24 November 2013

CMAT பொது நுழைவுத் தேர்வு

கில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து எம்.பி.ஏ. அல்லது மேலாண்மைப் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ படிக்க விரும்புபவர்கள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) நடத்தும் பொது நுழைவுத் தேர்வை (CMAT)  எழுத வேண்டும். ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வை எழுத ஆன்லைன் மூலம் வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வு எப்படி இருக்கும்?: மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வில் குவாண்டிடேட்டிவ் டெக்னிக்ஸ் அண்ட் டேட்டா இன்டர்பிரட்டேஷன் பிரிவில் 25 கேள்விகளும், லாஜிக்கல் ரீசனிங் பிரிவில் 25 கேள்விகளும், லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன் பிரிவில் 25 கேள்விகளும், பொது அறிவில் 25 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 400 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஓசூர் உள்பட நாடு முழுவதிலும் உள்ள 23 முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறும்.

யார் விண்ணப்பிக்கலாம்?: பட்டப் படிப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பட்டப் படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர், விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 (வங்கிக் கட்டணம் தனி) செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 (வங்கிக் கட்டணம் தனி) செலுத்தவேண்டும். நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2014
தேர்வு நடைபெறும் தேதி20.02.2014 முதல் 24.02.2014 வரை
விவரங்களுக்குwww.aicte-cmat.in