2 April 2014

Come to the Education Plus Fair

The Chennai edition of The Hindu Education Plus Fair will be held on April 4 and 5 at Chennai Trade Centre, Nandambakkam, between 10 a.m. and 5 p.m. The fair is organised with the objective of providing an opportunity for students to interact with institutions/professionals about various options available for higher studies.
Several leading colleges, IT training institutions, banks and financial institutions will be participating in the two-day fair. Youngsters may make their choice of courses from the plethora of information available on the latest developments in the higher education field.
N. Ram, Chairman of Kasturi and Sons, will deliver the inaugural address. T.V.Mohandas Pai, Chairman, Manipal Global Education Services, will be the chief guest for the event. Dr. G. Viswanathan, Founder and chancellor, VIT university, will preside. A comprehensive career guidance book, The Nxt Step, will be released on the occasion by the chief guest.
On both days, there are talks and presentations by experts from various fields and the floor will be open for Q and A sessions with the speakers. A free psychometric test will be offered by Bodhi on April 5, 3 p.m.
The fair will be a platform to showcase education opportunities across the country and facilitate representatives of institutions to interact with students. VIT University is the presenting sponsor. Bharath University, Dr. MGR University and Vel's University are associate sponsors.
For details and reservations for stalls, contact 98414-16933

Countdown JEE

With the exam just a week away, here are tips to help you crack the test.

The focus now shifts to the Joint Entrance Examination (JEE) which will decide the course of many an engineer aspirants’ career. The paper pen phase of the 2014 edition of the JEE-Mains is scheduled for April 6 and the online examinations will be conducted on April 9, 11, 12 and 19. Let’s look at some last-minute tips for the largest engineering entrance examination in India. The duration of the examination is three hours and will test the candidates on physics, chemistry and mathematics.
Pay attention
Traditionally, mechanics has been the heavy weight test area in physics. Definitely include the areas such as laws of motion, rotational motion, work, power, energy and kinematics in the plan for the final revision. Also do keep in mind that these areas are not compartmentalised as they are presented in your text books. It pays to complete your revision in all the areas mentioned with a comprehensive look at the multiple choice questions you have had difficulty during the model exams. Pay attention to the units and dimensional formulae. Electrostatics, current electricity and magnetism forms the other important set of topics in physics. Together, these two sets of topics have accounted for more than 80 per cent of questions in several of the past editions of the exam. Application questions using Young’s modulus, Bernoulli’s principle etc. are relatively easy, and so, do pay special attention to these while revising. Compared to mechanics, the section on properties of solids and liquids involves more memorising. At the same time, the questions can be presented as a contextual case study.

Revisit the basics
Physical chemistry, organic chemistry and inorganic chemistry have taken up weightages in the ratio of 4:3:3 in the past several years of AIEEE/JEE-Mains examinations. While the questions in physical chemistry could be calculation intensive, the questions in organic and inorganic chemistry will require the ability to immediately bring to mind the several properties of compounds and the manner in which they react with other substances. Most students have one favourite area from among the three. While it is okay to start searching for questions from that area in the actual test, complete your revision in all areas. Many a time, students leave out questions from a less favourite area that could otherwise have been done with ease, just because they did not spend time on the last minute refreshing. It’s a good tactic to revisit the very basics of atomic structure and chemical bonding.
Since you have learned this at the very beginning of Class XI, it will require preparation. Chemical thermodynamics and chemical kinetics is a test area students make relatively more mistakes while actually getting into the final solving phase. Special attention is required for studying the rates of reactions and the concentration of reactants.

Capture standard formats
Calculus – starting from differentiability, integral calculus and differential equations has remained the single largest test area. These topics together have accounted for just over 40 per cent in several versions of the examination over the years since its inception in 2004. The other heavyweights in mathematics are trigonometry, coordinate geometry and complex numbers. There are several patterns of questions — those that are called standard formats. Your revision should capture all the standard formats of equations so that you are able to immediately identify them in a question. This is almost one-third of the work done. If you are able to generally fix the direction of the question, the remaining task will be to work out the specific problem with respect to the variables mentioned.
Margin for error in this examination where more than 10 lakh students compete for admission is very limited. Just a couple of questions can make a big difference in your overall rank. So prepare well and let it show in your performance.

The writer is director, T.I.M.E. Chennai

1 April 2014

பேலன்ஸ் எதுக்கு? ஃப்ரீ கால் இருக்கு!

செல்போனில்  பேலன்ஸ் இல்லாதவர்கள் இலவசமாகப் பேச ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது

இப்போதெல்லாம் மாதச் செலவில் பாலுக்கு, பேப்பருக்கு என்று எடுத்துவைப்பது போல் செல்போனுக்கு என்று தனியாக பணம் எடுத்து வைக்கும் அளவுக்கு வீட்டில் இருக்கும் அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. என்னதான் கால் பூஸ்டர், மெசேஜ் பூஸ்டர் என்று போட்டாலும் 500 ரூபாய்க்கு குறையாமல் செல்போன் விழுங்கி விடும். ‘கவலையை விடுங்க. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லோருமே இலவசமாகப் பேசலாம்’ என்கிறார்கள் பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள்.

யாஷ்வாஸ் சேகர், விஜயகுமார் உமலுட்டி மற்றும் சண்டேஷ் ஈஸ்வரப்பா  என்கிற மூன்று மாணவர்களும் இணைந்து ஃப்ரீகால்(Freekall) என்கிற இலவச அழைப்புச் சேவையைக் கண்டுபிடித்து ஒரு நிறுவனமாக்கியிருக்கிறார்கள்.  இதன்மூலம் பேசுவதற்கு நம் போனில் பேலன்ஸ் தேவையில்லை. ஏற்கெனவே ஸ்கைப், வைபர், ஃபேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தி இலவசமாகப் பேசலாம் என்றாலும் அதற்கு எல்லாம் இணையம் தேவை. ஆனால் ஃப்ரீகாலுக்கு இணையம் கூடத் தேவையில்லை. நமது அலைபேசியில் இருந்து 080-67683693 என்கிற எண்ணுக்கு அழைத்தால் போதும், அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டு நமது அலைபேசிக்கு அழைப்பு வரும். அந்த அழைப்பை ஏற்றவுடன் நாம் பேச வேண்டிய எண்ணை பதிவு செய்யச் சொல்லி கணினியின் குரல் கேட்கும். நாம் எண்ணைப் பதிவு செய்தபின்பு பேச வேண்டிய நபருக்கு இணைப்பு கொடுக்கப்படும். இதன் செயல்முறை டிரங்க் கால் போல் இருந்தாலும் இது முழுக்க முழுக்க மேகக் கணிமை(Cloud computing) முறைப்படி இயங்குகிறது. ஜிமெயில், ஃபேஸ்புக் போல் இதற்கும் கணக்கை உருவாக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்கள் பன்னிரண்டு நிமிடங்கள் பேசலாம். கணக்கு இல்லாதபட்சத்தில் மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசமுடியும்.

இதை முதற்கட்டமாக பெங்களூருவில் சோதனை செய்து பார்த்தபோது மிக அதிக அழைப்புகள் வந்ததால் ஃப்ரீகாலின் சர்வர் ஏழு முறை பழுதடைந்து விட்டது. இதனால் தற்போது அதிகத் திறன் உள்ள சர்வர் பொருத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ஆம் தேதியில் இருந்து இந்தியா முழுமைக்கும் இந்தச் சேவை செயல்படுத்தப்படும் என்றும், ஒரே நாளில் இந்தியா முழுக்க ஒரு கோடி அழைப்புகள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஃப்ரீகால் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்கவில்லையே தவிர, வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது. அதாவது நீங்கள் டயல் செய்யும் போது ரிங்கிற்கு பதிலாக விளம்பரங்கள் ஓடும். அதே போல் பேசும் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு நடுவே விளம்பரம் ஒலிபரப்பப்படும். இதன் மூலம் வருடத்திற்கு நூற்றி எண்பது கோடி வரை வருமானம் பெறமுடியுமாம். இந்தியா மட்டுமில்லாமல் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் ஃப்ரீகாலுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்று ஃப்ரீகால் நினைக்கிறது. அதனால் ஆரம்பிக்கும் போதே உலகம் முழுக்க ஆரம்பிக்கலாமா என்று ஃப்ரீகால் யோசித்து வருகிறது.  ஃப்ரீகால் கணக்கை  http://www.freekall.in/ என்கிற இணையதளத்தில் சென்று பதிவுசெய்து கொள்ளலாம். https://www.facebook.com/freekall  என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் அவர்களது செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

மத்திய ஆயுத போலீஸ் படையில் 2,197 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை!

மத்திய ஆயுத போலீஸ் படையின் கீழ் இயங்கி வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, சஷாஸ்த்ரா சீமா பால் ஆகிய பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 167 இடங்களும், பழங்குடியினருக்கு 322 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 608 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 1,100 இடங்களும் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்குக் குறையாமலும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்கவேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு. என்.சி.சி. யில் பி அல்லது சி பிரிவு சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?:
எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 400 மதிப்பெண்கள். அப்ஜெக்ட்டிவ் முறையிலும், விரிவாக எழுதும் முறையிலும் எழுத்துத் தேர்வு இருக்கும். அப்ஜெக்ட்டிவ் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள். ஜெனரல் அவேர்னெஸ், ரீசனிங், குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யூட், இங்கிலீஷ் காம்ப்ரிஹென்சன் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வுக்கு விடையளிக்க மொத்தம் இரண்டு மணி நேரம் வழங்கப்படும்.
விரிவாக தேர்வு எழுதும் முறையில், இங்கிலீஷ் லாங்க்வேஜ் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆங்கில மொழியில் காம்ப்ரிஹென்சன், பிரிசிஸ், லெட்டர் ரைட்டிங் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவை இருக்கும். இத்தேர்வுக்கு விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும்.

இந்த இரண்டு தேர்வுகளிலும் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலிருந்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணிக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்தாள் ஜூன் 22-ஆம் தேதியும், இரண்டாம் தாள் செப்டம்பர் 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை,  திருச்சி ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இத்தேர்வை எழுதலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?:
பொதுப் பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆஃப்லைன் முறையில் ‘central recruitment fee stamps (CRFS)’ மூலம் தபால் துறை அலுவலகத்தில் செலுத்தவும். ஆன்லைனில்  செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். பின்னர் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2014
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai  
விவரங்களுக்கு: http://ssconline.nic.in/





26 March 2014




படித்தால் மட்டும் போதாது

சுந்தருக்கு வயது 22. புத்திசாலியான இளைஞன். பி.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்திருக்கிறான் (தாவரவியல், விலங்கியல், வேதியியல்) அவன். தற்போது மேற்கொண்டு படிக்க விரும்பாததால், வேலைக்கு விண்ணப்பித்தான்.
சாந்தியும் பி.எஸ்ஸி. படித்தாள். அடிப்படையான சில மென்பொருள்களைக் கற்றுக்கொண்டாள். கார் ஓட்டக் கற்றுக்கொண்டாள். மக்கள் தொடர்பிலும் குறுகிய காலப் பயிற்சியை முடித்தாள். வேலைக்கு விண்ணப்பித்தாள்.
யாருக்கு விரைவில் வேலை கிடைத்திருக்கும்?
சாந்திக்கும், சுந்தருக்கும் என்ன வித்தியாசம்?
சாந்தி தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வேலை என்னும் உலகத்திற்குள் அந்த உலகத்திற்குத் தேவையான திறன்களுடன் நுழைந்தாள். சுந்தரோ, அனுபவமற்ற பட்டதாரியாக வேலை தேடத் தொடங்கிவிட்டான்.
வேலைக்கான நேர்காணலில், சாந்தியின் மக்கள் தொடர்புத் திறன் போன்றவை, அத்தகைய திறமைகள் அற்ற இன்னொரு பட்டதாரியைவிட அவளை முன்னணியில் நிறுத்தின.
இவர்கள் இருவரது தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்து கவனித்துவந்தால் ஒரு விஷயம் புரியும். அடுத்த ஐந்து வருடங்களில் சாந்தியின் தொழில் வாழ்க்கை ஏறுமுகமாகவே இருக்கும். சுந்தரோ, குறைந்த தகுதியுடைய வேலையிலேயே இருப்பான். முன்னேற்றமும் பெரிதாக இருக்காது.

கூடுதல் திறன்கள் தேவை

நமது நாட்டில் வேலையற்ற, தகுதிக்குக் குறைவான வேலையில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இதுதான் நடக்கிறது. படிப்பில் கவனம் செலுத்தும் பலர், இதர திறன்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பட்டப்படிப்புப் படித்த நூறு பேர் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களில் கூடுதல் திறன்கள் உள்ளவர்களுக்குத்தான் முன்னுரிமை கிடைக்கும். அது மட்டுமல்ல. அவர்கள் வேலை தேடுவதற்கான களம் விரிவாக இருக்கும்.
திறமையை வளர்த்துக்கொள்வது என்பது, அறிவை வளர்த்துக்கொள்வது என்பதன் எல்லையைத் தாண்டிய ஓர் அம்சம். ஒரு செயலை உங்களால் செய்ய முடியும் என்றால் அந்த விஷயத்தில் உங்களுக்குத் திறமை இருக்கிறது என்று அர்த்தம். சுந்தர் வேலை என்ற உலகத்தில் நுழைந்தபோது, அந்த உலகம் சார்ந்த சில திறன்களுக்கு முன்னால், அவன் படிப்பு ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது. அவனது திறமைகள் மிகவும் குறைவு. அவனைப்
போன்ற ஏராளமானோர், வேலை உலகத்தில் போட்டியிடத் தேவையான, பிற சிறப்புத் தகுதிகள் இல்லாமலேயே வேலை என்னும் உலகத்தில் நுழைய நினைக்கிறார்கள்.
இந்தியாவில், இன்று மாணவர்களுக்குப் பல்வேறு வகையான பட்டப்படிப்புகள் உள்ளன. கல்லூரிகளில் பாடத்தை மட்டும்தான் சொல்லித்தருகிறார்கள். வேலை உலகத்திற்கான பிற திறன்களைக் கற்றுக் கொடுப்பதில்லை.
திறமைகள் குறைவாக இருந்தால் என்ன ஆகும்? வேலை கிடைப்பது சிரமமாகும். அல்லது போதிய சம்பளமோ வசதிகளோ அற்ற வேலைதான் கிடைக்கும்.
நீங்கள் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்தாலும் வெறும் கோட்பாட்டை மட்டும் படிப்பது போதாது. உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்வதென்பது மிகவும் முக்கியம். அதற்குக் கூடுதலாகப் படிப்பது, கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

பிற விஷயங்கள்

வேலை கொடுப்பவர்கள், விண்ணப்பதாரர் வெறும் கல்லூரிப் படிப்புச் சான்றிதழை மட்டும் வைத்திருக்காமல், அது தவிர வேறு என்ன செய்திருக்கிறார் என்பதையும் குறிப்பாகப் பார்க்கிறார்கள்.
பிற விஷயங்கள் என்பது என்ன? இலக்கியச் செயல்பாடுகளில் கலந்துகொள்வது, சமூக சேவை சார்ந்த செயல்பாடுகள், என்.சி.சி., சாரணர் இயக்கம், இசை முதலான திறமைகள், வாசிப்பு, கைத்தொழில், விளையாட்டுத் திறன் எனப் பல விஷயங்களைக் குறிப்பிடலாம். விளையாட்டில் தீவிரமான திறமைகள் கொண்டவர் வெறுமனே படிப்பை மட்டும் முடித்தவரைவிட வேலை உலகத்தில் முன்னணியில் இருப்பார்.
வரைவது, ட்ரில் செய்வது, வெல்டிங் முதலான கருவிகளைக் கையாள்வது போன்ற திறன்கள், தொழில்நுட்ப வேலைகளோடு சம்பந்தப்பட்டவை. கேபிள்கள் சம்பந்தப்பட்ட வேலை, மின்சாரம் தொடர்பான வேலைகள் ஆகியவறையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
தட்டச்சுத் திறன், வாடிக்கையாளர் தொடர்பு, மக்கள் தொடர்பு, அலுவலகப் பராமரிப்பு, கோப்புகளைச் சரியாக வைப்பது, கணக்கு தொடர்பான திறன்கள், பேச்சுத் திறன், பிரசண்டேஷன்களை உருவாக்கும் திறன் போன்றவை தொழில்நுட்பம் சாராத வேலைகளோடு தொடர்புடையது. விண்ணப்பதாரர்கள் இந்தத் திறன்களைக் கொண்டிருந்தால், அவர்களுக்குத் வேலை கிடைப்பது எளிதாகும்.
திறமைகளை எப்போது வளர்த்துக்கொள்ளலாம்? நீங்கள் வேலைக்கு விண்ணப்பிப்பதற்குச் சற்று முன்பு அல்ல. இதை வளர்த்தெடுக்கக் கொஞ்ச காலம் ஆகத்தான் செய்யும். திறனை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

என்ன செய்யலாம்?

#பொழுதுபோக்கு ஒன்றைப் பழக்கிக்கொள்ளுங்கள். படிப்பு, படிப்பு என 24 மணிநேரமும் படித்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானது அல்ல. உங்கள் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு, பொழுதுபோக்கு ஒன்றைப் பழகிக்கொள்ளுங்கள். அது உங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும்.
உங்கள் திறன்களை வளர்க்கவும் உதவும்.
#கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்: ஸ்க்ரூ டிரைவர், ஸ்பேனர், சுத்தியல், இவை நமது அன்றாட வாழ்க்கையின் பகுதிகள். ஆண்கள் மட்டுமே கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆண்கள், பெண்கள் அனைவருமே உபகரணங்கள், இயந்திரங்கள், மற்றும் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், அது நமது வாழ்க்கையை எளிதாக்கும்.
#வேலை அனுபவத்தை உருவாக்கும் வாய்ப்புகளைத் தேடுங்கள்: ஒரு நிறுவனத்தில் வாலன்டியராக வேலை பார்த்தால் அது வேலைக்கான அடிப்படைத் திறன்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். தொலைபேசியைக் கையாள்வது, அலுவலக விஷயங்கள், மற்றும் அலுவலகத்தின் அன்றாடச் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல் போன்றவை திறமைகளைக் கற்பதற்கான அம்சங்கள். நேர்காணலின்போது, ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வாலன்டியராக வேலை செய்திருக்கிறேன் என்று சொன்னால் அது நீங்கள் வேலை தொடர்பான திறனை அறிந்திருக்கிறீர்கள் என்ற செய்தியை வேலை தருபவர்களுக்குத் தெரிவிக்கும்.
இன்று, நிறுவனங்கள் பட்டப்படிப்புப் படித்தவர்களை மட்டும் தேடுவதில்லை. படிப்பைத் தாண்டி உங்களிடம் என்ன இருக்கிறது என்று பார்க்கின்றன. திறமைகளை அதிகரிக்கும் முயற்சியை இன்றே தொடங்குங்கள். அதிகத் திறமைகள் உங்களுக்கு இருந்தால் அது வேலை என்னும் உலகில் உள்ள தடைகளைத் தகர்த்தெறியலாம். மிகச் சிறந்த வேலையும் உங்களைத் தேடி வரும்.

Innovation


25 March 2014

Herbal Medicine To Prevent Heart Attack


National Science Day at Anna University, Tiruchirappalli


ஐஏஎஸ் இலவசப் பயிற்சி!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீஸ் தேர்வின் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் உள்ள தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் இலவசப் பயிற்சி அளிக்கிறது. மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள். நேர்முகத் தேர்வுப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், தங்களது மூன்று புகைப்படங்களுடன், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகலுடன் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விவரங்களுக்கு: 044-24621909, 24621475

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 292 ஜூனியர் என்ஜினீயர் பணி

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு விண்ணபிக்கலாம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.  ஓ.பி.சி பிரிவினருக்கு 77 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 42 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 20 காலியிடங்களும், மற்றவர்களுக்கு 153 காலியிடங்களும் உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2014
விவரங்களுக்கு: www.delhimetrorail.com

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 30 இணை என்ஜினீயர் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணை என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் - டெலிகம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2014
விவரங்களுக்கு: www.bel-india.com

சிட்கோவில் 84 உதவி என்ஜினீயர் பணி

மத்திய அரசின் கீழ் மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கி வரும் சிட்கோ நிறுவனத்தில் உதவி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் துறையில் பி.இ. அல்லது ஏ.எம்.ஐ.இ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2014
விவரங்களுக்கு: www.cidco.maharashtra.gov.in

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை

ந்திய கடற்படையில் எக்ஸ்கியூட்டிவ், சப்மெரைன், டெக்னிக் பிரிவுகளில் குறுகிய கால பணியில் டெக்னிக் பிரிவுகளில் குறுகிய கால பணிகளில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 191/2   வயதுக்குக் குறையாமலும் 25 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 2-1-1990-க்கு முன்னதாகவோ அல்லது 1.1.1995 தேதிக்குப் பிறகோ பிறந்திருக்கக் கூடாது.

டெக்னிக்கல் மற்றும் சப்மெரைன் பிரிவுக்கு மெக்கானிக்கல், மெரைன், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், புரொடக்‌ஷன், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், பவர் என்ஜினீயரிங், பவர் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். எக்சிக்யூட்டிவ் பிரிவுக்கு ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி.யில் ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரத்துடன் தகுந்த எடை இருக்க வேண்டும்.

தேர்வு முறை: இரண்டு பிரிவுகளில் தேர்வுகள் நடக்கும். முதல் பிரிவில் Intelligence test, picture perception, குழு விவாதத் தேர்வும், இரண்டாம் பிரிவில் psychological testing, group testing மற்றும் நேர்காணலும் நடத்தப்படும். இரண்டு பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவப்  பரிசோதனை இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை?
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் பத்தாம் வகுப்பு மதிப்பெண்  சான்றிதழையும், 25kb-க்குள் இருக்கும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

இணையதளத்தில் ‘Apply online’ பிரிவை கிளிக் செய்யவும். பின்னர் ’ˆOffice Entry’ பகுதிக்குச் சென்று ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த பின்னர், சரியாக உள்ளதா என சரிபார்த்து பிரிண்ட் அவுட் எடுக்கவும். பிரிண்ட் எடுத்த விண்ணப்பப் படிவத்துடன் கையெழுத்துள்ள பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும் சேர்த்து Post Box No. 04, Chankya Puri PO, New Delhi - 110 021என்ற முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்ப உறையின் மேல் ˆ‡ONLINE APPLICATION NO._________APPLICATION FOR SSC X(GS)/HYDRO CADRE/TECHNICAL BRANCH (E/L/SM) - DEC 2014 COURSE Qualification______ Percentage _____%. NCC "C' Yes/No  என்று எழுத வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.03.2014
விவரங்களுக்கு: www.nausena-bharti.nic.in

வேலைவாய்ப்பை அள்ளித் தரும் காலணி வடிவமைப்பு படிப்புகள்!

காலணி வடிவமைப்பு படிப்புகளுக்குப் புகழ் பெற்ற ஃபுட்வேர்  டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில் பி.டெஸ். இளநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த  மாணவர்கள் விண்ணப்பிக்க  வேண்டிய நேரம் இது.

த்தியவணிகத்துறைஅமைச்சகத்தின்கீழ்செயல்படும்ஃபுட்வேர்  டிசைன்அண்ட்டெவலப்மெண்ட்இன்ஸ்டிட்யூட்(எஃப்டிடிஐ), நொய்டா, சென்னை, ரேபரேலி, கொல்கத்தா, ரோடக், சிந்த்வாரா, ஜோத்பூர், குணாஆகியஇடங்களில்உள்ளன. இங்குபடித்தவர்கள்அமெரிக்கா, பிரிட்டன், இங்கிலாந்து, சிங்கப்பூர், சீனா, வளைகுடாநாடுகள், ஹாங்காங்போன்றபல்வேறுநாடுகளில்பணியாற்றுகிறார்கள். டாடா, பேட்டா, அடிடாஸ், நைக், வுட்லாண்ட், லேண்ட்மார்க், பூமா, கால்வின்கெய்ன், ஜாரா, கார்ட்லன்லண்டன், வில்ஸ்லைஃப்ஸ்டைல்போன்றபிரபலநிறுவனங்கள்இங்குபடிக்கும்மாணவர்களைவேலைக்குத்தேர்வுசெய்கின்றன.

சென்னைவளாகம், இருங்காட்டுக்கோட்டையில்சிப்கார்ஃபுட்வேர்பார்க்அருகேஉள்ளது. இங்கு, ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்‌ஷன்மேனேஜ்மெண்ட், ஃபேஷன்டிசைன், ஃபேஷன்மெர்ச்சன்டைசிங்அண்ட்ரீடெய்ஸ்மேனேஜ்மெண்ட்ஆகியபிரிவுகளில்இளநிலைபட்டப்படிப்பானபி.டெஸ். படிப்புஉள்ளது. ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்‌ஷன்மேனேஜ்மெண்ட்மற்றும்ஃபேஷன்மெர்ச்சன்டைசிங்அண்ட்ரீடெய்ல்மேனேஜ்மெண்ட்ஆகியபிரிவுகளில்எம்.பி.ஏ. படிப்புஉள்ளது.

ஃபுட்வேர்  டிசைன்அண்ட்டெவலப்மெண்ட்இன்ஸ்டிட்யூட்டில், ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்‌ஷன்மேனேஜ்மெண்ட், லெதர்குட்ஸ்அண்ட்அக்சசரிஸ்டிசைன், ஃபேஷன்டிசைன்ஆகியபாடப்பிரிவுகளில்பி.டெஸ். என்கிறநான்குஆண்டுபடிப்பில்சேரவும், ரீடெய்ஸ்மேனேஜ்மெண்ட், பிசினஸ்மேனேஜ்மெண்ட்பாடப்பிரிவுகளில்ஐந்துஆண்டுஒருங்கிணைந்தபிபிஏ-எம்பிஏபடிப்பில்சேரவும்பிளஸ்டூபடித்தமாணவர்கள்விண்ணப்பிக்கலாம். பிளஸ்டூதேர்வுஎழுதிவிட்டு, முடிவுக்காகக்காத்திருப்பவர்களும்விண்ணப்பிக்கலாம்.

இந்தப்படிப்பில்சேரவிரும்பும்மாணவர்கள்அகிலஇந்தியஅளவில்நடத்தப்படும்நுழைவுத்தேர்வைஎழுதவேண்டும். சென்னைஉள்ளிட்டமுக்கியநகரங்களில்இந்தநுழைவுத்தேர்வைஎழுதலாம். அப்ஜெக்ட்டிவ்முறையில்நடத்தப்படும்இந்தநுழைவுத்தேர்வில், கணிதம், ஆங்கிலத்தில்தலா45 கேள்விகளும், அறிவியலில்பொதுஅறிவு, ஜெனரல்அவேர்னஸ்ஆகியபிரிவுகளில்தலா30 கேள்விகளும்எனமொத்தம்150 கேள்விகள்கேட்கப்படும். இரண்டரைமணிநேரம்நடைபெறும்இத்தேர்வுக்குமொத்தமதிப்பெண்கள்150.  தவறானவிடைகளுக்குநெகட்டிவ்மதிப்பெண்கள்வழங்கப்படமாட்டாது.  எழுத்துத்தேர்வில்தகுதிபெறுவோருக்குநேர்முகத்தேர்வு, குழுவிவாதம், கிரியேட்டிவ்எபிலிட்டிடெஸ்ட்ஆகியவைநடத்தப்படும்.

ஃபேஷன்மெர்ச்சன்டைசிங்அண்ட்ரீடெய்ல்மேனேஜ்மெண்ட், ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்‌ஷன்மேனேஜ்மெண்ட்பாடப்பிரிவுகளில்எம்.பி.ஏ. படிப்புகளில்சேர, ஏதேனும்ஒருதுறையில்இளநிலைபட்டம்பெற்றவர்கள்விண்ணப்பிக்கலாம்.  கிரியேட்டிவ்டிசைன்அண்ட்கேட்-காம்பாடப்பிரிவில்இரண்டுஆண்டுஎம்.டெஸ். படிப்பில்சேர, பட்டதாரிமாணவர்கள்விண்ணப்பிக்கலாம்.

முதுநிலைபட்டப்படிப்புகளில்சேரவிரும்புவோருக்கானநுழைவுத்தேர்வில்குவான்டிடேட்டிவ்ஆப்டிட்யூட்அண்ட்ரீசனிங், ஆங்கிலம்ஆகியபிரிவுகளிலிருந்துதலா45 கேள்விகளும், ஜெனரல்அவேர்னஸ், பிஸினஸ்ஆப்டிட்யூட்ஆகியபிரிவுகளிலிருந்துதலா30 கேள்விகளும்கேட்கப்படும். மொத்தமதிப்பெண்கள்150. தேர்வுநேரம்இரண்டரைமணிநேரம். எழுத்துத்தேர்வில்தகுதிபெறுபவர்களுக்குநேர்முகத்தேர்வு, குழுவிவாதம்,  கிரியேட்டிவ்எபிலிட்டிடெஸ்ட்ஆகியவைநடத்தப்படும்.

இளநிலைபட்டப்படிப்பைப்பொருத்தவரை, ஸ்பான்சர்செய்யப்படும்மாணவர்களும்,BITSATஉள்ளிட்டகுறிப்பிட்டசிலநுழைவுத்தேர்வுகளைஎழுதியிருப்பவர்களும்நுழைவுத்தேர்வுஎழுதத்தேவையில்லை. முதுநிலைபடிப்பைப்பொருத்தவரை, ஸ்பான்சர்செய்யப்படும்மாணவர்களும், CAT, MAT, ZAT  உள்ளிட்டதேர்வுகளில்சிறப்பிடம்பெற்றமாணவர்கள், நுழைவுத்தேர்வை  எழுதத்தேவையில்லை. ஆனால், நேர்முகத்தேர்வு, கிரியேட்டிவ்எபிலிட்டிடெஸ்ட்போன்றவைஉண்டு. 

இளநிலைமற்றும்முதுநிலைபட்டப்படிப்புகளில்15 சதவீதஇடங்கள்ஸ்பான்சர்செய்யப்படும்விண்ணப்பதாரர்களுக்கானவை. விண்ணப்பத்துடன்வழங்கப்படும்விளக்கக்குறிப்பில்தேர்வுக்கானமாதிரிவினாத்தாள்வழங்கப்படும்.

எஃப்டிடிஐயின்இணையதளத்தில்மாதிரித்தேர்வுகளைஎழுதிப்பார்க்கவும்வசதிகள்செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பதுஎப்படி?: ஃபுட்வேர்  டிசைன்அண்ட்டெவலப்மெண்ட்இன்ஸ்டிட்யூட்களில்நேரடியாகரூ.500 செலுத்திவிண்ணப்பங்களைப்பெறலாம்அல்லதுபுதுதில்லியில்மாற்றத்தக்கவகையில்ரூ.500- க்கானடிமாண்ட்டிராப்ட்டைஎடுத்துஅனுப்பிவிண்ணப்பங்களைப்பெறலாம்.

விண்ணப்பிக்ககடைசிதேதி: 19.05.2014
நுழைவுத்தேர்வுநடைபெறும்தேதி: 13, 14 மற்றும்15.06.2014
விவரங்களுக்கு: www.fddi.com

NATA பி.ஆர்க். படிப்பில் சேர நுழைவுத் தேர்வு

கலை ரசனை, டிராயிங் திறமை, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் திறமையுள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். இந்தப் படிப்பில் சேர விரும்பும்  பிளஸ் டூ படித்த மாணவர்கள் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா (NATA) திறனறித் தேர்வை எழுத வேண்டும். மற்ற பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லாத தமிழகத்திலும்  பி.ஆர்க். படிப்பில் சேர வேண்டுமானால் இந்த நுழைவுத் தேர்வை எழுதியாக வேண்டும்.

கட்டடங்களையும் இதரக் கட்டுமானங்களையும் வடிவமைப்பது பற்றிய படிப்புதான் ஆர்க்கிடெக்ச்சர். கட்டடவியல் வடிவமைப்பாளர் கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமைகளைப் புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருள்கள் தேவைப்படும், கட்டடத்துக்கு எவ்வளவு காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கும் என்று பல்வேறு விஷயங்களையும் உள்வாங்கி கட்டுமானத்தைத் திட்டமிட வேண்டியது ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர்களின் பொறுப்பு. புராதனக் கட்டடங்களைக் பாதுகாப்பது, கிரீன் பில்டிங் என்கிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற  கட்டட வடிவமைப்பு, நகரங்களைத் திட்டமிடுதல், திறந்தவெளி வடிவமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களும் ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர்களின் பணிகளில் அடங்கும். கட்டுமானத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக ஆர்க்கிடெக்ச்சர் எனப்படும் கட்டடக்கலைத் துறையில் பி.ஆர்க். படித்த மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

கலை ரசனை, டிராயிங் திறமை, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் திறமையுள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். இந்தப் படிப்புக் காலம் ஐந்து ஆண்டுகள்.  இப்படிப்பை முடித்தவர்கள் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பில் பதிவு செய்த பிறகு ஆர்க்கிடெக்டுகளாகப் பணிபுரியலாம். கட்டட நிர்மாண நிறுவனங்களிலும் பொதுப்பணித்துறை போன்ற அரசுத் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். சில ஆண்டு அனுபவத்திற்குப் பிறகு இத்துறையின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்துகொண்டு சொந்தமாக கட்டடக்கலை நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பில் சேருவதற்கு கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா திறனறித் தேர்வை (NATA எழுதி இருக்க வேண்டும். இதற்கு தமிழக மாணவர்களும் விலக்கு அல்ல. தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எதுவும் நடத்தப்படுவதில்லை. ஆனால், பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு நேட்டா நுழைவுத் தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

இந்தத் தேர்வை யார் எழுதலாம்?
பி.ஆர்க். படிக்க விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற யாரும் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து, அந்தப் பாடத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.  லேட்டரல் என்ட்ரி மூலம் பிஆர்க் படிக்க முடியாது என்பதையும் மாணவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

தேர்வு எப்படி இருக்கும்?
இத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. டிராயிங் டெஸ்ட், இந்தத் தேர்வு காகிதத்தில் விடையளிக்கும் வகையில் இருக்கும். கொடுக்கப்பட்ட பொருளை வரையும் திறன், ஒளி, நிழலின்  தாக்கத்துடன் வரைதல், முப்பரிமாணம், இரு பரிமாணப் படங்கள் வரைதல், வண்ணங்களைப் பயன்படுத்துதல், அளவுகளைப் புரிந்துகொள்ளல், அன்றாட அனுபவங்களில் உள்ள கருத்துகளை ஞாபகத்திலிருந்து பென்சில் மூலம் வரைதல்...இப்படி மாணவர்களின் ஓவியத் திறனை அறிந்துகொள்ளும் வகையில் இத்தேர்வு இருக்கும். அதையடுத்து நடத்தப்படும் கலை உணர்வு சோதனைத் தேர்வில் (ஏஸ்தெட்டிக் சென்ஸிடிவிட்டி டெஸ்ட்) அப்ஜெக்ட்டிவ் முறையில் 40 கேள்விகள் கேட்கப்படும். அனலிட்டிக்கல் ரீசனிங், மென்டல் எபிலிட்டி, ஆர்க்கிடெக்ச்சுரல் அவேர்னஸ், இமாஜினேட்டிவ் காம்ப்ரிஹென்சன் போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் கலையுணர்வை சோதனை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கும். இத்தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுகிறது. டிராயிங் தேர்வில் ஒவ்வொரு மாணவரின் விடைத்தாளை மூன்று பேர் தனித்தனியே மதிப்பிட்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள். அதன் சராசரி மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

நேட்டா தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது 200-க்கு 80 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பினால், நேட்டா தேர்வை மீண்டும் எழுதலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக எழுதிய தேர்வு மற்றும் அதற்கு முந்தைய தேர்வின் சராசரி மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, மீண்டும் தேர்வு எழுதுவதை முடிவு செய்ய வேண்டும்.. இத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். மாணவர்களின் ஸ்கோர் கார்டை இணையதளத்தின் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

நேட்டா தேர்வு எப்போது நடைபெறுகிறது?
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நேட்டா தேர்வை எழுதலாம். தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நுழைவுத் தேர்வின் முதல் கட்டத் தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது கட்டத் தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும். தேசிய விடுமுறை நாட்கள் நீங்கலாக மற்ற வார நாட்களில் இத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிதான் நேட்டா தேர்வின் கடைசி தேதியாக இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?
இத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஆயிரம் ரூபாய். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது ஐசிஐசிஐ வங்கியின் கிளைகளில் செலான் மூலமும் செலுத்தலாம். வங்கிகளுக்கான புராசசிங் கட்டணத்தையும் மாணவர்களே செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் சமர்ப்பித்த விண்ணப்பித்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு, நேட்டா தேர்வு எழுத விரும்பும் மையத்தை அணுக வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் தேர்வுக்கான தேதியை பெறலாம். பத்தாம் வகுப்பு மதிப்பெண்.

சான்றிதழின் சான்றொப்பம் பெறப்பட்ட நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டிய  விண்ணப்பப் படிவ பிரிண்ட் அவுட், சான்றொப்பம் பெறப்பட்ட அடையாள சான்றிதழ், நேட்டா கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, இ-மெயில் முகவரி ஆகியவற்றுடன் தேர்வு மையத்தை மாணவர்கள் அணுக வேண்டும். தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான அப்பாயிண்ட்மெண்ட் வவுச்சர் வழங்குவார்கள். அதில் விண்ணப்பதாரரின் ஐடி, அப்பாயிண்ட்மெண்ட் எண், எக்ஸாம் கீ ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் இரண்டு கவுண்டர் பாயில்களும் இருக்கும். அதில் மாணவர்கள் முன்னதாகவே கையெழுத்திட்டு விடக்கூடாது. தேர்வு அறையில் மேற்பார்வையாளர் முன்னிலையில்தான் அதைக் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். அத்துடன் தேர்வு மைய பதிவேட்டில் தேர்வுக்கு முன்னதாகவும் தேர்வு அறையிலிருந்து வெளியேறும் போதும் கையெழுத்திட வேண்டும். இதுகுறித்த விரிவான தகவல்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?
முன்பயிற்சி தேவையில்லாத அளவுக்குத்தான் நேட்டா தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கட்டடக்கலை குறித்து குறைந்தபட்ச அறிவோ அல்லது அதுகுறித்து அறியாமலோ இருப்பார்கள் என்பதை உணர்ந்தே இத்தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் கலை ரசனை, டிராயிங் திறமை ஆகியவற்றை சோதனை செய்யும் வகையிலேயே நேட்டா தேர்வு இருக்கும். ஆர்க்கிடெக்ச்சுரல் அவேர்னஸ் மாணவர்களிடம் இருக்கிறதா என்பது குறித்தும் சில கேள்விகள் இருக்கும். படிப்பதன் மூலமாகவும் இன்டர்நெட் மூலமாகவும் ஆர்க்கிடெக்கசர் படிக்கும் மாணவர்களிடமும், ஆர்க்கிடெக்டுகளிடமும் இதுகுறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். கம்ப்யூட்டர் மூலம் தேர்வை எழுதுவதற்கு கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைப் பயிற்சி தேவைப்படும். இத்தேர்வுக்கும் பயிற்சி அளித்து மாணவர்களைத் தயார் படுத்த நிறுவனங்களும் இருக்கின்றன. எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே நேட்டா இணையதளத்தைப் பார்த்து, தாங்களே தயாராகி இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம், தேர்வு மையங்களில் எந்தப் பயிற்சியும் அளிக்க அனுமதிக்கப்படமாட்டாது. ஏனெனில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொருவிதமாக வினாத்தாள் இருக்கும். எனவே, நேட்டா தேர்வின் முந்தைய கேள்வித்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படாது.

பி.ஆர்க் படிப்பில் சேர தனியே விண்ணப்பிக்க வேண்டுமா?
நேட்டா தேர்வை எழுதிய மாணவர்கள், அந்தத் தேர்வு மதிப்பெண்களை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பி.ஆர்க். படிப்பில் அட்மிஷன் பெற முடியும். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு பி.ஆர்க். மாணவர்களைச் சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் தனியே கவுன்சலிங் நடத்துகிறது. நேட்டா நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன், பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200-க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கவுன்சலிங்கிற்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். எனவே, தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் பி.ஆர்க். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும் நேட்டா நுழைவுத் தேர்வை எழுத மறக்காமல் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.nata.in

21 March 2014

BOOTSPARK'14 National Level Technical Symposium - MCA,AURCC

Date of the Symposium : 04/04/2014

Click here for more details

Two Days Workshop on NuMICRO ARIM Cortex MO and its Applications - Dept. of EEE

Date of the workshop :25th & 26th March 2014

The Co-ordinator, 
Workshop on “NuMICRO ARM Cortex M0 and its 
Applications” 
Dept. of Electrical and Electronics Engg., 
College of Engineering Guindy, 
Anna University, Chennai - 600 025 
Phone : 044 - 2235 7802 
Fax : 044 - 2235 7800 
E-mail : rk1905@annauniv.edu / rk1905@hotmail.com

UG and PG Exchange programme at KTH, Royal Institute of Technology, Sweden - CIA

Fall in love with science

If you are love science and ­technology and want to come up with innovative solutions to day-to-day problems, you can go work on your ideas at the National Science Museum in your city.
The National Council of Science Museums (NCSM), an autonomous society under the ministry of culture, is taking several steps to encourage students to take up research and come up with innovative projects by providing them resources to train and ­experiment.
One such step is its collaboration with Intel India to launch the National Science, Technology, Engineering, and Mathematics (STEM) Acceleration Programme recently. The programme focuses on initiatives aimed towards promoting creativity, innovation and a do-it-yourself attitude among students. This collaboration would work to create the world’s first Galileo Corner at the Innovation Centre of NCSM at the National Science Museum in New Delhi.
GS Rautela, director general, NCSM, says, “With such initiatives, we try to help them demystify technology and unleash their innovative capacities. We give them a platform to take their ideas to the next level, participate in competitions, attend lectures and exhibitions and also interact with experts. We have established 60 innovation centres across India in three years.” 
NCSM administers 25 science centres/museums/planetariums across the country.
In addition to development of science centres/museums, NCSM strives to communicate science and educate masses by its mobile science exhibitions, lectures, demonstrations, training and workshops. “The school system in our country doesn’t encourage problem-solving. We have set up information resource centres, robotics labs, ideas labs, an ideas box and a problem corner at the museums. A National Innovation Festival held annually encourages students to showcase their innovations. Students can also become members of our Innovation Hub, facility aimed at supplementing formal school education for seeking new ways to bring innovative science teaching to them,” adds Rautela.

In 2013-14, NCSM is creating dedicated spaces for innovation-centric activities by the youth in five of its major science museums/centres in Guwahati, Mumbai, Bangalore, Kolkata and New Delhi.
Thanks to : Hindustan Times 12th March 2014.

Workshop on Latest Developments in Printing Ink Technology - Dept. of Printing Technology

Date of the Workshop : 22/03/2014

Click here for more details

IT professionals launch new education website


BHUBANESWAR: A group of young IT professionals has launched a new software-based website intending to enhance the quality of the education system and to enrich campus life in an innovative way. 

"(http://www.backyard.in) is an online educational cum social networking service like Facebook. It will help everyone in an educational institution — including the principal, administrators, faculties and students — in enhancing the quality of education and the software will tie the whole college in a logical thread," Sarathi Sabyasachi Sahoo, the leader of the group, said. 

Sahoo, an IT professional who worked with Yahoo for five years said: "We have taken 40 technical and management colleges and two colleges in the city into consideration at the initial stage. Before developing the software, a survey was conducted by our team members in various technical colleges in the city and we got a good response to the idea." 



Stating that the software/website will provide various services to the students, Sahoo said each individual will be given login id and password to access his/her ID, provide a dashboard with separate login-in access to all students along with teachers, various modules of the software will take care of all processes of an institution like- student-teacher interaction, senior-junior interaction, doubt clearance, regular e-attendance, buying and selling of goods like draft, apron and others. 

The software has the module to manage the hall of fame, notice board, and the library. 

Various feature of this website include advance search bar, genuine id for students, user friendly interface, performance graph for students in terms of subjects, latest news update on the dashboard, question and answer section (where a student can ask any question on any subject under the courses of study and this can be answered by the concerned teacher or any other student). 

The website also provides facilities like in-built chat and message, unlimited photo upload and information about the college events, news and holidays, he said.

Thanks to Times of India 21/03/2014

National Workshop on Advancements in Metal Forming - Dept. of Mechanical Engg., ANNA UNIVERSITY REGIONAL CENTRE, COIMBATORE

Date of the Workshop : 8th & 9th April 2014

CONTACT ADDRESS
The completed registration form with DD to be sent to
The Organizing Secretary
“ADVANCEMENTS IN METAL FORMING”
Department of Mechanical Engineering
 Anna University, Regional Centre, Coimbatore
 Jothipuram PO, Coimbatore-641 047.
Contact No: +91 9443654639
Email ID: idme2k14@gmail.com

Click here for more details 

Workshop on PCB Design & Circuit Simulation using Altium Designer - Dept. of ECE, ANNA UNIVERSITY REGIONAL CENTRE, COIMBATORE

Date of the Workshop : 28th MARCH 2014

Dr. V.R.Vijaykumar 
Associate Professor and Coordinator 
Department of ECE 
Anna University Regional Centre, Coimbatore 
Mettupalayam Road, Jothipuram 
Coimbatore – 641 047 
Cell No. + 91 9442014139 
+91 9865285501, +91 9791434524 
Email ID: nwbn09@ymail.com 

THE IMAGINE CUP INNOVATION COMPETITION

ORGANIZED BY
Microsoft
ELIGIBLE STUDENTS
EVENT ENDS
31 Jul 2014
EVENT LOCATION
Online
DESCRIPTION
The next big thing could come from you. Incredible, world-changing software innovations often come from students. Social networks, music services, digital photography apps, gadgets and robotics – the list goes on. We’re looking for the next big thing and we know students like you are going to make it.
 This competition is the doorway to your success. If you can win here, you can go anywhere. If you’ve got a great idea, assemble a great team and work hard to bring that idea to life. Your project could be on devices all over the world, changing lives and giving people the thrill of seeing the future come to life right in front of them.
 The Imagine Cup Innovation Competition is a global contest for the best new innovative software and the winning team will take home $50,000 (US). Create a desktop or tablet project using Windows, or a mobile project using Windows Phone, or a browser project using Windows Azure and you could win big at the Imagine Cup World Finals in Seattle 2014.

கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி

கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். என்விரான்மெண்டல் என்ஜினீயரிங் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.பி.ஏ. அல்லது சி.ஏ. அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.04.2014
விவரங்களுக்கு: www.coalindia.in

சி.எம்.பி.டி.ஐ. நிறுவனத்தில் ஜூனியர் சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட் பணி

சென்ட்ரல் மைன் பிளானிங் அண்ட் டிசைன் இன்ஸ்டிட்யூட்டில் ஜூனியர் சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.  காலியிடங்கள்: 42
விண்ணப்பிக்க கடைசி தேதி:  31.03.2014
விவரங்களுக்கு: www.cmpdi.co.in

கோடைகாலப் பயிற்சி

 நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு கோடை கால விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி முதல் ஆண்டு அல்லது 2012-13 ஆண்டுகளில் பிஇ, பிடெக் அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்த கோடை காலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இந்த கோடை கால ஃபெல்லோஷிப் திட்டத்தின் கீழ் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தங்களது கல்லூரி அல்லது இருப்பிடத்திலிருந்து இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்திற்கு வந்து போவதற்கு இரண்டாம் வகுப்பில் ரயிலில் பயணம் செய்வதற்கான அலவன்ஸ் வழங்கப்படும். தங்குமிடமும் உணவும் இலவசம். பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு ஃபெல்லோஷிப்பாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.1,500 வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேரத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மே, ஜூன் மாதங்களில் ஒரு மாத காலம் பயிற்சி இருக்கும். பயிற்சிக் காலத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்களுடன்  இணைந்து ஆராய்சிப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதன் மூலம் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தின் இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

அதனைப் பூர்த்தி செய்து, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தின் உதவிப் பதிவாளருக்கு (அகாதெமிக்) அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாது. ‘IISC Summer Fellowship in Science and Engineering for SC/ST students - 2013’ என்று விண்ணப்பத்தை அனுப்பும் உறையில் குறிப்பிட வேண்டும்.

விவரங்களுக்குhttp:/www.iisc.ernet.in

12 March 2014

11 March 2014

Workshop on Image and Pattern Recognition (WIPREC'14) - Dept. of IT & CSE, BIT

Date of the workshop : 22nd March

Click here for more details 

Cloud Computing-Hadoop, Apache ActiveMQ Web-hosting workshops

Date of the Workshop : 14, 15 March 2014
Click here for more details

Workshop on Advances in Energy Storage for Energy Management and broader use of Renewable Sources - IES

Date of the Workshop : 13th March 2014

Click here for more details

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பி.எஸ்சி. படித்தவர்களுக்கு வேலை!

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சயின்டிஃபிக்  அசிஸ்டெண்ட் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் டூ வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.9,300 உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, ‘சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் பி’ நிலைக்கு பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பத்தை உரிய முறையில் டைப் செய்தோ அல்லது கையால் எழுதியோ சாதாரணத் தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட பிற சான்றிதழ்களின் நகல்களை உரிய அதிகாரிகளிடமிருந்து சான்றொப்பம் பெற்று இணைத்து அனுப்ப வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Manager (HRM),
Nuclear Power Corporation of India Limited,
Kudankulam Nuclear Power Project,
Kudankulam Post, Radhapuram Taluk,
Tirunelveli District, Tamilnadu - 627 106.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2014
விவரங்களுக்கு: www.npcil.nic.in

என்ஜினீயர்களுக்கு இஸ்ரோவில் வேலை!

ந்திய அரசின்கீழ் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) சயின்டிஸ்ட் பணியில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.  

மொத்தப் பணியிடங்கள்: 102.

பி.இ. அல்லது பி.டெக். எலெக்ட்ரானிக்ஸ்  படித்தவர்களுக்கு 35 பணியிடங்களும், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 50 பணியிடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு 17 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஏதேனும் ஒன்றில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். 13.03.2014-ஆம் தேதி நிலவரப்படி 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிமுறையின்படி வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இஸ்ரோ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பக் கட்டணத்துக்கான சலானை டவுன்லோடு செய்ய வேண்டும். சலானைப் பூர்த்தி செய்து, அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் இஸ்ரோவின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். வங்கி அளிக்கும் இரண்டு ரசீதுகளில் ஒன்றை, தங்களது கோப்புக்காக வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு சலான் ரசீதை Head, P&GA (ICRB), ISRO Head Quarters, Antariksh Bhavan, New BEL Road, Bangalore - 560094 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதற்கு அடையாளமாக வழங்கப்படும் ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணை குறிப்பிட்டு, கல்விச்  சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை  இணைத்து தபால் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்ப வேண்டும்.

ஏற்கெனவே மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ பணிபுரிந்து வருபவர்கள், தாங்கள் இந்தப் பணியில் விண்ணப்பிப்பதற்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்பதைக் குறித்தும் NO OBJECTION LETTER-ஐ தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரியிடமிருந்து வாங்கி அனுப்ப வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புதுதில்லி  உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2014

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.04.2014

விவரங்களுக்கு: http://isro.gov.in

Photo Slideshow of One Day National Seminar on Research paper, Dissertation and Project Proposal Preparation