721302 on or before 20-01-2014.
Last Date for Submission of Application: 20-01-2014.
For more details regarding educational qualifications and how to apply and other, click on the following link…

Dr Manmohan Singh Scholarships for Doctoral Pgm

Last date : 15/01/2014



National Conference on Recent Trends in Chemical Engineering at Dept. of Chemical Engineering A.C.TECH, Anna University Chennai - 600 025

Date of the Conference: 25 - 26, February 2014

Recruitment of Junior Research Fellow - CPEES

Essential Qualification: M.E/M.Tech structural engineering or construction engineering

Two days Programme on Training for GATE 2014 for ECE Students - Dept. of ECE, BIT, Trichy

Date of the Programme : 21 - 22 January 2014 

அணு ஆராய்ச்சி மையத்தில் பிஎச்டி: மாதம் ரூ.16 ஆயிரம் உதவித் தொகை!


பொன். தனசேகரன்

கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பிஎச்டி ஆய்வை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.

ல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிட்யூட், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பிஎச்டி படிக்க பதிவு செய்யலாம். அத்துடன், ஆய்வுக் காலத்தில் உதவித் தொகையும் கிடைக்கும். இந்த ஃபெல்லோஷிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கெமிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், என்ஜினியரிங் சயின்சஸ் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். 80 மாணவர்களுக்கு இந்த ஃபெல்லோஷிப் வழங்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது.

இந்த ஃபெல்லோஷிப்பை யார் பெறலாம்?

விண்ணப்பதாரர் இந்தியப் பிரஜையாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 1.7.2013 நிலவரப்படி, 28 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும் ஓபிசி மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகளும் விலக்கு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும்.  

இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெட்டலர்ஜி, மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அட்மாஸ்பெரிக் சயின்ஸ், நியூக்ளியர் என்ஜினீயரிங், நியூக்ளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 எம்எஸ்சி, எம்எல்ஐஎஸ் படிப்புகளில் குறைந்தது  60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ்சி நிலையில் கணிதம் அல்லது நியூமரிக்கல் மெத்தட்ஸ் எம்எஸ்சியில் ஒரு பாடமாகக் கட்டாயம் படித்திருக்க வேண்டும். பிஎஸ்சி நிலையில் வேதியியலை துணைப் பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
வேதியியலில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்தவர்கள் பிஎஸ்சி பட்ட நிலையில் இயற்பியலையும் கணிதத்தையும் துணைப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும்.

வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி அல்லது பி.இ., பிடெக் படித்தவர்கள் இன்பர்மேஷன் சயின்சில் முதுநிலைப் பட்டப் படிப்புப் படித்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங், மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அட்மாஸ்பெரிக் சயின்ஸ், நியூக்ளியர் என்ஜினீயரிங், நியூக்ளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் பிஇ., பிடெக்., பிஎஸ்சி என்ஜினீயரிங், பி.எஸ்சி., டெக், எம்.டெக். படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

மாணவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
சென்னை, கொல்கத்தா, புவனேஸ்வரம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் வருகிற ஜனவரி 5-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். யுஜிசி - சிஎஸ்ஐஆர்-நெட் தேர்வில் தகுதி மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்களும் ஜெஸ்ட் (JEST 2013) தேர்வில் 90 பர்சென்டைல் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளவர்களுக்கும் இந்த எழுத்துத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். எம்இ, எம்டெக் படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், கேட் தேர்வில் 90 சதவீத பர்சென்டைலுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களும் இந்த எழுத்துத் தேர்வை எழுத வேண்டியதில்லை. எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து தகுதியுடைய மாணவர்களுக்கு கல்பாக்கத்தில் நேர்முகத் தேர்வு  ஜனவரி 20-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதி வரை நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இணைய தளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தையும் ஹால் டிக்கெட்டையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் ஹால் டிக்கெட் படிவத்தையும் உரிய இணைப்புகளுடன் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் ஆட்கள் தேர்வு பிரிவு உதவி நிர்வாக அதிகாரி முகவரிக்கு டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஃபெல்லோஷிப் பெற தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தபால் மூலமும் தெரிவிக்கப்படும்.

இந்த ஃபெல்லோஷிப் பெற தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாணவர்களின் திறமை, செயல்பாடுகளைப் பொருத்து ஒவ்வொரு ஆண்டும் உதவித் தொகை வழங்குவது நீட்டிக்கப்படும். மூன்றாம் ஆண்டிலிருந்து இந்த உதவித் தொகை பெறுபவர்களுக்கு சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் வழங்கப்படும். அதாவது மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இந்த ஃபெல்லோஷிப் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த உதவித் தொகை தவிர, ஆராய்ச்சி தொடர்பான இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அத்துடன் சலுகை கட்டணத்தில் தங்கும் விடுதி உள்ளிட்ட சலுகைகளும் உண்டு.

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுப் பணியில் ஆர்வமிக்க மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்குhttp://www.igcar.ernet.in 

Seminar on All-electron GW and LDA+U methods for correlated electrons - CGC

Date of the seminar :22.01.2014 (Wednesday)

European scholarships for students of university departments/constituent colleges/affiliated colleges: Svaagata Fellowships

Last Date : 17/02/2014

Click here for more details

Revaluation of Answer books of Answer books


Students and Discipline


6 January 2014

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம்!

பொன். தனசேகரன்

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில்  மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியில் சேர  விரும்பும்  மெக்கானிக்கல், கெமிக்கல்  என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளில் சேர தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு ஊதியம் கிடைக்கும்.


நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிப்பதற்கு உதவும் தேர்வு கேட் (GATE). அண்மைக் காலமாக இந்த கேட் தேர்வின் மூலமாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களுக்கும் தகுதியுடைய மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் (BPCL) மேனேஜ்மெண்ட் ட்ரெயினி பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் முதல் தடவையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டுப் படிப்புகள் அல்லது அதற்கு மேல் காலவரையறை உள்ள படிப்புகளைப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியாது. என்ஜினீயரிங் படிப்புகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி  பிரிவினர் (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்  50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதில், அனைத்து செமஸ்டர்களின் சராசரி மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும். சிஜிபிஏ, ஓஜிபிஏ, டிஜிபிஏ போன்ற கிரேடுகளில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு நிகரான மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

பொதுப் பிரிவு மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் முதல் தேதி நிலவரப்படி, 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30. மாற்றுத் திறனாளிகளுக்கு (40 சதவீத உடற்குறைபாடு) வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும். இதேபோல, முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு.

கேட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியுடைய மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரிகள், குழு விவாதத்திற்கும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். அதையடுத்து, மேனேஜ்மெண்ட் டிரெயினி நிலையில் வேலையில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை இருக்கும். இந்தப் பணியில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தொடக்க நிலையிலேயே ஊதியம் மற்றும் இதர சலுகைகளைச் சேர்த்து ஆண்டுக்கு ரூ.10.5 லட்சம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஓராண்டு புரபேஷனரி காலம். அதன்பிறகு எக்ஸிகியூட்டிவ் ஆக நியமிக்கப்படுவர்.

இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் வருகிற பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் கேட் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வுக்கான அறிவிப்பு குறித்த விவரங்கள் ஏற்கெனவே, ‘புதிய தலைமுறை கல்வி’ யில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு உரிய தகவல்களை முன்னதாகவே வைத்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசுப் பணிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிகளில் இருந்தால் அவர்கள் தங்களது துறையிடமிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். கேட் தேர்வு பதிவு எண்ணுடன் பாரத் பெட்ரோலிய நிறுவன இணையதளத்தில் தற்போது விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31.01.2014.


விவரங்களுக்கு : www.bpclcareers.in







பட்டதாரி இளைஞர்களுக்கு விமானப்படை வேலை!

ஞா. சக்திவேல்

இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில் சேர விரும்பும் பட்டதாரி இளைஞர்களுக்காக விமானப்படை பொது அட்மிஷன் தேர்வு நடத்தப்படுகிறது.


ந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில் சேர விரும்பும் பட்டதாரி இளைஞர்களுக்கு விமானப்படை பொது அட்மிஷன் தேர்வு  (Air Force Common Admission Test - AFCAT) நடத்தப்படுகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பிளையிங் பிரிவிலும் தொழில்நுட்பப் பிரிவிலும், தரைத்தளக் கட்டுப்பாட்டு அறையிலும் வேலை கிடைக்கும். பிளையிங் பிரிவில் இருப்பவர்களுக்கு அனைத்துப் படிகளும்  சேர்த்து ஆரம்பச் சம்பளமாக 69,130 ரூபாய் கிடைக்கும். தொழில்நுட்பப் பிரிவில் இருப்பவர்களுக்கு 60,380 ரூபாயும், தரைத்தளப்பிரிவில் இருப்பவர்களுக்கு 57,880 ரூபாயும் சம்பளமாகக் கிடைக்கும். அத்துடன் இன்சூரன்ஸ் உள்பட இதர சலுகைகளும் கிடைக்கும்.

பறக்கும் (Flying) பிரிவுக்கு குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிப்படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். 1992-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம்  தேதியில் இருந்து 1996-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். அதாவது 19 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். பொறியியல் பட்டதாரிகளும் குறைந்தது 60 சதவீதத்துக்கு குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். உடல் நிலைத் தகுதியும் அவசியம், நல்ல பார்வைத் திறனும் இருக்க வேண்டும்.

தொழில்நுட்பப் பிரிவில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் (எலெக்ட்ரானிக்ஸ்) மற்றும் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் (மெக்கானிக்கல்) என்ற இரண்டு பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொறியியல் பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 1987-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதியில் இருந்து 1997-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் பிரிவிற்கு பிஸிக்ஸ் / என்ஜினீயரிங் பிசிக்ஸ், மேத்தமேட்டிக்ஸ் / என்ஜினீயரிங் மேத்தமேட்டிக்ஸ், என்ஜினீயரிங் கிராபிக்ஸ் / என்ஜினீயரிங் டிராயிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் / எலெக்ட்ரிக்கல் டெக்னாலஜி, கண்ட்ரோல் என்ஜினீயரிங், மைக்ரோ பிராசசர்ஸ், டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ் / பேசிக் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, நெட்வொர்க் தியரி டிசைன், டெலிகம்யூனிக்கேஷன் சிஸ்டம்ஸ்,  எலெக்ட்ரானிக் சர்க்கியூட் டிசைன், ரேடார் தியரி, ஸ்விட்சிங் தியரி, இன்ஸ்ட்ருமெண்டேஷன், மைக்ரோவேவ் என்ஜினீயரிங், ஆன்டனா அண்ட் வேவ் டிரொப்பகேஷன், எலெக்ட்ரானிக்  டிவைசஸ் ஆகிய பதினெட்டு பாடங்களில் குறைந்தது எட்டுப் பாடங்களையாவது எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

இதைப்போலவே, ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் (மெக்கானிக்கல்) பிரிவிற்கு பிஸிக்ஸ் / என்ஜினீயரிங்  பிசிக்ஸ், மேத்தமேட்டிக்ஸ் / என்ஜினீயரிங் மேத்தமேட்டிக்ஸ், என்ஜினீயரிங் கிராபிக்ஸ் / என்ஜினீயரிங் டிராயிங், ஆட்டோமோட்டிவ் என்ஜினீயரிங் / பிளாண்ட் என்ஜினீயரிங் / இன்டஸ்டிரியல் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் மெக்கானிக்ஸ் / ஸ்ட்ரெங்த் ஆஃப் மெட்டீரியல், ஏரோடைனமிக்ஸ், தெர்மோ டைனமிக்ஸ் அண்ட் அப்ளிக்கேஷன்ஸ், ஹீட் பவர் என்ஜினீயரிங், ஹீட் அண்ட் மாஸ் டிரான்ஸ்பர், தியரி ஆஃப் மெக்கானிஸ், ப்ளூயூட் மெக்கானிக்ஸ் / டர்போ மெக்கானிக்ஸ், பிளைட் மெக்கானிக்ஸ், மெக்கானிக்கல் டிராயிங் / மெசின் டிசைன், மெகட்ரானிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் / மெட்டர்லஜி, வைபரேஷன்ஸ், ஒர்க்‌ஷாப் டெக்னாலஜி/ மேனுபேக்கரிங் டெக்னாலஜி / புரடக்‌ஷன் என்ஜினீயரிங், ஹைட்ராலிக்ஸ் அண்ட் நிமாட்டிக்ஸ், ஏர்கிராப்ட் ஸ்ட்ரக்ச்சர்ஸ் ஆகிய பதினெட்டு பாடங்களில் குறைந்தது எட்டு பாடங்களைப் படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 157.5 செ.மீ. உயரமும், நல்ல பார்வைத்திறனும் உடையவர்களாக  இருக்க வேண்டும்.

தரைத்தளப் பிரிவிற்குப் பட்டதாரி இளைஞர்களாக இருந்தால் 20-இல் 
இருந்து 23 வயதிற்குள் இருப்பவர்களும், ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களாக இருந்தால் 20 முதல் 25 வயது நிரம்பியவர்களும், பட்டப்படிப்பிற்குப் பின்பு சட்டம் பயின்றவர்களாக இருந்தால்  20 முதல் 26 வயது நிரம்பியவர்களும், முதுநிலை ஆசிரியர் படிப்பு (எம்எட்), ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி), கணக்குத் தணிக்கையாளர் படிப்பு (சிஏ) அல்லது ஐசிடபிள்யூஏ படித்தவர்களாக இருந்தால் 20 முதல் 27 வயது நிரம்பியவர்களாக இருக்கலாம். நிர்வாகம் மற்றும் தளவாடப் பணிகளுக்கு, 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஓர் இளநிலை பட்டப்படிப்பு அல்லது 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது இதற்கு இணையான பட்டயப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணக்குப் பிரிவிற்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம்.,  50 சதவீத மதிப்பெண்களுடன் எம்.காம்., படித்தவர்கள், சி.ஏ, ஐ.சி.டபிள்யூ.ஏ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்விப் பிரிவிற்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 157.5 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். அத்துடன், அவர்களுக்குத் திருமணமாகி இருக்கக்கூடாது. தகுதி குறித்த விவரங்கள் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விமானப்படை பொது அட்மிஷன் தேர்வு பிப்ரவரி 23 -ஆம் தேதி நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னை, சூலூர் (கோவை) உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். அப்ஜெக்ட்டிவ் முறையில் நடைபெறும் இத்தேர்வில் மொழித் திறன், எண்ணியல் திறன், பொது அறிவு மற்றும் ராணுவம் குறித்த விஷயங்கள் கேட்கப்படும். விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும். விமானப்படை இணையதளத்திலிருந்து மாதிரி வினாத்தாள்களையும் தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் டவுன்லோடு செய்துகொள்ளலாம். முதல்கட்ட நுழைவுத் தேர்வுக்குப் பின்னர், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பயிற்சி ஆரம்பிக்கப்படும். பிளையிங் பிரிவிற்கும், தொழில்நுட்பப் பிரிவிற்கும் 72 வாரப் பயிற்சியும், தரைத்தளக் கட்டுப்பாட்டு பிரிவிற்கு 52 வாரப் பயிற்சியும் வழங்கப்படும். இப்பணிகளில் சேர விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 12, 2014.
 

விவரங்களுக்கு:  www.careerairforce.nic.in/








Recruitment of Assistant Professor / Associate Professor on Tenure basis - SAP

Name of The Post
Assistant
Professor in
Architecture

Associate
Professor in
Architecture

Assistant
Professor in civil engineering

Last date for the receipt of applications: 20.01.2014

Click here for more details 

Two Days Workshop on Introduction to Wavelets & its Applications - AURC, Tirunelveli

Dates of the Workshop : 7th and 8th February

The Coordinator - TRAECE,
 Department of ECE, Regional Centre,
 Anna University :Tirunelveli Region,
 Tirunelveli- 627007.

Recruitment of Teaching Fellow - Dept. of Physics

Applications are invited for the post of Teaching Fellow

Contact
The Professor and Head
Department of Physics
Anna University
Chennai-600025

Click here for more details 


Life Skills


Stress Interview




News Clippings


2 January 2014

Recruitment of Project Assistant (Chemical Engineering/Biotechnology/Chemistry / Biochemistry) - Dept. of Chemical Engineering, ACT

Seminar on CGC : Electro recombination processes in mesoscopic solar cells || The Physics of Low Noise Avalanche Photodiodes

Recruitment of Junior Research Fellowship - Dept. of Chemical Engineering, ACT, Anna University, Chennai

InCTF 2014 A national level beginner friendly CTF style ethical hacking contest for students enrolled in an Indian university.

ORGANIZED BY
Amrita University
ELIGIBLE STUDENTS
FOR MORE DETAILS
http://inctf.in
REGISTRATION ENDS
14 Feb 2014

EVENT LOCATION

Online
DESCRIPTION
Amrita University and Amrita Center for Cyber Security once again welcome you to the world of Ethical Hacking!! We are organising the fifth edition of, InCTF, InCTF 2014 - a national levelbeginner friendly ethical  hacking contest - exclusively for students enrolled in Indian universities.
There are 3 rounds in total. The first two rounds are qualifying rounds and are completely online: you can participate from your own university. Based on the performance in the first two rounds, teams will qualify for the exciting final CTF round, where teams will battle it out for the prizes. All you have to do is form a team, register (free) at portal.inctf.in and participate! Don’t worry if you do not have prior experience in cyber security-resources will be provided that help you learn and develop skills! For more details visit inctf.in.
The only prerequisite for the contest is the urge to learn !!! We help you if you get stuck!!! This is a beginner friendly CTF and  previous winners don’t get to compete. The aim of the contest is to help students learn secure coding practices.
There are exciting prizes* for the event too! See http://inctf.in/prizes/awards.html for more.
So, what are you waiting for? It’s simple: Register, Learn, Hack!
If you have any clarifications, do get in touch with us.
* Prizes for the event are based on the performance of the teams in the contest.
EVENT FACEBOOK PAGE
http://facebook.com/InCTF
EVENT TWITTER PAGE
http://twitter.com/inctf