18 February 2014

CSIR –UGC நடத்தும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக  ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பும் பெற விரும்பும் அறிவியல்  பாட மாணவர்கள் சிஎஸ்ஐஆர்-யுஜிசி நடத்தும் நெட் தேர்வை எழுத வேண்டும். தற்போது, பொறியியல்  பட்ட மாணவர்களும் எம்பிபிஎஸ் பட்ட மாணவர்களும் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

ல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெற்று ஆராச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் அறிவியல் மற்றும் தொழில் ஆராச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும்  சிஎஸ்ஐஆர்-யுஜிசி விரிவுரையாளர் தகுதித் தேர்வை (நெட்) எழுத வேண்டும். இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை, அதாவது ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு நடைபெறும் தேதியில் மாறுதல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. தேர்வுக் கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கெமிக்கல் சயின்சஸ்,
  • லைஃப் சயின்சஸ்
  • எர்த், அட்மாஸ்பெரிக், ஓசன் அண்ட்  பிளானிட்டரி சயின்சஸ்
  • பிசிக்கல் சயின்ஸ்,
  • மேத்மேட்டிக்கல் சயின்சஸ்,
  • என்ஜினீயரிங் சயின்சஸ்

ஆகிய ஆறு பாடப் பிரிவுகளில் மூன்று மணி நேரம் இத்தேர்வு நடைபெறும். இந்தப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள். கேள்வித்தாள் ஏ,பி,சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். பகுதி-ஏ பிரிவு அனைத்துப் பாடங்களுக்கும் பொதுவானது. லாஜிக்கல் ரீசனிங், கிராபிக்கல் அனாலிசிஸ், அனலிட்டிக்கல் அண்ட் நியூமரிக்கல் எபிலிட்டி, குவான்டிடேட்டிவ் கம்பேரிசன், சீரியஸ் பார்மேசன், பசில்ஸ் போன்ற பிரிவுகளில் திறனறி வினாக்கள் இருக்கும்.

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பகுதி-பி பிரிவில் கணிதம், என்ஜினீயரிங் ஆப்டிட்யூட் ஆகியவை குறித்த வினாக்களும் பகுதி - சி பிரிவில் சம்பந்தப்பட்ட பாடங்களிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகளும் கேட்கப்படும்.

மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பகுதி - பி பிரிவில் சம்பந்தப்பட்ட பாடங்களில் அப்ஜெக்ட்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். பகுதி - சி பிரிவில் அறிவியல் கோட்பாடுகள் குறித்து மாணவர்களின் அறிவை சோதனை செய்யும் வகையில் வினாக்கள் இருக்கும். இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம்.

இந்தத் தேர்வை யார் எழுதலாம்?

பிஎஸ் நான்கு ஆண்டு பட்டப் படிப்பு, பிஇ, பிடெக், பிபார்ம், எம்பிபிஎஸ், ஒருங்கிணைந்த பிஎஸ்-எம்எஸ் அல்லது எம்எஸ்சி படிப்புகள் அல்லது அதற்கு நிகரான படிப்புகளில் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் இந்தப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ்சி படிக்கச்  சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி ஆனர்ஸ் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த எம்எஸ்.-பிஎச்டி படிப்பில்  சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். அதேசமயம், பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது  55 சதவீத மதிப்பெண்களும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

அறிவியல், பொறியியல் அல்லது வேறு பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் பிஎச்டி அல்லது ஒருங்கிணைந்த பிஎச்டி படிப்பில் பதிவு செய்த பிறகுதான் ஃபெல்லோஷிப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். விரிவுரையாளருக்கான நெட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஜேஆர்எஃப்-நெட் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, 28 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். விரிவுரையாளர் பணிக்கான நெட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இந்தியன் வங்கிக் கிளைகளில் விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தலாம். பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கட்டணம் ரூ.400. ஓபிசி பிரிவினருக்கு கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கு கட்டணம் ரூ.100. ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் செலானை டவுன்லோடு செய்து விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும்.

வங்கிகளில் மார்ச் 3-ஆம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 4. ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, வங்கி செலான் மற்றும் உரிய உரிய இணைப்புகளுடன் ‘Sr. Controller of Examination, Examination Unit, HRDG, CSIR Complex, Library Avenue, Pusa, New Delhi -   110012’ என்ற முகவரிக்கு மார்ச் 8-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். நீண்ட தூர பகுதிகளைச்  சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 14-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் முறை, தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்களை இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

விவரங்களுக்குwww.csirhrdg.res.in