18 February 2014

CSIR –UGC நடத்தும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக  ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பும் பெற விரும்பும் அறிவியல்  பாட மாணவர்கள் சிஎஸ்ஐஆர்-யுஜிசி நடத்தும் நெட் தேர்வை எழுத வேண்டும். தற்போது, பொறியியல்  பட்ட மாணவர்களும் எம்பிபிஎஸ் பட்ட மாணவர்களும் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

ல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெற்று ஆராச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் அறிவியல் மற்றும் தொழில் ஆராச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும்  சிஎஸ்ஐஆர்-யுஜிசி விரிவுரையாளர் தகுதித் தேர்வை (நெட்) எழுத வேண்டும். இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை, அதாவது ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு நடைபெறும் தேதியில் மாறுதல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. தேர்வுக் கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கெமிக்கல் சயின்சஸ்,
  • லைஃப் சயின்சஸ்
  • எர்த், அட்மாஸ்பெரிக், ஓசன் அண்ட்  பிளானிட்டரி சயின்சஸ்
  • பிசிக்கல் சயின்ஸ்,
  • மேத்மேட்டிக்கல் சயின்சஸ்,
  • என்ஜினீயரிங் சயின்சஸ்

ஆகிய ஆறு பாடப் பிரிவுகளில் மூன்று மணி நேரம் இத்தேர்வு நடைபெறும். இந்தப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள். கேள்வித்தாள் ஏ,பி,சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். பகுதி-ஏ பிரிவு அனைத்துப் பாடங்களுக்கும் பொதுவானது. லாஜிக்கல் ரீசனிங், கிராபிக்கல் அனாலிசிஸ், அனலிட்டிக்கல் அண்ட் நியூமரிக்கல் எபிலிட்டி, குவான்டிடேட்டிவ் கம்பேரிசன், சீரியஸ் பார்மேசன், பசில்ஸ் போன்ற பிரிவுகளில் திறனறி வினாக்கள் இருக்கும்.

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பகுதி-பி பிரிவில் கணிதம், என்ஜினீயரிங் ஆப்டிட்யூட் ஆகியவை குறித்த வினாக்களும் பகுதி - சி பிரிவில் சம்பந்தப்பட்ட பாடங்களிலிருந்து அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகளும் கேட்கப்படும்.

மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பகுதி - பி பிரிவில் சம்பந்தப்பட்ட பாடங்களில் அப்ஜெக்ட்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். பகுதி - சி பிரிவில் அறிவியல் கோட்பாடுகள் குறித்து மாணவர்களின் அறிவை சோதனை செய்யும் வகையில் வினாக்கள் இருக்கும். இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இத்தேர்வை எழுதலாம்.

இந்தத் தேர்வை யார் எழுதலாம்?

பிஎஸ் நான்கு ஆண்டு பட்டப் படிப்பு, பிஇ, பிடெக், பிபார்ம், எம்பிபிஎஸ், ஒருங்கிணைந்த பிஎஸ்-எம்எஸ் அல்லது எம்எஸ்சி படிப்புகள் அல்லது அதற்கு நிகரான படிப்புகளில் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் இந்தப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ்சி படிக்கச்  சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி ஆனர்ஸ் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த எம்எஸ்.-பிஎச்டி படிப்பில்  சேர்ந்துள்ள மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். அதேசமயம், பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது  55 சதவீத மதிப்பெண்களும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

அறிவியல், பொறியியல் அல்லது வேறு பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் பிஎச்டி அல்லது ஒருங்கிணைந்த பிஎச்டி படிப்பில் பதிவு செய்த பிறகுதான் ஃபெல்லோஷிப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். விரிவுரையாளருக்கான நெட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஜேஆர்எஃப்-நெட் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, 28 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். விரிவுரையாளர் பணிக்கான நெட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இந்தியன் வங்கிக் கிளைகளில் விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தலாம். பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கட்டணம் ரூ.400. ஓபிசி பிரிவினருக்கு கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கு கட்டணம் ரூ.100. ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் செலானை டவுன்லோடு செய்து விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும்.

வங்கிகளில் மார்ச் 3-ஆம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 4. ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, வங்கி செலான் மற்றும் உரிய உரிய இணைப்புகளுடன் ‘Sr. Controller of Examination, Examination Unit, HRDG, CSIR Complex, Library Avenue, Pusa, New Delhi -   110012’ என்ற முகவரிக்கு மார்ச் 8-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். நீண்ட தூர பகுதிகளைச்  சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 14-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் முறை, தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்களை இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

விவரங்களுக்குwww.csirhrdg.res.in

9 February 2014

Science Academies sponsored Two-day Lecture Workshop on “Recent Advances in Materials Chemistry” at Anna University, BIT Campus, Tiruchirappalli

Date of the Workshop : 7th and 8th March,

Click here for Workshop Brochure

Click here for Workshop Registration Form 

Coordinator: 
Dr. K. Jothivenkatachalam
Department of Chemistry
Bharathidasan Institute of Technology
Anna University, Tiruchirappalli 620 024
Ph: +91 9443215423
E.mail: ramc2014bit@gmail.com

தமிழ் வழியில் இன்ஜினீயரிங் படிப்பு: இறுதியாண்டில் முதல் பேட்ச் மாணவர்கள்

தமிழகத்தில் 2010-ம் ஆண்டு முதன்முதலாக தமிழ்வழி இன்ஜினீயரிங் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பாடத்திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பாடத்திட்டத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகள் இயங்கி வருகின்றன.
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அப்போதைய திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் மாணவர்களும் தமிழ்வழிக் கல்வியை விரும்பி எடுத்தனர்.
தற்போது தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்வழியில் இன்ஜினீயரிங் படித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு சேர்ந்த முதல் பேட்ச் மாணவர்கள், இப்போது இறுதியாண்டை எட்டியுள்ளனர். தமிழ்வழியில் படித்த தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இறுதியாண்டு மாணவர் ஒருவர் கூறியதாவது:
எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே வளாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கில வழியில் படித்த மாணவர்களுக்குத்தான் அதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழ்வழி மாணவர்களுக்கு சொற்பமான அளவிலேயே வளாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்க அரசும் பல்கலைக்கழமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்முகத்தேர்வு அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:
தமிழ்வழி மாணவர்களுக்கு வேலை கிடைக்காததுபோல் ஒரு மாயை உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு தமிழ்வழி மாணவியே அதிகமான சம்பளத்தில் வேலைக்கு தேர்வாகியிருக்கிறார். தமிழ்வழியில் மெக்கானிக்கல் படிக்கும் எஸ்.சண்முகப்பிரியா என்ற அந்த மாணவியை மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம், ஆண்டுக்கு ரூ.5.6 லட்சம் சம்பளத்துக்கு தேர்வு செய்துள்ளது.
மேலும் பல நிறுவனங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம், அவையும் வளாக நேர்முகத்தேர்வுக்கு வருவதாக கூறியுள்ளன. ஆங்கில வழி மாணவர்களைப் போலவே டான்செட், கேட் போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதி தமிழ் வழி மாணவர்களும் மேற்படிப்பை படிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

7 February 2014

Managers, Sr Engineers, DGM, Sr Managers – 25 Posts from SJVN Limited

SJVN Limited Recruitment 2014 – Apply Online for Manager, Engineer & Other Posts:
Satluj Jal Vidyut Nigam Limited (SJVNL) invited applicaitons for the recruitment of 25 Manager, Engineer & Other Posts. Eligible candidates can apply Online from 11-02-2014 at 10:00 AM to 25-02-2014 at 6:00 PM. Other details like age limit, educational qualification, selection, application fee and how to apply are given below……

SJVN Limited Vacancy Details:

Total No of Posts: 25

Name of the Post:

Civil:
1. DGM/ E7: 01 Post
2. Sr. Manager/ E6: 02 Posts
3. Manager/ E5: 03 Posts
4. Deputy Manager/ E4: 03 Posts
5. Sr. Engineer/ E3: 03 Posts

Electrical:
1. DGM/ E7: 01 Post
2. Sr. Manager/ E6: 01 Posts
3. Manager/ E5: 02 Posts
4. Deputy Manager/ E4: 01 Posts
5. Sr. Engineer/ E3: 04 Posts

Mechanical:
1. Manager/ E5: 01 Post
2. Sr. Engineer/ E3: 03 Post

Age Limit: Candidates age should be 50 years for DGM and 45 years for  Sr. Manager & Manager and 40 years for Dy. Manager and 35 years for Sr. Engineer. Age Relaxation is applicable for SC/ ST candidates.

Educational Qualification: Candidates should have Full time regular Degree in Civil Engineering for Civil and Full time regular Degree in Electrical/ Electrical & Electronics Engineering for Electrical and Full time regular Degree in Mechanical Engineering for Mechanical with relevant experiences.

Selection Procedure: Candidates are selected based on interview.

Application Fee: Candidates have to take Demand Draft (DD) for Rs.300/- for general/ obc in favour of SJVN Limited payable at Shimla.

How to Apply: Eligible candidates can apply Online through the website www.sjvn.nic.in with scanned copy of latest passport size photograph as well as photograph of signatures in digital format (.jpg or .jpeg file only, less than 500 KB size) for uploading from 11-02-2014 at 10:00 AM to 25-02-2014 at 6:00 PM and submit hard copy of application alongwith DD, certificates in support of Educational/ Professional Qualification, Age, Category, Experience, Valid e-mail ID and mobile number, which should remain valid for atleast one year and send to Advt. No.71/2014, O/o DGM (Recruitment), SJVN Limited, Room No: 206, Himfed Building, Near BCS, New Shimla, HP- 171009 on or before 07-03-2014 by 6:00 PM.

Important Dates:
Starting Date of Online Application: 11-02-2014 at 10:00 AM.
Last Date for Submission of Online Application: 25-02-2014 at 6:00 PM.
Last Date for Submission of Hard Copy of Application: 07-03-2014 by 6:00 PM.

Click here for Recruitment Advt

6 February 2014

தெற்கு ரயில்வேயில் 1,666 பேருக்கு வேலை

தெற்கு ரயில்வேயில் 1,666  பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சேர விரும்புபவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலெக்ட்ரீஷியன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்ட் டி.வி. மெக்கானிக், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மோட்டார் வாகன மெக்கானிக், வயர்மேன், டீசல் மெக்கானிக், டர்னர், பெயிண்டர், கார்பெண்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர்கள் 18 வயதிலிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.40 (பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் படைவீரர்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) பணியில் பொதுப் பிரிவினருக்கு 157 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 45 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 18 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 63 காலியிடங்களும் உள்ளன. இந்தப் பணிக்கு  மொத்தம் 283 காலியிடங்கள் உள்ளன. டெக்னீஷியன் பணியில் பொதுப் பிரிவினருக்கு 782 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 347 காலியிடங்களும், பழங்குடியினருக்கு  275 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு  262 காலியிடங்களும் என மொத்தம்  1,383 காலியிடங்கள் உள்ளன.

எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?: எழுத்துத் தேர்வு மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்கான எழுத்துத் தேர்வில் ஜெனரல் அவேர்னஸ், மேத்மேட்டிக்ஸ், ஜெனரல் இன்டலிஜென்ஸ், ரீசனிங், ஜெனரல் சயின்ஸ், டெக்னிக்கல் எபிலிட்டி என ஆறு பிரிவுகளில் இருந்து 100 முதல் 120 கேள்விகள் வரை கேட்கப்படும். அதற்கு 90 நிமிடங்கள் உள்ளன. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?:
விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். விண்ணப்பப் படிவத்தில் நீலம்  அல்லது கறுப்பு பால் பாயிண்ட் பேனாவால் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். தற்போது எடுக்கப்பட்டிருக்கும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை, ‘The Assistant Secretary, Railway Recruitment Board, Chennai' payable at Chennai என்ற முகவரிக்கு டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது  விண்ணப்பக் கட்டணத்தை ’The Assistant Secretary, Railway Recruitment Board, Chennai' payable at 'GPO, Chennai’ என்கிற முகவரிக்கு இந்தியன் போஸ்டல் ஆர்டரும் அனுப்பலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கட்டணம் செலுத்திய டி.டி. அல்லது போஸ்டல் ஆர்டர் ரசீதையும், பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. சான்றிதழ் நகலையும், சாதிச் சான்றிதழ் நகலையும் சேர்த்து அனுப்பி வைக்கவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant Secretary, Railway Recruitment Board, No.5, Dr.P.V. Cherian Crescant Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600008.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 17.02.2014
தேர்வு நாள்: 15.06.2014
விவரங்களுக்கு: http://rrcb.gov.in/

தில்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் முதுநிலை படிப்புகள்

மோ.கணேசன்

சார்க் நாடுகள்  அமைப்பின் முயற்சியால்  தில்லியில் தொடங்கப்பட்டுள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள் அதற்கான நுழைவுத்தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

இந்தியா, இலங்கை, பூட்டான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளை அடக்கிய சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் முதுநிலை படிப்புகளைப் படிக்க உதவும் வகையில் சார்க் நாடுகள் அமைப்பின் முயற்சியால் கடந்த 2010-ஆம் ஆண்டு, தில்லியில் தெற்காசியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சர்வதேசத் தரத்தில் ஆசிரியர்கள், மிகச்சிறந்த நூலக வசதி, நவீன அறிவியல் ஆய்வுக்கூடங்கள், 24 மணி நேர இலவச இண்டர்நெட் இணைப்பு வசதி, மிகக்குறைந்த செலவில் ஹாஸ்டல் வசதி போன்ற நவீன வசதிகள் கொண்டது இப்பல்கலைக்கழகம். பொருளாதாரரீதியில் பின்தங்கியிருந்தாலும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். ஆவை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற பல்கலைக்கழகம் இது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் அப்ளைடு மேத்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி படிப்பும் இண்டர்நேஷனல் ரிலேஷன்ஸ், டெவலப்மெண்ட் எக்கனாமிக்ஸ், சோஷியாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் எம்ஏ படிப்பையும் படிக்கலாம். அத்துடன், எல்எல்எம் எனப்படும் மாஸ்டர் ஆப் லா படிப்பும் இங்கு உள்ளது. இதுதவிர, எம்பில், பிஎச்டி ஆய்வுப் படிப்புகளையும் படிக்க வாய்ப்புகள் உண்டு. முதுகலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். 30 மாணவர்களில் 15 இடங்கள் இந்திய மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 இடங்கள் பிற சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எம்ஏ மற்றும் எல்எல்எம் படிப்புகளில் சேர விரும்புவோர் தங்களது இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடனும், எம்எஸ்சி படிப்பில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளை ரெகுலர் முறையில் படித்து முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு முதுநிலை படிப்பிலும் சேருவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்ற விவரங்கள் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக தனி நுழைவுத் தேர்வு சார்க் நாடுகளின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர். கொல்கத்தா, லக்னோ, மும்பை, சண்டிகார், பாட்னா மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். எந்தப் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர விரும்புகிறார்களோ அந்தப் பாடப் பிரிவிலிருந்தும், ஜெனரல் அவேர்னஸ், நாட்டு நடப்புகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையிலும், விரிவாக பதில் அளிக்கும் முறையிலும் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 100.

படிப்புக் கட்டணம்: இந்தியா உள்ளிட்ட சார்க் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஓராண்டுக்கான படிப்புக் கட்டணம் 880 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் தோராயமாக 54 ஆயிரம் ரூபாய் ஆகும். விடுதி வசதி உண்டு. விடுதியில் தங்குவதற்கு மாத வாடகை ரூ. 500. உணவுக்கட்டணம் தனி.

கல்வி உதவித் தொகை: தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சேரும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன. நுழைவுத்தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பிரசிடெண்ட் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். இந்த ஸ்காலர்ஷிப்பில் முழு படிப்புக் கட்டணமும், விடுதிக் கட்டணமும் இலவசம். அத்துடன், அந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும். ஒவ்வொரு நாட்டிலும் நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இந்த பிரசிடெண்ட் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.

பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மாதம் 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரையில் உதவித்தொகை வழங்கப்படும். ஸ்காலர்ஷிப் அனைத்தும் ஓராண்டுக்கு வழங்கப்படும். அந்த ஓராண்டில் மாணவரின் படிப்புத்திறனைப் பொருத்து உதவித் தொகை அடுத்த ஆண்டிற்கு நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 600. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு என ஆன்லைன் மூலமாகவும், டிமாண்ட் டிராப்ட் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2014
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி: 06.04.2014.
விவரங்களுக்கு: http://sau.ac.in



‘‘தமிழக மாணவர்களிடம்  போதிய விழிப்புணர்வு இல்லை’’

கள்ளக்குறிச்சிதான் எனக்கு சொந்த ஊர்.  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிஇ படித்து முடித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது தெற்காசிய பல்கலைக்கழகத்தின் விளம்பரத்தினைப் பார்த்து எம்எஸ்சி, மேத்மேட்டிக்ஸ் படிப்புக்கு விண்ணப்பித்தேன்.

நுழைவுத்தேர்வு எளிமையாகத்தான் இருந்தது. அப்படி ஒன்றும் கடினமானதாக இல்லை. இந்த நுழைவுத்தேர்வுக்குத் தயாராக வேண்டுமெனில் இந்த இணையதளத்தில் பாடத்திட்டங்களும், நடைபெற்று முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை டவுன்லோடு செய்து பயிற்சி செய்தாலே எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம்.

உலகத்தரம் வாய்ந்த கல்வி முறை, சிறந்த நூலகம், பல்வேறு நாட்டு மாணவர்களுடன் இணைந்து படிக்கும் வசதி, குறைந்த கட்டணத்தில் ஹாஸ்டல் வசதி இப்படி எல்லா வகையிலும் தெற்காசியப் பல்கலைக்கழகம் ஒரு படி மேலே இருக்கிறது. இங்கு படிப்பது குறித்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

என் அப்பா பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரிகிறார். ஆண்டு வருமானம் 3 லட்சம் அவருக்கு. இந்த வருமானத்தின் அடிப்படையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலம் எனக்கு கிடைக்கிறது. இதனால் பொருளாதார நெருக்கடியின்றி இங்கு படித்துவருகிறேன். சென்ற ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து மூன்று பேர் இங்கு படிக்க வந்தோம். அதில் இரண்டு பேர் இங்கிருந்தபடியே சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து விட்டனர். ஆய்வுப் படிப்புகளில் ஈடுபடவேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகம் சரியானதொரு தேர்வு"

- தீபக் பாண்டியன்,
2-ஆம் ஆண்டு எம்எஸ்சி,
தெற்காசியப் பல்கலைக்கழகம்

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு பட்டதாரி மாணவர்களுக்கு மத்திய அரசு வேலை!

பொன்.தனசேகரன்

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வை எழுத வேண்டும்.


மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்களுக்காக ‘ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்’ ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வை (Combined Graduate)  நடத்துகிறது. சென்ட்ரல் செக்ரட்டேரியேட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன், இன்டலிஜென்ஸ் பீரோ, ரயில்வே அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், ஏஎஃப் தலைமையகம், மற்ற அமைச்சகங்கள், துறைகள், மற்றம் அரசு அமைப்புகளில் உதவியாளர் பணிகளில் சேர விரும்புபவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். அத்துடன், வருமானவரித் துறை இன்ஸ்பெக்டர், சுங்க வரித்துறை இன்ஸ்பெக்டர், தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் (எக்ஸாமினர்), அசிஸ்டெண்ட் என்போர்ஸ்மெண்ட் அதிகாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் (சிபிஐ), இன்ஸ்பெக்டர் ஆஃப் போஸ்ட்ஸ் (தபால் துறை) டிவிஷனல் அக்கவுன்டண்ட் (சிஏஜி அலுவலகங்களில்), ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் கிரேடு-2, போதை மருந்து தடுப்பு இன்ஸ்பெக்டர் (சென்ட்ரல் பீரோ ஆஃப் நார்காட்டிக்ஸ்) ஆகிய பணிகளில் சேர விரும்புகிறவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும். ஆடிட்டர், அக்கவுன்டண்ட், ஜூனியர் அக்கவுன்டண்ட், கிளார்க் (அப்பர் டிவிஷன் கிளார்க்), வரி உதவியாளர், கம்பைலர் போன்ற பணிகளில் சேர விரும்புபவர்களும் இத்தேர்வை எழுத வேண்டும்.

இந்தப் பணிகளில் சேர பட்டப் படிப்புப் படித்திருக்க வேண்டும். கம்பைலர் பணியில் சேர விரும்புபவர்கள், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை பட்டப் படிப்பில் கட்டாயப் பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ எடுத்துப் படித்திருக்க வேண்டும். ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் கிரேடு-2 பணியில் சேர விரும்புபவர்கள் பட்டப் படிப்பில் புள்ளியியல் பாடத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்பில் கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்து, புள்ளியியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் அல்லது பட்டப் படிப்பில் பொருளாதாரத்தை முக்கியப் பாடமாக எடுத்து, அத்துடன் புள்ளியியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது பட்டப் படிப்பில் வணிகவியல் பாடத்துடன், புள்ளியியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி அல்லது திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டியது அவசியம். உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்களுக்கு கம்ப்யூட்டர் திறன் இருக்க வேண்டியது அவசியம்.

வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர், மத்திய சுங்க வரித் துறை இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் (தடுப்பு அதிகாரி), இன்ஸ்பெக்டர் (எக்ஸாமினர்), இன்ஸ்பெக்டர் ஆஃப் போஸ்ட்ஸ், அசிஸ்டெண்ட் என்ஃபோர்ஸ்மெண்ட் ஆபீசர், இன்ஸ்பெக்டர் (சிபிஎன்) கம்பைலர், டிவிஷனல் அக்கவுன்டண்ட், ஆடிட்டர்ஸ், அப்பர் டிவிஷன் கிளார்க், டாக்ஸ் அசிஸ்டெண்ட்ஸ், ஜுனியர் அக்கவுண்டன்ட் அண்ட் அக்கவுண்டன்ட், சப் இன்ஸ்பெக்டர் (சிபிஎன்) ஆகிய பணிகளில் சேர விரும்புபவர்கள் 18 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும் அதாவது 2-01-1987க்கு முன்னதாகவோ அல்லது 1-01-1996க்குப் பிறகு பிறந்தவர்களாகவோ இருக்கக் கூடாது.


ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிக்கேட்டர் கிரேடு-2 பணியில் சேர விரும்புவர்களுக்கு 26 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. அதாவது, 2-01-1988க்கு முன்னதாகப் பிறந்திருக்கக்கூடாது. சிபிஐ பிரிவில் அசிஸ்டெண்ட், சப் இன்ஸ்பெக்டர் பணியில் சேர விரும்புபவர்கள், 20 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2-01-1987க்கு முன்னதாகவோ அல்லது 1-01-1994க்குப் பிறகு பிறந்தவர்களாகவோ இருக்கக் கூடாது.
தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 15 ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்படும். இதேபோல மற்ற சில பிரிவினருக்கும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தப் பணிகளில் சேருவதற்காக தகுதி மற்றும் விதிமுறைகள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த எழுத்துத் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது. முதலில் அப்ஜெக்ட்டிவ் முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதையடுத்து குறிப்பிட்ட பணிகளுக்காக தேவையைக் கருத்தில் கொண்டு கம்ப்யூட்டர் புரபிசியன்சி டெஸ்ட், இன்டர்வியூ, ஸ்கில் டெஸ்ட் போன்ற தேர்வுகள் நடத்தப்படும். கோவை, சென்னை, மதுரை, புதுச்சேரி, திருநெல்வேலி, திருச்சி உள்பட நாட்டின் பல்வேறு  முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வை எழுதலாம். இந்த TIER-1  எழுத்துத் தேர்வு ஏப்ரல் 27, மே 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் அதைத் தொடர்ந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தேர்வு நடைபெறும். TIER-2 எழுத்துத் தேர்வு (மூன்றாம் தாள்) ஆகஸ்ட் 30-ஆம் தேதியும், முதல் மற்றும் இரண்டாம் தாள்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் நடைபெறும்.


ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் தவிர, நேர்காணலுடன் கூடிய பணிகளில் சேருவதற்கு டயர்-1 தேர்வில் ஜெனரல் இன்டலிஜன்ஸ், ரீசனிங், பொது விழிப்புணர்வு, குவான்டிட்டேட்டிவ் ஆப்டிட்யூட், இங்கிலீஷ் காம்ப்ரிஹென்சன் ஆகியவற்றில் வினாக்கள் கேட்கப்படும். 2 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 200. டயர்-2 தேர்வில் குவான்டிட்டேட்டிவ் எபிலிட்டீஸ் பிரிவில் 100 கேள்விகள் கேட்கப்படும். இந்த இரண்டு மணி நேரத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். இங்கிலீஷ் லாங்வேஜ் அண்ட் காம்ப்ரிஹென்சன் பிரிவுக்கு  200 மதிப்பெண்கள். இதற்கும் விடையளிக்க 2 மணி நேரம் வழங்கப்படும். இதையடுத்து நேர்காணலுக்கு 100 மதிப்பெண்கள். உதவியாளர் (சிஎஸ்எஸ்) பணியில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மட்டும் கம்ப்யூட்டர் புரபிசியன்சி டெஸ்ட் நடத்தப்படும்.

நேர்காணல் இல்லாத கம்பைலர் அல்லாத வேறு பணிகளுக்கு டயர்-1, டயர்-2 தேர்வுகள் இதேபோல இருக்கும். வரி உதவியாளர் பணிக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஸ்கில் டெஸ்ட் நடத்தப்படும்.
ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர் (கிரேடு-2) பணியில் சேர விரும்புபவர்களுக்கு டயர்-1 தேர்வு ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல இருக்கும். டயர்-2 தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கு 400 மதிப்பெண்களும் மூன்றாவது தாளுக்கு (புள்ளியியல்) 200 மதிப்பெண்களும் வழங்கப்படும். அத்துடன் நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதேபோல கம்பைலர் பணிக்கு டயர்-1, டயர்-2 தேர்வு இருக்கும். ஆனால் நேர்காணல் இருக்காது. இத்தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இத்தேர்வு எழுத விரும்புபவர்களுக்கான கட்டணம் ரூ.100. பெண் விண்ணப்பதாரர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம் அல்லது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம். எந்தப் பணிக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தை ஒரு முறைக்கு மேல் அனுப்பக்கூடாது. விண்ணப்பிக்கும் முன்னதாக தகுதிகள், தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது நல்லது. பணி நியமனத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படும். இடஒதுக்கீட்டுக்கான பயன்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.


இந்தப் போட்டித் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். அசாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், மிசோராம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், காஷ்மீர், இமாசலப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் போன்ற தொலை தூரப் பகுதிகளைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். முதலாவது பிரிவின் கீழ் உள்ள பணிகளுக்கு ஆன்லைன் மூலம் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையும் இரண்டாவது பிரிவுப் பணிகளுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்ணை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள், பிரிண்ட் அவுட்டுகளை தனியே அனுப்ப வேண்டியதில்லை. இத்தேர்வு குறித்த விரிவான தகவல்கள், ‘எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்’ இதழிலும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் போட்டித் தேர்வை எழுத பெண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: http://ssconline.nic.in



இலவச எம்டெக் படிப்பு: படித்ததும் உடனடி வேலை

ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் எம்டெக் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் படிக்க என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகையும் வழங்கி,  படித்து முடித்த தகுதியான மாணவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலையும் வழங்குகிறது எல் அண்ட் டி நிறுவனம்.

இந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் எல் அண்ட் டி என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டியூப்ரோ. சிறந்த திட்ட மேலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், சென்னை மற்றும் தில்லி ஐஐடிக்கள், திருச்சி, சூரத்கல் ஆகிய இடங்களில் உள்ள என்ஐடிகளில் எம்டெக் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி ஸ்பான்சர் செய்கிறது இந்த நிறுவனம்.

இந்த இரண்டு ஆண்டு படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் இந்த ஆண்டு தேர்ச்சி பெறுபவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் 10-ஆம் வகுப்பிலும் 12-ஆம் வகுப்பிலும் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். சிஜிபிஏ என்றால் 10-க்கு 6.50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்கள் (சிஜிபிஏ என்றால் 10-க்கு 6.75 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 1-07-2014 நிலவரப்படி, 23 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. உயரம் குறைந்தது 160 சென்டி மீட்டரும் குறைந்த பட்சமாக 50 கிலோ எடை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். பார்வைத் திறனும் கணக்கில் கொள்ளப்படும். அதாவது, மாணவர்கள் கண்ணாடி அணிந்திருந்தால் பார்வைத் திறன் குறைபாடு + அல்லது - 5 வரை இருக்கலாம்.


எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடிக்கள் மற்றும் என்ஐடிக்கள் எழுத்துத் தேர்வையும் தொடர்ந்து நேர்முகத் தேர்வையும் நடத்தும். அதன் அடிப்படையில் மாணவர்கள் இந்த 24 மாத கால முதுநிலை பட்டப் படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இந்தப் படிப்புக்கான படிப்புக் கட்டணத்தை எல் அண்ட் டி நிறுவனமே செலுத்தி விடும். அத்துடன் மாணவர்களுக்கு, மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.  இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலையில் சேர அனுமதிக்கப்படுவர். இந்தத் திட்டத்தின்கீழ் படிக்கச் சேரும் மாணவர்கள், வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டால், குறைந்தது ஐந்து ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணி செய்ய உத்தரவாதம் அளித்து  ரூ.3 லட்சத்துக்கான உறுதிப் பத்திரம் எழுதித் தர வேண்டும்.
உதவித் தொகையுடன் கூடிய, இந்த எம்டெக் படிப்பில் சேர விரும்பும் என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், இந்தப் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.lntecc.com





4 February 2014

One-day workshop on Programmable Logic Controller (PLC) at Dept. of Chemical Engineering, AC Tech, Anna University, Chennai

Date of the workshop: 25 February 2014

Two day's workshop on Research Perspectives in Bio medical Signal and Image Processing at Dept. of ECE, Regional Centre, Anna University:Tirunelveli Tirunelveli

Date of the workshop : 6th and 7th March

Regional Office, Anna University, Trichy Visiting Faculty Recruitment January - 2014

Last date for submission of Application : 06/02/2014

National Conference on Drastic Innovation in Energy Thrive (DIET'14) at Dept. of EEE, University College of Engineering, Panruti

Date of the Conference : 14th March 2014

Click here for more details

மெக்கானிக்கல் மேற்படிப்புக்கு சிறப்பான எதிர்காலம்

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களுக்கு இணையாக சம்பளம் பெறமுடிவதில்லை’ என்பது மெக்கானிக்கல் இன்ஜினீயர்களின் பொதுவான புகார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் திட்டமிட்டு மேற்படிப்பு படித்தால் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களைவிட அதிகம் சம்பாதிக்கலாம்.

மெக்கானிக்கல் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும்போதே, கேட்-காம் (CAD-CAM), பி.ஆர்.ஓ.இ.(PROE) மற்றும் CMC மிஷினிங் உள்ளிட்ட 6 மாத, ஓராண்டு படிப்புகளை படித்து வைத்துக் கொள்வதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவோர் எம்.இ. பவர் எனர்ஜி அல்லது தெர்மல் எனர்ஜி தேர்வு செய்யலாம். தவிர, அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே இருக்கும் எம்.இ. ஹை வோல்டேஜ் இன்ஜினீயரிங் படிக்கலாம்.
திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் வெல்டிங் இன்ஜினீயரிங், டிசைன் அண்ட் ப்ரொடக் ஷன் ஆஃப் தெர்மல் பவர் எக்யூப்மென்ட் படிப்புகள் உள்ளன. எம்.டெக். பட்ட மேற்படிப்பில் இண்டஸ்ட்ரியல் அண்ட் சேஃப்டி இன்ஜினீயரிங், ப்ரொடக் ஷன் , மேனுஃபேக்
சரிங் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. தவிர, எம்.டெக். ரோபாடிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் படிப்புகள் அநேக கல்லூரிகளில் உள்ளன. மும்பை ஐ.ஐ.டி.யில் 6 மாதம் மற்றும் ஓராண்டு படிப்பான பைப்பிங் இன்ஜினீயரிங் உள்ளது. சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டூல் டிசைன் கல்வி நிறுவனத்தில் எந்திர உபகரணங்கள் வடிவமைப்பு குறித்து குறைந்த கால வகுப்புகள் நடத்துகின்றனர்.
திருச்சி பெல் நிறுவனத்தினர் திறமை மிக்க பொறியாளர்களை நுழைவுத் தேர்வு மூலம் பணிக்கு எடுத்து, தங்களுக்கு தேவையான 6 மாத படிப்புகளையும் வழங்குகின்றனர். இதுகுறித்து பத்திரிக்கைகளில் பெல் நிறுவன விளம்பரம் வரும்போது, பொறியியல் மாணவர்கள் விண்ணப்பித்து,வேலைவாய்ப்புடன் படிப்பும் பெறலாம்.
பி.இ. முடித்ததும் எம்.பி.ஏ. படிக்க விரும்புவோர் எம்.பி.ஏ. இன் எனர்ஜி மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. இன் பவர் பிளான்ட் மேனேஜ்மென்ட் படிக்கலாம். இவை நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ளன. தமிழகத்தில் நெய்வேலி உள்பட இந்தியாவில் 9 இடங்களில் இக்கல்வி நிறுவனம் உள்ளது. ஓராண்டு படிப்பான பி.ஜி. இன் தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீயரிங் படிப்பதன் மூலமும் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம்.
இந்திய அளவில் உள்ள கல்லூரிகளில் சேர GATE தேர்வும், தமிழக அளவில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் சேர TANCET தேர்வும் எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு மார்ச் மாதம் விண்ணப்பம் அளிக்கப்படும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்வு நடக்கும். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் உயர்கல்வி வரை படித்தவர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எனவே, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டப் படிப்புடன் மேற்கண்ட மேற்படிப்புகளையும் படிப்பவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக சம்பளத்தில் உடனடியாக வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்திய ரயில்வேயில் வேலை வேண்டுமா?

நீங்கள் ஐ.டி.ஐ. படித்தவரா? இந்திய ரயில்வேயில் வேலை செய்ய உங்களுக்கு ஆசை இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தச் செய்தி. இந்திய ரயில்வேயில் 26,567 காலிப் பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 1,666 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காலிப் பணியிடங்கள்
மொத்தம் உள்ள காலிப் பணியிடங்களில் பொதுப் பிரிவினருக்கு 13,464 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 6,521 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 4,122 இடங்களும், பழங்குடியினருக்கு (எஸ்.டி.) 2,460 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.07.2014 தேதி அன்று 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவின ருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

இதர விவரங்கள்
பணி : அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) மற்றும் டெக்னீசியன்.
சம்பளம் : ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்ட் டி.வி. மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் போன்ற பிரிவுகளில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து மற்றும் திறனறித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 17.02.2014 மாலை 5.30 மணி.
தேர்வு நாள் : 15.06.2014
விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை www.rrbchennai.gov.in, www.rrbbnc.gov.in, www.rrbthiruvananthapuram.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பட்டமேற்படிப்பால் சாதிக்கலாம்

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி 

வாழ்க்கையில் சாதிக்க கூடிய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் பிரிவில் பல்வேறு பட்ட மேற்படிப்புகள் உள்ளன. இப் படிப்புக்கு குறைந்த அளவு வேலைவாய்ப்பே உள்ளது என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பல்வேறு துறைகளில் இப் படிப்புக்கு சிறந்த எதிர்காலம் நிறைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. மற்றும் எம்.டெக். பட்ட மேற்படிப்புகளில் ஹை- வோல்டேஜ் இன்ஜினீயரிங், எனர்ஜி இன்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. ரினிவபல் எனர்ஜி இன்ஜினீயரிங், நியூக்லியர் இன்ஜினீயரிங் பட்ட மேற்படிப்புகளை சாஸ்தா, எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. பாபா அகாடமி ரிசர்ச் சென்டர் ஓராண்டு பட்டமேற்படிப்பாக நியூக்லியர் இன்ஜினீயரிங் படிப்பை அளிக்கிறது.
எம்.இ. மற்றும் எம்.டெக். பட்ட மேற்படிப்புகளில் பல்வேறு சிறப்பு பாடப்பிரிவுகள் உள்ளன. அதில், பவர் எலக்ட்ரானிக் அண்ட் டிரைவ்ஸ், பவர் சிஸ்டம்ஸ் எலக்ட்ரிக்கல் மிஷின்ஸ் அப்ளைடு தி எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளை எடுத்து படிப்பதன் மூலம் பணி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
நேஷனல் பவர் பிளான்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு குறைந்தபட்ச பட்ட மேற்படிப்புகள் வழங்குகின்றன. எலக்ட்ரிக்கல் பில்டிங் சர்வீசஸ் படிப்பு சுய வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்பாக உள்ளது.
வீடு, கடை, நிறுவனங்களில் மின்சாதனப் பொருட்களின் உபயோகம் அதிக அளவு உள்ளது. எனவே, எலக்ட்ரிக்கல் இன்ஸ்டாலேஷன் இன் பில்டிங் அண்டு அவுட்டோர் படிப்பு உடனடி வேலைவாய்ப்பை அளிக்கிறது. பி.ஜி. புரோகிராம் டிப்ளேமோ இன் எனர்ஜி எஃபிசியன்ஸி, எனர்ஜி ஆடிட் அண்ட் மேனேஜ்மென்ட் படிப்புகள், சி.இ.இ.எஸ். சர்ட்டிபிகேட் கோர்ஸுக்கு தகுதியானது. இப் படிப்பின் மூலம் எனர்ஜி எக்ஸ்பர்ட்டாகவும், எனர்ஜி கன்சல்டன்ட், எனர்ஜி ஆடிட்டர், எனர்ஜி மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் செல்ல இயலும். நியூக்லியர் எனர்ஜி இன்ஜினீயரிங்குக்கு அதிக அளவு தேவை உள்ளது. குஜராத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் நியூக்லியர் இன்ஜினீயரிங், தீனதயாள் பண்டிட் பெட்ரோலியம் யுனிவர்சிட்டி மூலம் நியூக்லியர் எனர்ஜி பட்ட மேற்படிப்பை வழங்குகிறது. எனர்ஜி பவர் செக்டாரில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெறுவதன் மூலம் எனர்ஜி ஆடிட்டர் கோர்ஸ் எடுக்க முடியும்.
பொறியியல் பட்டப் படிப்பு முடித்த பிறகு ஆட்டோமோடிவ் எலக்ட்ரிக்கல்- எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் பகுதிநேரமாக படிக்கலாம். பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடியில் இப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. சோலார் எனர்ஜி பணிக்கான தேவை அதிக அளவு உள்ள நிலையில், தனியார் நிறுவனங்களில் சேர்வதிலும், சுயதொழில் செய்வதிலும் வாய்ப்பு உள்ளது. குஜராத் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோலார் எனர்ஜி கல்வி நிறுவனத்தில் இதற்கான பட்ட மேற்படிப்புகளை அளிக்கின்றனர். இதில் அட்வான்ஸ் சர்ட்டிபிகேட் இன் சோலார் எனர்ஜி 6 மாத பட்ட மேற்படிப்பு உள்ளது. எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பிலும் பவர் மேனேஜ்மென்ட் எடுத்து படிப்பதால், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்.

3 February 2014

TANCET 2014 Syllabus – Exam Pattern for ME MBA MCA M.Tech Syllabus 2014

TANCET 2014 Syllabus- The Tamil Nadu Common Entrance Test (TANCET) 2014 is the entrance exam for taking admission of PG courses M.E/MBA/MCA/M.Arch/M.Plan/M.Tech courses organized by Anna University. 



Junior Engineer (Civil & Electrical) – 23 Posts from Reserve Bank of India

RBI Recruitment 2014 – Apply Online for Junior Engineer Posts: Reserve Bank of India (RBI) invited applications for the recruitment of 23 Junior Engineer (Civil/ Electrical) Posts. Eligible candidates can apply Online from 30-01-2014 to 20-02-2014. Other details like age limit, educational qualification, selection, application fee and how to apply are given below……

RBI Vacancy Details:
Total No of Posts: 23

Name of the Post: 
I. Junior Engineer (Civil):
1. East: 01 Post
2. West: 01 Post
3. North: 04 Post
4. South: 03 Posts
II. Junior Engineer (Electrical):
1. East: 01 Post
2. West: 02 Posts
3. North: 07 Posts
4. South: 04 Posts



Age Limit: Candidates age should be 20 years to 30 years as on 01-02-2014 and the candidates born not earlier than 02-02-1984 and not later than 01-02-1994. Age Relaxation is applicable for SC/ ST/ OBC/ PWD/ EXS/ Widows/ divorced women candidates.

Educational Qualification: Candidates should have minimum 3 years Diploma in Civil/ Electrical Engineering with minimum 65% of marks (55% for SC/ ST/ PWD) or Degree in Civil/ Electrical Engineering with 55% marks (45% for SC/ ST/ PWD) with 2 years of experience in relevant discipline.

Selection procedure: Candidates are selected based on test/ interview.

Application Fee: Candidates have to pay Rs.600/- for General/ OBC category and Rs.50/- for SC/ ST/ PWD/ Ex- Serviceman candidates.

Online Mode: After ensuring the correctness of the particulars of the application form, candidates are required to pay the fees through the payment gateway integrated with the application and the payment process can be made by using Master/ Visa debit/ credit cards or internet banking. On successful completion of the transaction, an e-receipt will be generated. Candidates are required to take a print out of the e-receipt.

Off Line Mode: Candidates need to pay the fee through system generated fee payment Challan form at any branches of Bank of Baroda/ Bank of India/ Bank of Maharashtra/ Indian Overseas Bank/ Central Bank of India/ Punjab National Bank/ United Bank of India.

How to Apply: Eligible candidates can apply through the website www.rbi.org.in from 30-01-2014 to 20-02-2014. Candidates should take the print out of the system generated application form for future use and have to submit caste certificate, age proof and originals at the time of interview.

Online Instructions:
1. Candidates should have a valid E-mail ID, Scan the photograph and signature of the candidates before filling online application.
2. Log on to website www.rbi.org.in
3. Click Apply Online button.
4. Fill all the mandatory details and upload scanned copy of recent passport size photograph and signature.
5. Make the payment through online or offline mode as mentioned above.
6. After filling all the payment details, submit error free application form by clicking on submit button.
7. After successful submission of application form, system will generate e-receipt and application form, take print out of it for further use.
8. Registration number and password will be generated by the system which must be noted down for further assistance.

Important Dates:

Starting Date of Online Application: 30-01-2014
Last Date of Online Application: 20-02-2014
Date of Closure for Edit: 20-02-2014.
Starting Date for Payment of Fees-Online: 30-01-2014
Last Date of Payment of Fees-Online: 20-02-2014
Starting Date for payment of fees at Bank Branches (Off Line): 01-02-2014.
Last date of Payment of Fees – Off-Line: 25-02-2014.
Last Date for Reprint of the Application: 13-03-2014.



Project Associate Post from IIT, Delhi

IIT Delhi Recruitment 2014 – Walk in for JRF Positions: Indian Institute of Technology (IIT), Delhi has posted a notification for the recruitment of Junior Research Fellow (JRF) positions to work on project titled “In Vitro Assessment of the effects of Commercially Available Nutraceuticals and Oligosaccharides as Probiotics on the Human Gut Micro flora”. Eligible candidates can attend the interview on 04-02-2014 by 05.00 PM. Other details like age limit, educational qualification, selection process, how to apply are given below…

IIT Delhi Vacancy Details:

Name of the Posts: Junior Research Fellow


Venue: Committee Room of DBEB, IIT Delhi.


Educational Qualification: Candidates must possess 1st Class B.Tech/ M.Sc in appropriate discipline or CGPA of minimum 8 (10 point scale) with six months experience in Applied/ Environment Microbiology and qualified in NET/ GATE.

Selection Process: Candidates will be selected based on performance in interview.

How to Apply: Eligible candidates may attend the interview along with formal application, Biodata giving complete information regarding educational qualifications & work experience, recent passport size photograph, attested copies of certificates and mention advertisement No., Title of Project and Post applied for on top left side of application, addressed to Assistant Registrar (IRD), IIT Delhi, Hauz Khas, New Delhi-110016 on 04-02-2014 by 05.00 PM.

Date & Time of Interview: 04-02-2014 by 05.00 PM.

121 Indian Army Technical Vacancy


Last Date for Submission of Application : 31 March 2014

31 January 2014

TOP BANKS OFFERING EDUCATIONAL LOAN TO ENGINEERING STUDENTS

There are several top banks for educational loans which are provided to the engineering students in India. People approach different banks offering loans for engineering because of the increasing expenditure in this educational sector. The basic documents which are required for applying for such loans can be stated as follows:

1. Confirmation of admission of the student under a properly affiliated engineering college in India
2. Age proof
3. Residential proof
4. Agreement of parents or guardians with the student
5. The performance report of the student at secondary and higher secondary level examination
6. Income certificate of the parents, IT files and other proofs of steady source of salary

Banks offering educational loan to engineering students are summarized below:

1. State Bank of India Education Loan Scheme: This government bank provides educational loans for engineering students under Diploma or technical Degree. The college must be approved under AICTE/Govt. /UGC. Students studying at IIT and IIM can also apply for this loan. A maximum amount of Rs.10 Lakhs can be accepted by this bank if the student wants to study engineering in India. Expenses like tuition fees, caution deposits, examination fees, cost of any two-wheeler, having a maximum amount of Rs.50, 000 are all borne in the loan sanctioned by this bank. The interest rate is applied as per the RBI regulations.

2. Canara Bank educational loan: This bank provides loan to engineering students up to an amount of Rs10.5 Lakhs for studying in India. The interest rate charged by Canara Bank is 10.5% of the base amount.

3. HDFC Bank Educational Loan: HDFC bank offering loans for engineering covers 90% of the entire cost as determined through HDFC. This bank lends a maximum amount of Rs.2 Lakhs. The interest rate charged by HDFC Bank is 14%.

4. UCO Bank: This bank lends up to an amount of Rs.4 Lakhs for pursuing an engineering degree in India. The hostel fees, books or journal expenditures are also covered under this education loan scheme.

5. IBDI Bank Education Loan Scheme: Under this scheme the annual income of the family must be more than Rs.3 Lakhs. The student must secure at least 75% marks in the 12th standard for getting educational loans for engineering students.

6. Vijaya Bank Educational Loan: An amount up to Rs 4 Lakhs is provided to engineering students. The margin is of 25% above the amount of Rs.25,000. Here the mode of repayment is 6 months after completion of the course or 3 months after the students get a job.

ஐஏஎஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

ஜி.மீனாட்சி

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் செயல்படும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஐஏஎஸ் தேர்வை எதிர்கொள்வது குறித்தும் அளித்த பிரத்யேகப் பேட்டி:
அண்ணா மேலாண்மை நிறுவனத்தின்கீழ் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் நடத்தும் இலவசப் பயிற்சியில் சேர என்ன தகுதி வேண்டும்? மாணவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் ஆர்வலர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவும், இருப்பிடமும், பயிற்சியும் இங்கு இலவசம்.
ஆதிதிராவிட பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்றவர்களுக்காக தனித்தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. தமிழக அரசு அவற்றை ஒருங்கிணைத்து ஒரே மையமாக பிப்ரவரி 2000 முதல் நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் நுழைவுத் தேர்வின் மூலம் முதல்நிலைத் தேர்வுக்கு (Preliminary Examination) 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிறகு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி (Main Examination)  அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மெயின் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே மாதிரி ஆளுமைத்தேர்வு (Mock-Interview) நடத்தப்படுகிறது. அவர்கள் புதுதில்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட சலுகைக் கட்டணத்தில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க அனுமதி வழங்கப்படுகிறது.
இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் 800 ரூபாயாக இருந்தது. இப்போது அரசு அதை 2,000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. பிரதானத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் ஊக்கத் தொகையும், ஆளுமைத் தேர்வுக்கு தில்லி சென்று வர 200 ரூபாய் வழிச் செலவுக்கும் அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தில் சேர ஒரு நுழைவுத் தேர்வை நாங்கள் நடத்துகிறோம். பட்டப்படிப்பு முடித்த யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். வெளியிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அரசாங்க அடையாள அட்டை அளிக்கப்பட்டு வகுப்புகளுக்கு வரவும், நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இங்கிருக்கும் நூலகம் போட்டித் தேர்வுகள் எழுத அனைத்து வசதிகளும் கொண்ட அருமையான நிலையமாகும்.  இங்கு 21,000 புத்தகங்கள் உள்ளன. கணினிக்கென்றே தனி அறையும் உள்ளது. இங்குள்ள கருத்தரங்குக் கூடம் குளிர்சாதன வசதி கொண்ட அருமையான அரங்கமாகும்.
இந்த நிறுவனத்திலேயே இரண்டு பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் சிறந்த பேராசிரியர்களும், வல்லுநர்களும் அழைப்புப் பேராசிரியர்களாக தருவிக்கப்படுகிறார்கள். இந்த நிறுவனத்தில் பயின்று வெற்றி பெற்ற அலுவலர்களும் அவ்வப்போது தன்னம்பிக்கையூட்டும் உரைகளை வழங்கி இந்த மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றார்கள்.  தில்லி போன்ற நகரங்களில் பயிற்சி மையம் நடத்தும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணிபுரிகிறவர்களையும் அவ்வப்போது பாடங்களை நடத்தவும், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தவும் பயன்படுத்திக் கொள்கிறோம். மாணவர்களே விருப்பப்படும் நிபுணர்களையும் வரவழைக்கிறோம். சில நேரங்களில் தனியார் நிறுவனங்களில் படிக்கிற மாணவர்களும் இங்கு வந்து வகுப்புகளை கவனிக்க தடையேதும் நாங்கள் விதிப்பதில்லை. தமிழகத்திலிருந்து நிறைய பேர் இப்பணிகளுக்குச் சென்று, நம் பெருமையை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா.


இந்தப் பயிற்சி மையத்தில் எத்தனை பேர் பயிற்சி பெறுகிறார்கள்? எத்தனை பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்?
முதன்மைத் தேர்வுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தயாராவோருக்காக மாதிரி நேர்முகத் தேர்வை (Mock Interview) நடத்துகிறீர்களா?
வருங்காலத் திட்டங்கள் எவை?
பவானி சாகரில் அரசு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற அலுவலர்களுக்கு இரண்டு மாத அடிப்படைப் பயிற்சியும், துணை வட்டாட்சியர்களுக்கு 28 நாட்கள் இடைநிலைப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.
இந்திய வனப்பணி, முதல் பிரிவு போட்டித் தேர்வு போன்றவற்றிற்கும் அறிமுகப் பயிற்சியை நடத்தலாம் என்று பரிசீலித்து வருகிறோம். அது தவிர அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை குழு விவாதமாகவும், கலந்துரையாடலாகவும், ரோல் ப்ளேவாகவும் நடத்தி பயிற்சியை வாழ்க்கையோடும், பணியோடும் தொடர்புபடுத்தும் விதமாக மாற்ற இருக்கிறோம். இப்போது தமிழக அரசு 36.23 கோடி ரூபாய் ஒதுக்கி, பவானி சாகரில் மிகச் சிறந்த பயிற்சிக் கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 
இங்கு பயிற்சியாளர்களுக்கு நல்ல நூலகம், கணினி அறை, விளையாட்டுக் கூடங்கள், கருத்தரங்கக் கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் நான்கு ஐந்து மாதங்களில் இந்தப் பயிற்சி மையம் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பயிற்சி தரப்படாமல் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இங்கும் அழைப்புப் பயிற்சி அளிப்பவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே ஒட்டு மொத்தமாக பயிற்சியின் தரத்தை எல்லா வகைகளிலும் பயனுள்ளதாக மாற்றி வருகிறோம். பயிற்சியாளர்களும் இந்த மாற்றங்களை நேசித்து முழுமையாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் போட்டிகள், படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்தும் சஞ்சிகைகள் போன்றவற்றை ஏற்படுத்தி பயிற்சியை அயர்ச்சியில்லாத அனுபவமாக மாற்றியிருக்கிறோம்.


சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களிடம் தாங்கள் காணும் பொதுவான குறைபாடுகள் என்ன?
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவது எப்படி?  
இத்தேர்வை எழுத குறைந்தபட்ச வயது  21.  பொதுப் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 30.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35.  பொதுப்பிரிவினர் நான்கு முறையும்,  பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 7 முறையும், தாழ்த்தப்பட்டவர் வயது வரம்பு முடியும் வரையும் எழுதலாம்.
இந்தத் தேர்வை எழுதுவதற்கு பொது அறிவிலும்,  நுண்ணறிவிலும் அதிகத் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்.  தற்சமயம் பிரிலிமினரி தேர்வில் ஒருவருடைய ஆராயும் திறனை அறிய சிவில் சர்வீஸ் ‘ஆப்டிடியூட் டெஸ்ட்‘  நடத்தப்படுகிறது.  அதற்கு மொத்த மதிப்பெண்கள் 200.  இரண்டாவது தாள் பொது அறிவு.  அதற்கும் 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இவை மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்.  இதில் சுமார் 10,000 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் அடங்கும்.
மெயின் தேர்வைப் பொருத்தவரை, பொது அறிவுத் தாள்கள் நான்கு  இருக்கின்றன.  அவற்றிற்கு 250 வீதம் 1000 மதிப்பெண்கள் உண்டு.  அடுத்ததாக கட்டுரைத்தாள் ஒன்று உண்டு.  அதற்கு 250 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  ஆறாவதாக ஒரே ஒரு விருப்பப் பாடத்தில் இரண்டு தாள்கள் தலா 250 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன.  இவை அன்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரு தாள் தகுதி பெறுவதற்காக நடத்தப்படுகிறது.  தமிழைப் படிக்காதவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் தேர்வை எழுதலாம்.  இந்தத் தாள்களில் பெறும் மதிப்பெண்கள் ரேங்கை நிர்ணயிக்க எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
முதன்மைத் தேர்வில் முதல் 2 ஆயிரம் இடங்களை பெறுபவர்கள் ஆளுமைத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.  ஆளுமைத் தேர்விற்கு மொத்தம் 250 மதிப்பெண்கள்.
ஆளுமைத் தேர்விலும்,  பிராதனத் தேர்விலும் பெறும் மதிப்பெண்களைக் கூட்டி இறங்கு வரிசையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  முதல் 600 இடங்களைப் பெறுபவர்கள் ஏதேனும் ஒரு பணியை கண்டிப்பாக பெற்றுவிடலாம்.
சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராக வேண்டும் என எண்ணுபவர்கள் பள்ளிக் காலம் தொட்டே செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும்.   பொது அறிவுப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். தகவல் தொடர்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  பொருளாதாரம், கணிதம், அறிவியல், அரசியல், நாட்டு நடப்பு,  அரசியல் அமைப்புச் சட்டம், புவியியல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.  கல்லூரியில் இந்தத் தேர்வு எழுதுவதற்குத் தோதாக இளங்கலைப் படிப்பையோ, இளம் அறிவியல் படிப்பையோ தேர்ந்தெடுக்க வேண்டும்.  பாடப் புத்தகங்களோடு நிறுத்திவிடாமல், நிறைய மேற்கோள் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.  முடிந்தால்  நிறைகலைப் படிப்பை தில்லி போன்ற இடங்களில் தொடரலாம்.  தேர்விற்குத் தயாரவது என்று முடிவு செய்த பிறகு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது படிக்க வேண்டும்.  விடா முயற்சியும் , அர்ப்பணிப்பும், அகலாத கவனமும், மாறாத ஆர்வமும் சேர்ந்தால் வெகு எளிதில் இதில் வெற்றி பெற்றுவிடலாம். 


ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவில் வலம் வரும் இளைஞர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைக் குணங்களாக நீங்கள் கருதுவது என்ன?

தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 300 பேர் ஒவ்வொரு வருடமும் பயிற்சி பெறுகிறார்கள். 2000 முதல் 2012-ஆம் ஆண்டு வரை 432 தமிழக மாணவர்கள் பல்வேறு குடிமைப்பணி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நம்முடைய பயிற்சி மையத்திலிருந்து 2010-ஆம் ஆண்டில் 48 பேரும், 2011-ஆம் ஆண்டில் 47 பேரும், 2012-ஆம் ஆண்டில் 49 பேரும் அகில இந்திய அளவில் உயர்ந்த இடங்களைப் பிடித்து தேர்வு பெற்றிருக்கிறார்கள். இதைப் போன்ற ஒரு மையத்தை தங்கள் மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் வந்து பார்த்தவண்ணம் இருக்கின்றன. ஆந்திரப்பிரதேசத்தில் இருந்தும் இதைப் பார்ப்பதற்காக வருகை புரிய உள்ளார்கள்.

ஆளுமைத் தேர்வுக்கு பயிற்சி அவசியம். எனவே மத்திய தேர்வாணயம் நடத்துவது போலவே நாங்கள் நான்கு ஐந்து முக்கியமான அலுவலர்கள், தனியார் துறையைச் சார்ந்த நிர்வாகிகள், பேராசிரியர்கள், மனநல வல்லுநர்கள் போன்றவர்களைக் கொண்டு அச்சு அசலாக மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்துகிறோம். இதனால் மாணவர்கள் பயமும், பதற்றமும் இன்றி தில்லியில் நடக்கும் ஆளுமைத் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடு குறித்து விரிவாக விவாதிக்கவும் செய்கிறோம். இவையெல்லாம் அவர்களை மெருகேற்றுகின்றன.

அண்ணா மேலாண்மை நிறுவனம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. இங்கு அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு துணை மாவட்ட ஆட்சியர், மாவட்டப் பதிவாளர், வணிக வரி அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், உதவி வனப் பாதுகாவலர் போன்ற அ தொகுதி அலுவலர்களுக்கு ஐந்து வார அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண்மை அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் போன்ற ஆ பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நமது மாநில மாணவர்கள் தகவல் தொடர்புத் திறனை இன்னும் கொஞ்சம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிவில் சர்வீஸஸ் தேர்வு என்பது ஏறத்தாழ 25 பணிகளுக்கு நடத்தப்படுகிற போட்டித் தேர்வு.  இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அயல் நாட்டுப் பணி, வருமான வரி பணி, கஸ்டம்ஸ் பணி, ஆடிட் பணி, போன்ற பல பணிகள் அதில் அடங்கும்.  இந்தத் தேர்வு மூன்று கட்டங்களாக  நடத்தப்படுகிறது.  பிரிலிமினிரி தேர்வு, மெயின் தேர்வு,  பர்சனாலிடி தேர்வு என மூன்று கட்டங்களில் நடத்தப்படும். இத்தேர்வை ஆண்டுதோறும்  10 லட்சத்திற்கும்  மேற்பட்ட பட்டதாரிகள் எழுதுகிறார்கள்.   இந்தத் தேர்வு எழுத குறைந்தபட்ச படிப்பு  பட்டப் படிப்பு.  அதை தொலைத்தொடர்பின் மூலம் பெறுவதில் ஆட்சேபணை இல்லை.  பட்டயப் படிப்பை முடித்தவர்கள், இதை எழுத முடியாது.  

உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, தூய்மை, கனிவு, கருணை, மக்களோடு பணியாற்றும் ஆர்வம், பணத்திற்கு ஆசைப்படாத எளிமை, எப்போதும் மற்றவர்கள் சந்திக்கும் அளவு இயல்பான வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட மாணவர்கள் காத்திரமான அலுவலர்களாகப் பரிமளிப்பார்கள்.

30 January 2014

ஐஐடியில் கோடைகாலப் பயிற்சி

என்ஜினீயரிங், அறிவியல், கலை மற்றும் சமூக அறிவியல் மற்றும் மேனேஜ்மெண்ட் படிப்பு  மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கோடைகாலப் பயிற்சி வழங்குகிறது சென்னை ஐஐடி.

பொறியியல் பாடங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளைப் படித்து வரும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி கோடைகாலப் பயிற்சியை அளிக்க உள்ளது. பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் ஒருங்கிணைந்த எம்இ, எம்டெக் படிக்கும் மாணவர்களும் இந்தக் கோடைகாலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். எம்இ, எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ, எம்பிஏ ஆகிய படிப்புகளில் முதல் ஆண்டு படிக்கும், பல்கலைக்கழக அளவில் சிறந்து விளங்கும் மாணவர்களும் இந்தக் கோடைகாலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். கருத்தரங்குகளில் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தாலோ, புராஜக்ட் செய்திருந்தாலோ புதிய  சாதனங்களின் வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்றிருந்தாலோ, கணித ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பிடம் பெற்றிருந்தாலோ அல்லது விருது பெற்றிருந்தாலோ அதுகுறித்து மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே,  ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் இந்தக் கோடை காலப் பயிற்சியில் சேர முடியாது.

ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், அப்ளைடு மெக்கானிக்ஸ், பயோடெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் டிசைன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல் என்ஜினீயரிங், ஓசன் என்ஜினீயரிங் ஆகிய துறைகளின் மூலம் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. அத்துடன், இயற்பியல், வேதியியல், கணிதம், கலைப்புலம் மற்றும் சமூக அறிவியல் துறை, மேலாண்மைக் கல்வித் துறை போன்ற துறைகளும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றன. எனவே, இதுபோன்ற துறை மாணவர்கள் இந்தக் கோடைகாலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இரண்டு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சி வருகிற மே 16-ஆம் தேதியிலிருந்து ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு ஏற்ப இத்தேதியில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் கோடை காலப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரிடமிருந்து பரிந்துரைக் கடிதத்தையும் வாங்கி இ¬ணைத்து அனுப்ப வேண்டும். சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கோடைகாலத்தில் பயிற்சி எடுக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்குwww.iitm.ac.in

இ-மெயில்: sfp2014@wmail.iitm.ac.in

Project Assistant Post from NIT, ROURKELA

Date of the Interview : 03.02.2014

Click here for more details