25 March 2014

வேலைவாய்ப்பை அள்ளித் தரும் காலணி வடிவமைப்பு படிப்புகள்!

காலணி வடிவமைப்பு படிப்புகளுக்குப் புகழ் பெற்ற ஃபுட்வேர்  டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில் பி.டெஸ். இளநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த  மாணவர்கள் விண்ணப்பிக்க  வேண்டிய நேரம் இது.

த்தியவணிகத்துறைஅமைச்சகத்தின்கீழ்செயல்படும்ஃபுட்வேர்  டிசைன்அண்ட்டெவலப்மெண்ட்இன்ஸ்டிட்யூட்(எஃப்டிடிஐ), நொய்டா, சென்னை, ரேபரேலி, கொல்கத்தா, ரோடக், சிந்த்வாரா, ஜோத்பூர், குணாஆகியஇடங்களில்உள்ளன. இங்குபடித்தவர்கள்அமெரிக்கா, பிரிட்டன், இங்கிலாந்து, சிங்கப்பூர், சீனா, வளைகுடாநாடுகள், ஹாங்காங்போன்றபல்வேறுநாடுகளில்பணியாற்றுகிறார்கள். டாடா, பேட்டா, அடிடாஸ், நைக், வுட்லாண்ட், லேண்ட்மார்க், பூமா, கால்வின்கெய்ன், ஜாரா, கார்ட்லன்லண்டன், வில்ஸ்லைஃப்ஸ்டைல்போன்றபிரபலநிறுவனங்கள்இங்குபடிக்கும்மாணவர்களைவேலைக்குத்தேர்வுசெய்கின்றன.

சென்னைவளாகம், இருங்காட்டுக்கோட்டையில்சிப்கார்ஃபுட்வேர்பார்க்அருகேஉள்ளது. இங்கு, ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்‌ஷன்மேனேஜ்மெண்ட், ஃபேஷன்டிசைன், ஃபேஷன்மெர்ச்சன்டைசிங்அண்ட்ரீடெய்ஸ்மேனேஜ்மெண்ட்ஆகியபிரிவுகளில்இளநிலைபட்டப்படிப்பானபி.டெஸ். படிப்புஉள்ளது. ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்‌ஷன்மேனேஜ்மெண்ட்மற்றும்ஃபேஷன்மெர்ச்சன்டைசிங்அண்ட்ரீடெய்ல்மேனேஜ்மெண்ட்ஆகியபிரிவுகளில்எம்.பி.ஏ. படிப்புஉள்ளது.

ஃபுட்வேர்  டிசைன்அண்ட்டெவலப்மெண்ட்இன்ஸ்டிட்யூட்டில், ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்‌ஷன்மேனேஜ்மெண்ட், லெதர்குட்ஸ்அண்ட்அக்சசரிஸ்டிசைன், ஃபேஷன்டிசைன்ஆகியபாடப்பிரிவுகளில்பி.டெஸ். என்கிறநான்குஆண்டுபடிப்பில்சேரவும், ரீடெய்ஸ்மேனேஜ்மெண்ட், பிசினஸ்மேனேஜ்மெண்ட்பாடப்பிரிவுகளில்ஐந்துஆண்டுஒருங்கிணைந்தபிபிஏ-எம்பிஏபடிப்பில்சேரவும்பிளஸ்டூபடித்தமாணவர்கள்விண்ணப்பிக்கலாம். பிளஸ்டூதேர்வுஎழுதிவிட்டு, முடிவுக்காகக்காத்திருப்பவர்களும்விண்ணப்பிக்கலாம்.

இந்தப்படிப்பில்சேரவிரும்பும்மாணவர்கள்அகிலஇந்தியஅளவில்நடத்தப்படும்நுழைவுத்தேர்வைஎழுதவேண்டும். சென்னைஉள்ளிட்டமுக்கியநகரங்களில்இந்தநுழைவுத்தேர்வைஎழுதலாம். அப்ஜெக்ட்டிவ்முறையில்நடத்தப்படும்இந்தநுழைவுத்தேர்வில், கணிதம், ஆங்கிலத்தில்தலா45 கேள்விகளும், அறிவியலில்பொதுஅறிவு, ஜெனரல்அவேர்னஸ்ஆகியபிரிவுகளில்தலா30 கேள்விகளும்எனமொத்தம்150 கேள்விகள்கேட்கப்படும். இரண்டரைமணிநேரம்நடைபெறும்இத்தேர்வுக்குமொத்தமதிப்பெண்கள்150.  தவறானவிடைகளுக்குநெகட்டிவ்மதிப்பெண்கள்வழங்கப்படமாட்டாது.  எழுத்துத்தேர்வில்தகுதிபெறுவோருக்குநேர்முகத்தேர்வு, குழுவிவாதம், கிரியேட்டிவ்எபிலிட்டிடெஸ்ட்ஆகியவைநடத்தப்படும்.

ஃபேஷன்மெர்ச்சன்டைசிங்அண்ட்ரீடெய்ல்மேனேஜ்மெண்ட், ஃபுட்வேர்டிசைன்அண்ட்புரடக்‌ஷன்மேனேஜ்மெண்ட்பாடப்பிரிவுகளில்எம்.பி.ஏ. படிப்புகளில்சேர, ஏதேனும்ஒருதுறையில்இளநிலைபட்டம்பெற்றவர்கள்விண்ணப்பிக்கலாம்.  கிரியேட்டிவ்டிசைன்அண்ட்கேட்-காம்பாடப்பிரிவில்இரண்டுஆண்டுஎம்.டெஸ். படிப்பில்சேர, பட்டதாரிமாணவர்கள்விண்ணப்பிக்கலாம்.

முதுநிலைபட்டப்படிப்புகளில்சேரவிரும்புவோருக்கானநுழைவுத்தேர்வில்குவான்டிடேட்டிவ்ஆப்டிட்யூட்அண்ட்ரீசனிங், ஆங்கிலம்ஆகியபிரிவுகளிலிருந்துதலா45 கேள்விகளும், ஜெனரல்அவேர்னஸ், பிஸினஸ்ஆப்டிட்யூட்ஆகியபிரிவுகளிலிருந்துதலா30 கேள்விகளும்கேட்கப்படும். மொத்தமதிப்பெண்கள்150. தேர்வுநேரம்இரண்டரைமணிநேரம். எழுத்துத்தேர்வில்தகுதிபெறுபவர்களுக்குநேர்முகத்தேர்வு, குழுவிவாதம்,  கிரியேட்டிவ்எபிலிட்டிடெஸ்ட்ஆகியவைநடத்தப்படும்.

இளநிலைபட்டப்படிப்பைப்பொருத்தவரை, ஸ்பான்சர்செய்யப்படும்மாணவர்களும்,BITSATஉள்ளிட்டகுறிப்பிட்டசிலநுழைவுத்தேர்வுகளைஎழுதியிருப்பவர்களும்நுழைவுத்தேர்வுஎழுதத்தேவையில்லை. முதுநிலைபடிப்பைப்பொருத்தவரை, ஸ்பான்சர்செய்யப்படும்மாணவர்களும், CAT, MAT, ZAT  உள்ளிட்டதேர்வுகளில்சிறப்பிடம்பெற்றமாணவர்கள், நுழைவுத்தேர்வை  எழுதத்தேவையில்லை. ஆனால், நேர்முகத்தேர்வு, கிரியேட்டிவ்எபிலிட்டிடெஸ்ட்போன்றவைஉண்டு. 

இளநிலைமற்றும்முதுநிலைபட்டப்படிப்புகளில்15 சதவீதஇடங்கள்ஸ்பான்சர்செய்யப்படும்விண்ணப்பதாரர்களுக்கானவை. விண்ணப்பத்துடன்வழங்கப்படும்விளக்கக்குறிப்பில்தேர்வுக்கானமாதிரிவினாத்தாள்வழங்கப்படும்.

எஃப்டிடிஐயின்இணையதளத்தில்மாதிரித்தேர்வுகளைஎழுதிப்பார்க்கவும்வசதிகள்செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பதுஎப்படி?: ஃபுட்வேர்  டிசைன்அண்ட்டெவலப்மெண்ட்இன்ஸ்டிட்யூட்களில்நேரடியாகரூ.500 செலுத்திவிண்ணப்பங்களைப்பெறலாம்அல்லதுபுதுதில்லியில்மாற்றத்தக்கவகையில்ரூ.500- க்கானடிமாண்ட்டிராப்ட்டைஎடுத்துஅனுப்பிவிண்ணப்பங்களைப்பெறலாம்.

விண்ணப்பிக்ககடைசிதேதி: 19.05.2014
நுழைவுத்தேர்வுநடைபெறும்தேதி: 13, 14 மற்றும்15.06.2014
விவரங்களுக்கு: www.fddi.com

NATA பி.ஆர்க். படிப்பில் சேர நுழைவுத் தேர்வு

கலை ரசனை, டிராயிங் திறமை, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் திறமையுள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். இந்தப் படிப்பில் சேர விரும்பும்  பிளஸ் டூ படித்த மாணவர்கள் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா (NATA) திறனறித் தேர்வை எழுத வேண்டும். மற்ற பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லாத தமிழகத்திலும்  பி.ஆர்க். படிப்பில் சேர வேண்டுமானால் இந்த நுழைவுத் தேர்வை எழுதியாக வேண்டும்.

கட்டடங்களையும் இதரக் கட்டுமானங்களையும் வடிவமைப்பது பற்றிய படிப்புதான் ஆர்க்கிடெக்ச்சர். கட்டடவியல் வடிவமைப்பாளர் கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமைகளைப் புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருள்கள் தேவைப்படும், கட்டடத்துக்கு எவ்வளவு காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கும் என்று பல்வேறு விஷயங்களையும் உள்வாங்கி கட்டுமானத்தைத் திட்டமிட வேண்டியது ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர்களின் பொறுப்பு. புராதனக் கட்டடங்களைக் பாதுகாப்பது, கிரீன் பில்டிங் என்கிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற  கட்டட வடிவமைப்பு, நகரங்களைத் திட்டமிடுதல், திறந்தவெளி வடிவமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களும் ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர்களின் பணிகளில் அடங்கும். கட்டுமானத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக ஆர்க்கிடெக்ச்சர் எனப்படும் கட்டடக்கலைத் துறையில் பி.ஆர்க். படித்த மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

கலை ரசனை, டிராயிங் திறமை, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் திறமையுள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். இந்தப் படிப்புக் காலம் ஐந்து ஆண்டுகள்.  இப்படிப்பை முடித்தவர்கள் கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பில் பதிவு செய்த பிறகு ஆர்க்கிடெக்டுகளாகப் பணிபுரியலாம். கட்டட நிர்மாண நிறுவனங்களிலும் பொதுப்பணித்துறை போன்ற அரசுத் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். சில ஆண்டு அனுபவத்திற்குப் பிறகு இத்துறையின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்துகொண்டு சொந்தமாக கட்டடக்கலை நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பில் சேருவதற்கு கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் அமைப்பு அகில இந்திய அளவில் நடத்தும் நேட்டா திறனறித் தேர்வை (NATA எழுதி இருக்க வேண்டும். இதற்கு தமிழக மாணவர்களும் விலக்கு அல்ல. தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எதுவும் நடத்தப்படுவதில்லை. ஆனால், பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு நேட்டா நுழைவுத் தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

இந்தத் தேர்வை யார் எழுதலாம்?
பி.ஆர்க். படிக்க விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற யாரும் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து, அந்தப் பாடத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.  லேட்டரல் என்ட்ரி மூலம் பிஆர்க் படிக்க முடியாது என்பதையும் மாணவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

தேர்வு எப்படி இருக்கும்?
இத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. டிராயிங் டெஸ்ட், இந்தத் தேர்வு காகிதத்தில் விடையளிக்கும் வகையில் இருக்கும். கொடுக்கப்பட்ட பொருளை வரையும் திறன், ஒளி, நிழலின்  தாக்கத்துடன் வரைதல், முப்பரிமாணம், இரு பரிமாணப் படங்கள் வரைதல், வண்ணங்களைப் பயன்படுத்துதல், அளவுகளைப் புரிந்துகொள்ளல், அன்றாட அனுபவங்களில் உள்ள கருத்துகளை ஞாபகத்திலிருந்து பென்சில் மூலம் வரைதல்...இப்படி மாணவர்களின் ஓவியத் திறனை அறிந்துகொள்ளும் வகையில் இத்தேர்வு இருக்கும். அதையடுத்து நடத்தப்படும் கலை உணர்வு சோதனைத் தேர்வில் (ஏஸ்தெட்டிக் சென்ஸிடிவிட்டி டெஸ்ட்) அப்ஜெக்ட்டிவ் முறையில் 40 கேள்விகள் கேட்கப்படும். அனலிட்டிக்கல் ரீசனிங், மென்டல் எபிலிட்டி, ஆர்க்கிடெக்ச்சுரல் அவேர்னஸ், இமாஜினேட்டிவ் காம்ப்ரிஹென்சன் போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் கலையுணர்வை சோதனை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கும். இத்தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுகிறது. டிராயிங் தேர்வில் ஒவ்வொரு மாணவரின் விடைத்தாளை மூன்று பேர் தனித்தனியே மதிப்பிட்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள். அதன் சராசரி மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

நேட்டா தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது 200-க்கு 80 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பினால், நேட்டா தேர்வை மீண்டும் எழுதலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக எழுதிய தேர்வு மற்றும் அதற்கு முந்தைய தேர்வின் சராசரி மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, மீண்டும் தேர்வு எழுதுவதை முடிவு செய்ய வேண்டும்.. இத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். மாணவர்களின் ஸ்கோர் கார்டை இணையதளத்தின் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

நேட்டா தேர்வு எப்போது நடைபெறுகிறது?
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நேட்டா தேர்வை எழுதலாம். தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நுழைவுத் தேர்வின் முதல் கட்டத் தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது கட்டத் தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும். தேசிய விடுமுறை நாட்கள் நீங்கலாக மற்ற வார நாட்களில் இத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிதான் நேட்டா தேர்வின் கடைசி தேதியாக இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?
இத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஆயிரம் ரூபாய். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது ஐசிஐசிஐ வங்கியின் கிளைகளில் செலான் மூலமும் செலுத்தலாம். வங்கிகளுக்கான புராசசிங் கட்டணத்தையும் மாணவர்களே செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் சமர்ப்பித்த விண்ணப்பித்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு, நேட்டா தேர்வு எழுத விரும்பும் மையத்தை அணுக வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் தேர்வுக்கான தேதியை பெறலாம். பத்தாம் வகுப்பு மதிப்பெண்.

சான்றிதழின் சான்றொப்பம் பெறப்பட்ட நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டிய  விண்ணப்பப் படிவ பிரிண்ட் அவுட், சான்றொப்பம் பெறப்பட்ட அடையாள சான்றிதழ், நேட்டா கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, இ-மெயில் முகவரி ஆகியவற்றுடன் தேர்வு மையத்தை மாணவர்கள் அணுக வேண்டும். தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான அப்பாயிண்ட்மெண்ட் வவுச்சர் வழங்குவார்கள். அதில் விண்ணப்பதாரரின் ஐடி, அப்பாயிண்ட்மெண்ட் எண், எக்ஸாம் கீ ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் இரண்டு கவுண்டர் பாயில்களும் இருக்கும். அதில் மாணவர்கள் முன்னதாகவே கையெழுத்திட்டு விடக்கூடாது. தேர்வு அறையில் மேற்பார்வையாளர் முன்னிலையில்தான் அதைக் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். அத்துடன் தேர்வு மைய பதிவேட்டில் தேர்வுக்கு முன்னதாகவும் தேர்வு அறையிலிருந்து வெளியேறும் போதும் கையெழுத்திட வேண்டும். இதுகுறித்த விரிவான தகவல்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?
முன்பயிற்சி தேவையில்லாத அளவுக்குத்தான் நேட்டா தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கட்டடக்கலை குறித்து குறைந்தபட்ச அறிவோ அல்லது அதுகுறித்து அறியாமலோ இருப்பார்கள் என்பதை உணர்ந்தே இத்தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் கலை ரசனை, டிராயிங் திறமை ஆகியவற்றை சோதனை செய்யும் வகையிலேயே நேட்டா தேர்வு இருக்கும். ஆர்க்கிடெக்ச்சுரல் அவேர்னஸ் மாணவர்களிடம் இருக்கிறதா என்பது குறித்தும் சில கேள்விகள் இருக்கும். படிப்பதன் மூலமாகவும் இன்டர்நெட் மூலமாகவும் ஆர்க்கிடெக்கசர் படிக்கும் மாணவர்களிடமும், ஆர்க்கிடெக்டுகளிடமும் இதுகுறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். கம்ப்யூட்டர் மூலம் தேர்வை எழுதுவதற்கு கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைப் பயிற்சி தேவைப்படும். இத்தேர்வுக்கும் பயிற்சி அளித்து மாணவர்களைத் தயார் படுத்த நிறுவனங்களும் இருக்கின்றன. எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே நேட்டா இணையதளத்தைப் பார்த்து, தாங்களே தயாராகி இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம், தேர்வு மையங்களில் எந்தப் பயிற்சியும் அளிக்க அனுமதிக்கப்படமாட்டாது. ஏனெனில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொருவிதமாக வினாத்தாள் இருக்கும். எனவே, நேட்டா தேர்வின் முந்தைய கேள்வித்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படாது.

பி.ஆர்க் படிப்பில் சேர தனியே விண்ணப்பிக்க வேண்டுமா?
நேட்டா தேர்வை எழுதிய மாணவர்கள், அந்தத் தேர்வு மதிப்பெண்களை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பி.ஆர்க். படிப்பில் அட்மிஷன் பெற முடியும். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு பி.ஆர்க். மாணவர்களைச் சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் தனியே கவுன்சலிங் நடத்துகிறது. நேட்டா நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன், பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200-க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கவுன்சலிங்கிற்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். எனவே, தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் பி.ஆர்க். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும் நேட்டா நுழைவுத் தேர்வை எழுத மறக்காமல் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.nata.in

21 March 2014

BOOTSPARK'14 National Level Technical Symposium - MCA,AURCC

Date of the Symposium : 04/04/2014

Click here for more details

Two Days Workshop on NuMICRO ARIM Cortex MO and its Applications - Dept. of EEE

Date of the workshop :25th & 26th March 2014

The Co-ordinator, 
Workshop on “NuMICRO ARM Cortex M0 and its 
Applications” 
Dept. of Electrical and Electronics Engg., 
College of Engineering Guindy, 
Anna University, Chennai - 600 025 
Phone : 044 - 2235 7802 
Fax : 044 - 2235 7800 
E-mail : rk1905@annauniv.edu / rk1905@hotmail.com

UG and PG Exchange programme at KTH, Royal Institute of Technology, Sweden - CIA

Fall in love with science

If you are love science and ­technology and want to come up with innovative solutions to day-to-day problems, you can go work on your ideas at the National Science Museum in your city.
The National Council of Science Museums (NCSM), an autonomous society under the ministry of culture, is taking several steps to encourage students to take up research and come up with innovative projects by providing them resources to train and ­experiment.
One such step is its collaboration with Intel India to launch the National Science, Technology, Engineering, and Mathematics (STEM) Acceleration Programme recently. The programme focuses on initiatives aimed towards promoting creativity, innovation and a do-it-yourself attitude among students. This collaboration would work to create the world’s first Galileo Corner at the Innovation Centre of NCSM at the National Science Museum in New Delhi.
GS Rautela, director general, NCSM, says, “With such initiatives, we try to help them demystify technology and unleash their innovative capacities. We give them a platform to take their ideas to the next level, participate in competitions, attend lectures and exhibitions and also interact with experts. We have established 60 innovation centres across India in three years.” 
NCSM administers 25 science centres/museums/planetariums across the country.
In addition to development of science centres/museums, NCSM strives to communicate science and educate masses by its mobile science exhibitions, lectures, demonstrations, training and workshops. “The school system in our country doesn’t encourage problem-solving. We have set up information resource centres, robotics labs, ideas labs, an ideas box and a problem corner at the museums. A National Innovation Festival held annually encourages students to showcase their innovations. Students can also become members of our Innovation Hub, facility aimed at supplementing formal school education for seeking new ways to bring innovative science teaching to them,” adds Rautela.

In 2013-14, NCSM is creating dedicated spaces for innovation-centric activities by the youth in five of its major science museums/centres in Guwahati, Mumbai, Bangalore, Kolkata and New Delhi.
Thanks to : Hindustan Times 12th March 2014.

Workshop on Latest Developments in Printing Ink Technology - Dept. of Printing Technology

Date of the Workshop : 22/03/2014

Click here for more details

IT professionals launch new education website


BHUBANESWAR: A group of young IT professionals has launched a new software-based website intending to enhance the quality of the education system and to enrich campus life in an innovative way. 

"(http://www.backyard.in) is an online educational cum social networking service like Facebook. It will help everyone in an educational institution — including the principal, administrators, faculties and students — in enhancing the quality of education and the software will tie the whole college in a logical thread," Sarathi Sabyasachi Sahoo, the leader of the group, said. 

Sahoo, an IT professional who worked with Yahoo for five years said: "We have taken 40 technical and management colleges and two colleges in the city into consideration at the initial stage. Before developing the software, a survey was conducted by our team members in various technical colleges in the city and we got a good response to the idea." 



Stating that the software/website will provide various services to the students, Sahoo said each individual will be given login id and password to access his/her ID, provide a dashboard with separate login-in access to all students along with teachers, various modules of the software will take care of all processes of an institution like- student-teacher interaction, senior-junior interaction, doubt clearance, regular e-attendance, buying and selling of goods like draft, apron and others. 

The software has the module to manage the hall of fame, notice board, and the library. 

Various feature of this website include advance search bar, genuine id for students, user friendly interface, performance graph for students in terms of subjects, latest news update on the dashboard, question and answer section (where a student can ask any question on any subject under the courses of study and this can be answered by the concerned teacher or any other student). 

The website also provides facilities like in-built chat and message, unlimited photo upload and information about the college events, news and holidays, he said.

Thanks to Times of India 21/03/2014

National Workshop on Advancements in Metal Forming - Dept. of Mechanical Engg., ANNA UNIVERSITY REGIONAL CENTRE, COIMBATORE

Date of the Workshop : 8th & 9th April 2014

CONTACT ADDRESS
The completed registration form with DD to be sent to
The Organizing Secretary
“ADVANCEMENTS IN METAL FORMING”
Department of Mechanical Engineering
 Anna University, Regional Centre, Coimbatore
 Jothipuram PO, Coimbatore-641 047.
Contact No: +91 9443654639
Email ID: idme2k14@gmail.com

Click here for more details 

Workshop on PCB Design & Circuit Simulation using Altium Designer - Dept. of ECE, ANNA UNIVERSITY REGIONAL CENTRE, COIMBATORE

Date of the Workshop : 28th MARCH 2014

Dr. V.R.Vijaykumar 
Associate Professor and Coordinator 
Department of ECE 
Anna University Regional Centre, Coimbatore 
Mettupalayam Road, Jothipuram 
Coimbatore – 641 047 
Cell No. + 91 9442014139 
+91 9865285501, +91 9791434524 
Email ID: nwbn09@ymail.com 

THE IMAGINE CUP INNOVATION COMPETITION

ORGANIZED BY
Microsoft
ELIGIBLE STUDENTS
EVENT ENDS
31 Jul 2014
EVENT LOCATION
Online
DESCRIPTION
The next big thing could come from you. Incredible, world-changing software innovations often come from students. Social networks, music services, digital photography apps, gadgets and robotics – the list goes on. We’re looking for the next big thing and we know students like you are going to make it.
 This competition is the doorway to your success. If you can win here, you can go anywhere. If you’ve got a great idea, assemble a great team and work hard to bring that idea to life. Your project could be on devices all over the world, changing lives and giving people the thrill of seeing the future come to life right in front of them.
 The Imagine Cup Innovation Competition is a global contest for the best new innovative software and the winning team will take home $50,000 (US). Create a desktop or tablet project using Windows, or a mobile project using Windows Phone, or a browser project using Windows Azure and you could win big at the Imagine Cup World Finals in Seattle 2014.

கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி

கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். என்விரான்மெண்டல் என்ஜினீயரிங் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.பி.ஏ. அல்லது சி.ஏ. அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.04.2014
விவரங்களுக்கு: www.coalindia.in

சி.எம்.பி.டி.ஐ. நிறுவனத்தில் ஜூனியர் சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட் பணி

சென்ட்ரல் மைன் பிளானிங் அண்ட் டிசைன் இன்ஸ்டிட்யூட்டில் ஜூனியர் சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.  காலியிடங்கள்: 42
விண்ணப்பிக்க கடைசி தேதி:  31.03.2014
விவரங்களுக்கு: www.cmpdi.co.in

கோடைகாலப் பயிற்சி

 நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு கோடை கால விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி முதல் ஆண்டு அல்லது 2012-13 ஆண்டுகளில் பிஇ, பிடெக் அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்த கோடை காலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இந்த கோடை கால ஃபெல்லோஷிப் திட்டத்தின் கீழ் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தங்களது கல்லூரி அல்லது இருப்பிடத்திலிருந்து இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்திற்கு வந்து போவதற்கு இரண்டாம் வகுப்பில் ரயிலில் பயணம் செய்வதற்கான அலவன்ஸ் வழங்கப்படும். தங்குமிடமும் உணவும் இலவசம். பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு ஃபெல்லோஷிப்பாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.1,500 வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேரத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மே, ஜூன் மாதங்களில் ஒரு மாத காலம் பயிற்சி இருக்கும். பயிற்சிக் காலத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்களுடன்  இணைந்து ஆராய்சிப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதன் மூலம் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தின் இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

அதனைப் பூர்த்தி செய்து, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தின் உதவிப் பதிவாளருக்கு (அகாதெமிக்) அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாது. ‘IISC Summer Fellowship in Science and Engineering for SC/ST students - 2013’ என்று விண்ணப்பத்தை அனுப்பும் உறையில் குறிப்பிட வேண்டும்.

விவரங்களுக்குhttp:/www.iisc.ernet.in

12 March 2014

11 March 2014

Workshop on Image and Pattern Recognition (WIPREC'14) - Dept. of IT & CSE, BIT

Date of the workshop : 22nd March

Click here for more details 

Cloud Computing-Hadoop, Apache ActiveMQ Web-hosting workshops

Date of the Workshop : 14, 15 March 2014
Click here for more details

Workshop on Advances in Energy Storage for Energy Management and broader use of Renewable Sources - IES

Date of the Workshop : 13th March 2014

Click here for more details

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பி.எஸ்சி. படித்தவர்களுக்கு வேலை!

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சயின்டிஃபிக்  அசிஸ்டெண்ட் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் டூ வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.9,300 உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, ‘சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் பி’ நிலைக்கு பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பத்தை உரிய முறையில் டைப் செய்தோ அல்லது கையால் எழுதியோ சாதாரணத் தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட பிற சான்றிதழ்களின் நகல்களை உரிய அதிகாரிகளிடமிருந்து சான்றொப்பம் பெற்று இணைத்து அனுப்ப வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Manager (HRM),
Nuclear Power Corporation of India Limited,
Kudankulam Nuclear Power Project,
Kudankulam Post, Radhapuram Taluk,
Tirunelveli District, Tamilnadu - 627 106.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2014
விவரங்களுக்கு: www.npcil.nic.in

என்ஜினீயர்களுக்கு இஸ்ரோவில் வேலை!

ந்திய அரசின்கீழ் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) சயின்டிஸ்ட் பணியில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.  

மொத்தப் பணியிடங்கள்: 102.

பி.இ. அல்லது பி.டெக். எலெக்ட்ரானிக்ஸ்  படித்தவர்களுக்கு 35 பணியிடங்களும், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 50 பணியிடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு 17 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஏதேனும் ஒன்றில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். 13.03.2014-ஆம் தேதி நிலவரப்படி 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிமுறையின்படி வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இஸ்ரோ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பக் கட்டணத்துக்கான சலானை டவுன்லோடு செய்ய வேண்டும். சலானைப் பூர்த்தி செய்து, அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் இஸ்ரோவின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். வங்கி அளிக்கும் இரண்டு ரசீதுகளில் ஒன்றை, தங்களது கோப்புக்காக வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு சலான் ரசீதை Head, P&GA (ICRB), ISRO Head Quarters, Antariksh Bhavan, New BEL Road, Bangalore - 560094 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதற்கு அடையாளமாக வழங்கப்படும் ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணை குறிப்பிட்டு, கல்விச்  சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை  இணைத்து தபால் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்ப வேண்டும்.

ஏற்கெனவே மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ பணிபுரிந்து வருபவர்கள், தாங்கள் இந்தப் பணியில் விண்ணப்பிப்பதற்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்பதைக் குறித்தும் NO OBJECTION LETTER-ஐ தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரியிடமிருந்து வாங்கி அனுப்ப வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புதுதில்லி  உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2014

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.04.2014

விவரங்களுக்கு: http://isro.gov.in

Photo Slideshow of One Day National Seminar on Research paper, Dissertation and Project Proposal Preparation

6 March 2014

SRF, JRF, RA, Asst Scientific Officers posts from NIPHM

Last Date for submission of Application : 12.03.2014.

Click here for more details 

Photo Slideshow of One Day National Seminar on E-Resources for Scholarly Communication



Organized by

Department of Library
Anna University, BIT Campus, 
Tiruchirappalli -- 620 024.

Convener

Dr. V. Thangaraj

Coordinators
M.Prakash & N. Shobana

Co coordinators
Ms. S. Maheswari
Mr. R. Arun Pandian 

annalibtry.blogspot.in/

4 March 2014

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் படிக்க வேண்டுமா?

ஜெர்மனியில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிற லட்சியம் பொறியியல் படிக்கும் மாணவர்களிடம் பரவலாக உள்ளது. ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழி கல்வி இருந்தாலும், ஜெர்மன் மொழி கற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஜெர்மனியில் படிக்க TOEFL தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். GRE நுழைவுத் தேர்வு கட்டாயம் இல்லை என்றாலும் எழுதுவது நல்லது. அதில் கிடைக்கும் மதிப்பெண்கள் சேர்க்கைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும்போதே, ஜெர்மன் மொழியை கற்றுக்கொள்வது அவசியம். சென்னையில் மேக்ஸ் முல்லர் பவன் கல்வி நிறுவனத்தில் ஜெர்மன் மொழி கற்பிக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் சான்றிதழை, ஜெர்மனி கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன.

இங்கிலாந்தில் பட்டம் படிக்க விரும்புவோர் IELTS ஆங்கில மொழித் திறன் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வில் ஒன்பது கிரேடுக்கு ஏழு கிரேடுகளில் நல்ல மதிப்பெண் வாங்கும்பட்சத்தில் அங்குள்ள சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இங்கு படிக்க GRE தேர்வு அவசியமில்லை. இங்கிலாந்தில் ஏராளமான ஓராண்டு படிப்புகள் உள்ளன. அதற்கு தகுந்த வேலைவாய்ப்புகளும் அங்கு ஏராளம். ஆனால், எந்தக் கல்வி நிறுவனத்தில் படித்தீர்கள் என்பதை வைத்தே வேலைவாய்ப்பு அங்கு கிடைக்கும். எனவே, நன்றாக விசாரித்து சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் படிக்க IELTS தேர்வு எழுத வேண்டும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் சிறந்த கல்லூரிகளில் எம்.பி.ஏ. படிக்க பட்டப் படிப்பு மட்டும் அல்ல, இரண்டு அல்லது மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

இவை தவிர, GMAT தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலம் உலகில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். இத்தேர்வு மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு மூன்றரை மணி நேரம் நடக்கும். நான்கு பகுதிகளை கொண்ட இதில், முதல் பகுதியில் ஒரு கட்டுரை எழுத வேண்டும். இரண்டாம் பகுதியான ரீசனிங் எபிலிட்டி தேர்வில் 12 கேள்விகள்.

மூன்றாம் பகுதியான குவான்டிடேட்டிவ் தேர்வில் 37 கேள்விகள். நான்காம் பகுதியான வெர்பல் தேர்வில் 46 கேள்விகள். இதில் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம் பிடிக்கலாம்.

வேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எப்படி?

பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்து முடித்ததும், அடுத்தகட்டமாக நல்ல நிறுவனத்தில் பணியில் சேர எடுக்கும் முயற்சி நமது வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய திருப்புமுனை. பணியில் சேர விண்ணப்பிப்பது சாதாரண விஷயமல்ல. அதில் முக்கியமான நடைமுறைகளை பலரும் கடைப்பிடிப்பதில்லை.

தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இ-மெயில் மூலமாகவே ரெஸ்யூம் அனுப்ப முடிகிறது. இக்கால இளைஞர்கள் ஜேம்ஸ்பாண்ட் ரவி, ஸ்மார்ட் கார்த்தி என விளையாட்டுத்தனமாக இ-மெயில் முகவரி வைத்திருக்கின்றனர். இதுபோன்ற இ-மெயில் முகவரியில் இருந்து விண்ணப்பிக்கும்போது, நிறுவனத்தின் பார்வையில், நம் மீதான நன்மதிப்பு குறையும்.

இ-மெயில் முகவரியில் நம்பர், குறியீடுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், பல நிறுவனங்களில் கணினியில் வைரஸ் பரவாமல் தடுக்க ஸ்பேன் ஃபில்டர் பயன்படுத்துகின்றனர். இதனால் எண், குறியீடுகளுடனான இ-மெயில் முகவரியில் இருந்து அனுப்பும் மெயில்கள் சென்று சேராமல் இருக்க வாய்ப்புள்ளது. நம் மீதான முதல் பார்வையே நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதால், தொழில் ரீதியாக இ-மெயில் முகவரியை வடிவமைத்து வைத்துக்கொள்வது நல்லது.

பணிக்கு செல்லும் நிறுவனத்தைப் பற்றி நன்கு ஆய்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் தொழில் நடவடிக்கை, பணி சார்ந்த தகவல்கள் என்பது போன்ற முக்கிய தகவல்களை நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன்பு, அந்நிறுவன இணையதளத்துக்கு சென்று தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். படித்த கல்வி நிறுவனம் பற்றிய தகவல்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது, உடன் கொண்டு செல்லும் ரெஸ்யூம் முக்கிய அம்சம். படிப்பு சார்ந்த அனைத்து தகவல்களும் அதில் இருக்க வேண்டும். சுய அறிமுகம், படித்த படிப்புகள், தெரிந்துவைத்திருக்கும் அம்சங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இந்த ரெஸ்யூம் 2 பக்க அளவிலும், வேலைக்கு விண்ணப்பிக்கக் கூடியவரின் சுய திறமை குறித்த தகவல்கள் 20 பக்கம் வரையும் இருக்கலாம். அதில் முழுமையான விவரங்களுடன் கூடிய சுய அறிமுகம், தனித்திறமைகள், படிக்கும்போது செய்த சாதனைகள் என சகலவிதமான தகவல்களையும் அளிப்பதன் மூலம், பணிக்கு கூடுதல் வாய்ப்புண்டு.

ஆடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். பென்சில்பிட், லோ-ஹிப் பேன்ட், ஷார்ட் சுடிதார், ஜிகினா, கண்ணாடி, பூ வேலைப்பாடு ஆடைகளை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஆடைகள் விஷயத்துக்காக ஒரு ஐ.டி. நிறுவன நேர்முகத் தேர்வில் 50 பேரை திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. ஃபார்மல் சுடிதார், பிளெய்ன், ஸ்டிரெய்ப்டு என பெண்கள் ஆடை விஷயத்தில் ஒழுங்குமுறை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்து மடித்துவிடுவது கூடாது. பலருக்கு டை கட்டத் தெரிவதில்லை. பேன்ட் பக்கிள்ஸ் வரை டையின் நுனிப்பகுதி இருக்க வேண்டும். ஃபார்மல் பேன்ட், சர்ட் அணிந்து நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டும். ஆடையில் அலங்காரத்தை காட்டுவதைவிட நேர்த்தியை, தூய்மையைக் காட்டுவது அவசியம். மற்ற நடைமுறைகளைப் பற்றி நாளை தெரிந்துகொள்ளலாம்

சிங்கப்பூரில் பட்டப் படிப்பு!

நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் சேர்ந்து இளநிலை பட்டப் படிப்பு படிக்க விரும்பும் பிளஸ் டூ மாணவர்கள்  விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

ஆர்க்கிடெக்ச்சர், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், பிஸினஸ் அனலிட்டிக்ஸ், மருத்துவம், என்ஜினீயரிங், நிதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட இளநிலை பட்டப் படிப்புகள் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் உள்ளன. பிளஸ் டூ படிப்பை முடித்தவர்களும், இந்த மார்ச் மாதம் பிளஸ் டூ தேர்வு எழுதவிருப்பவர்களும் இப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு தேவையான ஆவணங்களை (நகல்கள்) இணைத்து தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், IELTS, TOEFL, SAT போன்ற தேர்வுகளில் பெற்றிருக்கும் பாயிண்டுகள் (இருந்தால் மட்டும்), பாஸ் போர்ட் விவரங்கள் (இருந்தால் மட்டும்), படிப்பு நீங்கலாக மற்ற திறமைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

மிகச் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2014
விவரங்களுக்குwww.askadmissions.nus.edu.sg

என்.ஐ.டி.க்களில் எம்.சி.ஏ. படிப்பு!

திருச்சி, அகர்தலா, அலகாபாத், போபால், கோழிக்கோடு, துர்காபூர், ஜாம்ஷெட்பூர், குருஷேத்ரா, ராய்ப்பூர், வாரங்கல் போன்ற இடங்களில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்.ஐ.டி.) எம்.சி.ஏ. படிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

இப்படிப்பில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்படும் ‡NIMCET  2014 நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை  அகர்தலாவில் உள்ள என்.ஐ.டி.  நடத்துகிறது.  

விண்ணப்பிப்பது எப்படி?:  பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,800. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு கட்டணம் ரூ.900. பாரத ஸ்டேட் வங்கி கவுண்டரில் செலுத்தி இ-ரசீது பெற வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, பிரிண்ட் அவுட் எடுத்து இ-ரசீதுடன், தேவையான இதர ஆவணங்களையும் இணைத்து பதிவுத்  தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்.

The Secretary,
NIMCET  2014,
National Institute of Technology Agartala,
Barjala, Jirania  799046, Tripura (W).
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 03.04.2014
நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: 25.05.2014
விவரங்களுக்கு: www.nimcet2014.nita.ac.in

2 March 2014

வெளிநாட்டில் படிக்க வட்டியில்லா கல்விக்கடன் உதவி

வெளிநாட்டில் முதுநிலை படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மும்பையைச் சேர்ந்த கே.சி. மஹிந்திரா எஜுகேஷன் டிரஸ்ட், வட்டியில்லாத கல்விக் கடன் உதவி வழங்குகிறது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், தகுதி வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் அல்லது வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப் படிப்பு படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அங்கு படிப்பதற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும்.

தகுதியுடையோருக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியுடையோரின் பெயர்ப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, ஜூலை மாதம் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2014

விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
K.C.Mahindra Education Trust,
Cecil Court, 3rd Floor,
Near Regal Cinema,
Mahakavi Bushan Marg,
Colaba, Mumbai - 400 001.
விவரங்களுக்கு: www.kcmet.org/what-we-do-scholarship-Grants.aspx

தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் பிஎச்டி படிக்க ஸ்காலர்ஷிப்!

முழு நேரமாக பிஎச்டி படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த 700 மாணவர்களுக்குத் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழு நேரமாக பிஎச்டி ஆய்வுப் பட்டப் படிப்பைப் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், 700 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். தேவை ஏற்பட்டால், விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு, பொறியியல் பிரிவு மற்றும் பிற பிரிவுகளுக்கு ஏற்ற விகிதாசார அடிப்படையில் இந்த உதவித் தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.பகுதி நேரமாக பிஎச்டி ஆய்வை மேற்கொள்ளும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்க முடியாது.

இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள், முதுநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப் படிப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த உதவித் தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறு எந்தவிதமான கல்வி உதவித் தொகை அல்லது நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருக்கக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியுதவி அல்லது வேறு திட்டங்களில் பெறும் நிதியுதவி, இவற்றில் அதிகப் பயன் தரும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கலாம். குறைவான பயன் தரும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதியுதவியைத் திரும்பச் செலுத்த வேண்டும்.  மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட படிப்புக் கால அளவுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை கிடைக்கும்.

முதல் ஆண்டு மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை வழங்கலாம். இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு, அவர்களது ஆராய்ச்சி எந்த அளவுக்குத் திருப்திகரமாக உள்ளது என்பது குறித்து மாணவர்கள் படிக்கக் கூடிய பாடப்பிரிவின் தலைவர் மற்றும் ஆராய்ச்சி வழிகாட்டுநரால் அளிக்கப்படும் சான்றிதழைப் பொருத்து உதவித் தொகை வழங்கப்படும்.

பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளதுபோல், மாதிரி விண்ணப்பப் படிவத்தைத் தட்டச்சு செய்து, விவரங்களைப் பூர்த்தி செய்து வருகிற 28-ஆம் தேதிக்குள் இயக்குநர், ஆதி திராவிடர் நலத் துறை, சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்துடன், மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத் தலைவரின் பரிந்துரையும் அவசியம்.

Asst Engineer, Analyst & Other Posts From Hindustan Insecticides Limited

Hindustan Insecticides Ltd (HIL) invites applications for the recruitment of 11 Asst Engineer, Analyst & Other Posts on regular and contractual basis. Eligible candidates can apply on or before 07-03-2014. Other details like age limit, educational qualification, selection process, application fee, how to apply are given below…

Hindustan Insecticides Limited Vacancy Details:
Total No of Posts: 11

Name of the Post:
1. Assistant Engineer (Chemical): 04 Posts
2. Assistant Engineer (Mechanical): 01 Post
3. Safety Supervisor: 01 Post
4. Analyst (Trainee): 02 Posts
5. Lady Medical Officer: 01 Post
6. Instrument Mech. Gr.I: 02 Posts

Age Limit: Candidates age should be 30 years for Sl No 4 and 40 years for remaining. Age Relaxation is applicable for SC/ ST/ OBC & Ex–Serviceman candidates.

Educational Qualification: Candidates should have Degree in Chemical Engineering with at least 50% marks for Sl no 1 and Degree in Mechanical Engineering with 2 years experience for Sl No 2 and Degree in Chemical/ Mechanical Engineering with Diploma in Industrial Safety for Sl no 3 and refer notification for post wise qualification details.

Selection Procedure: Candidates are selected based on interview.

Application Fee: Candidates have to take Demand Draft (DD) for Rs.300/- for Sl No 6 and Rs.500/- for remaining in favour of “Hindustan Insecticides Limited” payable at Rasayani.

How to Apply: Eligible candidates can apply in prescribed format affixing recent passport size photograph along with DD, self attested photocopies of testimonials (Proof of Age, Educational Qualification, Experience and Caste Certificate) and by superscribing the name of the Post applied for and send to the Deputy General Manager (P&A), Hindustan Insecticides Limited, Post – Rasayani, Taluka – Panvel, Dist – Raigad, 410207, Maharashtra on or before 07-03-2014.

Last Date for Submission of Application: 07-03-2014.

82 Posts from IIT Hyderabad

Indian Institute of Technology (IIT) Hyderabad has issued notification for recruitment of the Librarian, Technical Officer, Sports Officer, Medical Officer and other posts on regular basis. Eligible candidates can send their applications on or before 14-03-2014. Other details like age limit, educational qualification, selection process and how to apply are given below…

IIT Hyderabad Vacancy Details:
Total No.of Posts: 82

Name of the Posts:
1. Librarian: 01 Post
2. Technical Officer: 01 Post
3. Technical Superintendent: 21 Posts
4. Network/System Administrator: 02 Posts
5. Sports Officer: 04 Posts
6. Medical Officer: 01 Post
7. Psychological Counselor: 02 Posts
8. Chief Security Officer: 01 Post
9. Deputy Registrar: 04 Posts
10. Assistant Registrar: 04 Posts
11. Executive Assistant: 09 Posts
12. Junior Engineer (Civil): 03 Posts
13. Junior Engineer (Electrical): 03 Posts
14. Junior Technician: 09 Posts
15. Junior Accountant: 05 Posts
16. Junior Assistant: 07 Posts
17. Junior Attendant: 05 Posts

Age Limit: Candidates age limit is 50 years for Post No.1 to 11 and 40 years for Post No.12 to 17. Age relaxation will be applicable as per the rules.

Educational Qualification: Candidates should possess Master degree in Library Science/ Information Science/ Documentation for Post No.1, BE/ B Tech in Mechanical/ Production/ Manufacturing/ Automobile for Post No.2, BE/ B Tech / M Sc/ Diploma in relevant field for Post No.3, BE/ B Tech/ MCA for Post No.4, Graduate in Physical Education from a recognised Institute/ University for Post No.5, MBBS degree from a recognised Institute/ University for Post No.6. Refer notification for Post wise educational qualification details.

Selection Process: Candidates would be selected based on their performance in Written test and/or skill test and interview.

Application Fee: Candidates have to pay the application fee of Rs.100/- in the form of Demand Draft only drawn in favour of “IIT Hyderabad” payable at “State Bank of India, (14182) – IIT Hyderabad (Kandi)”, IFS Code: SBIN0014182.

How to Apply: Eligible candidates can send their applications in the prescribed format along with attested copies of certificates, in support of date of birth, qualifications, knowledge, training, and experience stated in the application and application fee, etc enclosed in an envelope super scribed with the name of the post applied for and area where applicable, should reach to The Registrar, Indian Institute of Technology Hyderabad, Ordnance Factory Estate, Yeddumailaram- 502 205, Medak District, Andhra Pradesh on or before 14-03-2014.

Last Date for Submission of Applications: 14-03-2014.



21 February 2014

Two Days National Workshop - Neural Networks for Data Mining - Dept. of MCA, Regional Centre, Coimbatore

Short term Course for ORACLE PL/SQL Programming

Recruitment of Teaching Fellow - Dept. of Instrumentation Engineering, MIT Campus

Call for R & D Project Proposal in Biotechnology Industry Research Assistance Council under BIPP Scheme - CTDT

National Conference - Innovative Developments in Mechanical Engineering at Dept. of Mechanical Engg, Anna University Regional Centre, Coimbatore

Date of the Conferences: 21st and 22nd March 2014

Click here for more details 

Wokshop on Research Methodologies and Effective Paper Writing using LaTex - Computer Centre, MIT Campus, Anna University, Chennai

Date of the workshop : 8th –9th March 2014

Click here for more details 

Inaugural Ceremony of Safety Engineers Association(SEA) at ACT Campus, Chennai

One Week Methodology Workshop on LATEX, Open Source Software and Research Analysis - Phase I at Anna University, Regional Centre Coimbatore

Date of the workshop : 21 - 27 April, 2014

Click here for more details

Popular Lecture on Entrepreneurial Opportunities in Leather Sector at A C TECH., ANNA UNIVERSITY, CHENNAI - 25

National Level Students Technical Symposium ConCerT'14 at Dept. of Ceramic Technology, ACT Campus, Anna University

Recruitment of Technical Supporting Staff for AU-FRG ICC

20 February 2014

விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.

முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.

இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.